Skip to main content

ஆதாயம் தேடும் பெண்களும்.....


அவதிப்படும் அண்ணன்களும்...






   பெரும்பாலும் பெண்கள் சுயநலவாதிகள்தான். அதை நானே மறுக்க முடியாது. பிறந்த நிமிடத்தில் இருந்தே இப்படித்தானோ என்று யோசிக்க வைத்துவிடுவார்கள். நெருங்கிய தோழிகளிடம் கூட தனக்கு வேண்டியதை மறைத்து வேண்டாததை சொல்வது, நட்பை தன் விருப்பு வெறுப்புக்காக குழி தோண்டி புதைப்பது, தனக்கு ஒரு ஆபத்து என்றால் தன் ஆண் நண்பர்களை வீட்டில் போட்டு கொடுப்பது,  தன அப்பா, அம்மா, அண்ணன், கணவன் என்று ஒருவர் விடாமல் தன சுயநலத்துக்கு பயன்படுத்தி கொள்வது என்று ஏக நல்ல குணாதிசயங்கள் பெண்களுக்கு உண்டு.

      ஆட்டோ ஓட்டும் அவனை எனக்கு பல வருட பழக்கம். அவனுக்கு தகப்பன் இல்லை. தாயும் ஒரு தங்கையும்தான். அவனுக்கு வரும் வருமானத்தில்தான் தங்கைக்கு நகை 15 சவரன் போட்டு கல்யாணமும் அதன் பிறகு இரண்டு பிரசவமும் பார்த்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக கடன் வாங்குவதும் அதை அடைப்பதுமாக இருந்து நொந்து நூடுல்ஸ் ஆகி போன ஒரு பாசக்கார அண்ணன் அவன். 

   இப்போது அவனுக்கு 38 வயது. திருமணத்திற்கு பெண் பார்க்க இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். வயதின் காரணமாக பல வரன்கள் தட்டி போக,  ஒரு வரன் மட்டும் கூடிவர ஏக கனவுகளுடன் இவனும் காத்திருக்க,  இவனின் தங்கை மட்டும் பெண் அழகில்லை என்று தட்ட பார்க்க, இதுவே போதும் என்று இவனின் அம்மா சொல்ல சம்மதித்திருக்கிறாள். 

    நிச்சயம் பண்ணலாம் என்று பெண் வீட்டார்கள் சொல்ல, 'அதற்கு அவசரம் வேண்டாம் என் இரண்டாவது பையனின் காது குத்து முடியட்டும். அப்புறம் பார்க்கலாம்' என்று இழுத்தடிக்கிறாள். காது குத்து என்றால் 20000 ரூபாயாவது செலவு ஆகும். கடன் வாங்கி அதை அடைத்து இவன் எப்போது திருமணம் செய்வது. இதைவிட பெரிய கூத்து என்னவென்றால் 'உனக்கு கல்யாணம் முடிந்தாலும் எனக்கும் என் குழந்தைகளுக்கும் செய்ய வேண்டியதை செய்து கொண்டிருக்க வேண்டும்' என்று நம் பாரம்பரிய கலாசாரதிற்கே உரிய சத்தியத்தை செய்ய சொல்கிறாளாம்.  மன உளைச்சலும் வேதனையுமாக கல்யாணமே வேண்டாம்னு அவன் சொன்னது என்னை ரொம்ப பாதித்தது.

      'உன் அம்மாவும் உன் திருமணத்தை ஆதரிப்பதால், யோசிக்காமல் திருமணம் செய்து கொள். வருகிறவளும் இருக்கிறவளும் இருவருமே சுயநலவாதிகள் தான். அவர்களே அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து கொள்வார்கள். நீ கண்டு கொள்ளாமல் உன் வேலையை மட்டும் பார்.' என்று அவனுக்கு ஏகப்பட்ட அறிவுரை - நல்லதா கெட்டதா என்று மட்டும் கேட்காதீர்கள் - கூறி அனுப்பினேன். கொஞ்சம் தெளிந்திருந்தான். 

    இந்த வயதை தப்பவிட்டால் அவன் என்றுதான் குடும்பஸ்தன் ஆவது? அவனுக்கும் துணை, வாரிசு எல்லாம் வேண்டாமா? செய்துகொண்டே இருக்கும் அண்ணன் என்றால் சாகும்வரை உறிஞ்சலாமா? பெரும்பாலான பெண்களின் இந்த சுயநலம் என்னை வெட்கப்பட வைக்கிறது.

      தன் பிரசவ சமயத்தில் தாயை மாமியாரை பயன்படுத்தி கொள்வது அதன் பின் அடித்து விரட்டாத குறையாக வெளியே தள்ளுவது நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது. இந்த மாதிரி பெண்கள் திருந்துவது மிக கடினம். திருத்துவதும் கடினம். 

    இந்த 'பாசமலர்' அண்ணன் தங்கை எல்லாம் திரைக்குதான் ஒத்து போகும். நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் சுயநலமே ஓங்கி நிற்கும்.


டிஸ்க் :   விதிவிலக்குகளும் இருக்கலாம். இல்லையென்று நான் சொல்லவில்லை.....











Comments

  1. உண்மைதானோ? பாசமலர் சினிமாவில் மட்டும்தான் என்று சொன்னது. ஆனால் உண்மையில் பாசமுள்ள அண்ணன் தங்கைகள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. டிஸ்க் போட்டிருக்கேனே விச்சு....

      Delete
  2. முதல் பாரா மொத்தமும் சத்தியமான நிஜம்
    ஒன்றிரண்டு பேர் சரியாக இருக்க முயன்றாலும்
    உடன் இருக்கும் பெண் உறவுகள்
    அவர்களை அப்படி இருக்க விடுவதில்லை
    எனக்குத் தெரிய கணவனைஇழந்த தங்கை தனக்கு
    பிற்காலத்தில் பாது காப்பு வேண்டும் என்பதற்காக
    தன் தம்பிக்கு மன நிலை கொஞ்சம் சரியில்லாத பெண்ணாகப் பார்த்து
    திருமணம் செய்துவைத்ததையெல்லாம பார்த்திருக்கிறேன்
    படிக்க கஷ்டமாக இருந்தாலும்
    இதுதான் யதார்த்தம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறி இருக்கும் விஷயம் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது....பெண்களின் பிடிவாதங்களும் சுயநலங்களும் ஆண்களைதான் வெகுவாக பாதிக்கின்றன.....நன்றி ரமணி....

      Delete
  3. //இந்த 'பாசமலர்' அண்ணன் தங்கை எல்லாம் திரைக்குதான் ஒத்து போகும். நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் சுயநலமே ஓங்கி நிற்கும்.//

    unmai.. vaalththukkal

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன்......

      Delete
  4. ///வருகிறவளும் இருக்கிறவளும் இருவருமே சுயநலவாதிகள் தான். அவர்களே அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து கொள்வார்கள். நீ கண்டு கொள்ளாமல் உன் வேலையை மட்டும் பார்.//

    வாவ்....மிக சரியான அறிவுரை அகிலாம்மா. பாராட்டுக்கள் உங்களுக்கு . நல்ல மனதில் இருந்துதான் நல்ல எண்ணம் பிறக்கும் என்பதை உங்கள் அறிவுரை நிருபிக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...நல்ல மனது, நல்ல எண்ணம்....
      உங்களை support பண்ணி எழுதியதலா.....
      உண்மையைத்தான் எழுதி இருக்கிறேன்...நன்றி....

      Delete
  5. தன் குழந்தைகள் பெரியவர்களாகும் வரை மாமியாரைப் பராமரித்துக் கொண்டு, குழந்தைகள் வளர்ந்ததும் விரட்டி விட்ட மருமகளைக் கண்டிருக்கிறேன் நான். அந்த நண்பருக்கு நீங்கள் சொன்ன அறிவுரை மிகமிகச் சரியானது தோழி!

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் பெரிதாகும் வரையாவது பார்த்தார்களே...
      இப்போதிருக்கும் பெண் பிள்ளைகள் பிரசவம் முடிந்து தான் சற்று நிமிர்ந்த உடனேயே துரத்திவிடுகிறார்கள்....
      உங்கள் பகிர்வுக்கு நன்றி கணேஷ்....

      Delete
  6. மனிதர்கள் எல்லாருமே ஓரளவு சுயநலவாதிகள்தான். சிலர் இப்படி மிஞ்சிப்போய் விடுகிறார்கள். இல்லையென மறுக்க முடியாது.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி