Skip to main content

ஆண்கள் பாவம்தான்....


பெண்ணின் நியாயங்கள்....




தோசைக்கு அரைத்திருப்பாள் 
ஆனால் சப்பாத்தி சுடுவாள் - கேட்டால் 
மருமகளுக்கு பிடிக்கும் என்பாள்...
மருமகளை பிடிக்காவிட்டால் அவளையே 
கேட்டுக்கு வெளியே நிறுத்திவிடுவாள்... 

உங்க தங்கச்சிக்கு வரன் பார்த்து 
கட்டி வச்சது போதாதா 
அவ பெண்ணுக்குமா என்பாள் 
'அண்ணி' என்ற அன்பு குரலில் 
அவளுக்கு நம்மளை விட்டா யாரு என்று 
இவளே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாள்...

தங்கம் விக்கிற விலைக்கு 
இனி தங்கமே வாங்க மாட்டேன் 
இருப்பதே போதுமென்பாள் 
மறுநாளே டிவியில் பார்த்த தள்ளுபடிக்காக 
ஒரு காது தோடாவது எடுத்து வருவாள் 

'மூட்டுவலி யார் காதில் விழுது' என்பாள் 
டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி வந்தால் 
'நேத்துதானே எண்ணெய் போட்டேன் 
ஒன்னையும் கவனிக்கிறதில்லை' என்பாள் 

ஆண்கள் பாவம்தான்...

தனக்குத்தானே அவள் பேசிக்கொள்வதை எல்லாம் 
தன்னிடம்தான் சொல்கிறாள் போல என்றெண்ணி 
அவளை அசத்த முயற்சி செய்ய, 
அவளோ அவ மனசில என்ன நினைக்கிறாளோ 
அதை மட்டுமே அவன் நிறைவேற்ற வேண்டும் 
என்று ஆசைபடுவாள் என்பது 
இவர்களுக்கு தெரியவா போகிறது.... 

ஆண்கள் பாவம்தான்....




Comments

  1. இப்போதாவது உண்மையை சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா....எப்போதாவது இப்படி....

      Delete
  2. நன்றி....பதித்திருக்கிறேன்

    ReplyDelete
  3. நன்றி....பதித்திருக்கிறேன்

    ReplyDelete
  4. உண்மைதான் பாவப்பட்ட ஜென்மெங்கள் ஆண்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....சில சமயங்களில் மட்டும்....

      Delete
  5. அப்பாடா... ஒருத்தரிடமிருந்தாவது ஒரு சின்ன வெகுமதி கிடைத்தது...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...என்ன சந்தோஷம் தனபாலனுக்கு....Enjoy...

      Delete
  6. பெண்களின் அன்புள்ளத்தை
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ஆண்கள் பாவம் இல்லை.
    இதையெல்லாம் தெரிந்தும்
    கண்டும் காணாதது போல் இருப்பார்கள்.

    அதையும் ஒரு கோர்வையாக நீங்கள் எழுதி இருக்கலாம் அகிலா மேடாம்.

    ReplyDelete
    Replies
    1. மஞ்ச தண்ணி தெளிசிட்டு ஆடு வெட்டுறதில்லையா?...கொஞ்சம் சந்தொஷபட்டுகிட்டும்...அப்புறமா பார்த்துக்கலாம் அருணா...

      Delete
  7. ஒரு பெண் ஆண்களைப்பற்றி பரிதாபப்படுவது புல்லறிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் கொஞ்சம் நாங்க கவனிக்கனுமில்லையா?

      Delete
  8. மற்ற எல்லாம் எனக்கு அறிமுகமில்லை .ஆனால் கடைசியில் சொன்னீர்களே பெண் மனதில் என்ன நினைப்பாளோ அதை ஆண் செய்ய வேண்டுமென நினைப்பாள் என்று அது நூற்றுக்கு நூறு சரி . நம் எண்ணங்களும் அவர்களின் செயல்பாடுகளும் வேறு வேறு என்பதால் இது நிறைவேற சாத்தியமே இல்லை அதனால் வரும் அன்புச் சண்டைகளுக்கு குறைவே இல்லை. நன்றி அகிலா. என்னை ஒரு சுய பரிசோதனை செய்ய உதவியதற்கு

    ReplyDelete
  9. என் சுய பரிசோதனை முடிந்ததால்தானே இப்படி எழுத முடிந்தது எழில்.....நன்றி...

    ReplyDelete
  10. நம் மனதில் நினைப்பது அவர்களுக்கு எப்படி தெரியும் அகிலா? முதலிலேயே சொல்லிவிடவேண்டும்: நாங்கள் வேண்டாம் என்றால் வேண்டும்; வேண்டும் என்றால் கட்டாயம் வேண்டும்;
    பாவம் ஆண்கள் தான்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா....சூப்பர் மேம்...கடைசி வரை நாம் இப்படியே இருப்போம்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி