Skip to main content

வெற்றிடமாய் ஒரு சித்திரம்....




வெற்றிடமாய் இருக்கும் இந்த நிமிடங்கள்
எனக்கே எனக்கானவை...

கவிதை வடிக்க எண்ணி
காகிதம் தொட்டால்
மை தொட்ட எழுதுகோலின்
எழுத்து கூட வெள்ளையாய்....

என் வண்ணங்கள் கூட
எண்ணத்தின் வழியை
தொடமுடியாமல்
எட்டிச் சென்றுவிட்டன....

ஒன்றுமில்லா ஒற்றை வீட்டுக்கு
என்னை இழுத்து செல்லும் அந்த பாதை
சருகுகளின் ஒதுக்கங்களில் ஒளிந்திருக்கிறது
கால்கள் நடை நிறுத்த கட்டளையிட
மனமோ பிரபஞ்சத்தின் மையம் நோக்கி...

சிலந்தியின் முணுமுணுப்பை தாண்டி
காய்ந்து போன ஓலைகளின் ஓட்டைகளின் வழியே
வெளிச்சங்களை சாப்பிட்டு கொண்டிருக்கும்
மேடான மண்தரையின் மீதமர்ந்து
காகிதம் தொட்டால்
அதில் வண்ணமாய் ஒரு கவிதை...
எழுத்தாய் ஒரு சித்திரம்...

காத்திருங்கள்...
வெறுமையின் வீட்டையும்
என் வசிப்பை வாசிக்கும் அளவுக்கு
மாற்றிவிட்டு வருகிறேன்....


Comments

  1. படத்திற்கேற்ற கவிதையா...?
    இல்லை...
    கவிதைகேற்ற படமா...?
    உங்களுக்கே ஆச்சரியமாக இல்லை...?

    காத்திருக்கிறேன்...
    சீக்கிரம் வந்துடுங்க...
    இன்னும் ரசிக்க வேண்டும்...

    ReplyDelete
  2. நல்ல கவிதை, வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கண்டிப்பாக அகிலா.... வெறுமையின் வீட்டையும் கவிதையை ரசிக்க வைக்கும் திறமை உங்கள் கவிதைக்கு உண்டு...

    ReplyDelete
  4. சாதாரண மனநிலையில் வெறுமை என்னும் சொல் அந்த வெறுமையை நோக்கி நம்மை செலுத்தும் உந்துதலாக மாற்றிவிடும் அதை நேர்மறையாக மாற்றி சித்திரம் வரைந்து அழகோவியமாக மிழிரட்டும் ..உங்கள் எண்ணங்களும் கவிதைகளும்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்...நன்றி ராஜன்...

      Delete
  5. வசிப்பையும் வாசிக்கும் அளவுக்கு.... மிகமிக ரசித்தேன் இந்த வரிகளை! உங்களின் கவித்திறன் நிச்சயம் அதைச் செய்யும்! பிரமாதங்க அகிலா!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி கணேஷ்...

      Delete
  6. கவிதை சிந்தனைக்கு கவிதை அருமையாக இருக்கு

    ReplyDelete
    Replies
    1. அதற்கு தோதாய் படமும் வெகு அருமை

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி