Skip to main content

'தவ்வை' நாவல்

 தவ்வை நாவல் 





கொரொனா காரணமாக வெகு மாதங்களாக வெளிவர முடியாமல் தாமதமான என்னுடைய முதல் நாவல் தற்போது வெளிவந்துள்ளது. 

டிஸ்கவரி புக் பேலசின் வெளியீடாக வந்துள்ளது. 

விலை ரூ 250 மட்டும்.. 

டிஸ்கவரியின் ஆன்லைன் லிங்க் இதோ : 

தவ்வை 

இங்கு சென்று புத்தகம் பெற்றுக்கொள்ளலாம். 


தவ்வை என்றால் கொற்றவை, பெண் தெய்வம். 

என்னுடைய முன்னுரையில், 


"பிட்டம் பருத்து, கைகள் பலவுடன் நிற்கும் கொற்றவையைக் காணுங்கால், விழைவொன்று கொள்கிறாள். அவளிடத்தில் போகவும் அல்லது அவளாகவே மாறவும் ஆன விழைவு அது. அவள் வாழ்ந்த காலத்திலோ, அவளின் வாழ்விலோ அவளிடத்தில் நாம் வாழ்ந்தால் என்னவெனவும் யோசிக்கிறாள். அவளின் கால் அழல்களுக்கு கொத்தாய் குங்குமமிட்டு, இரத்தப்பிழம்புடன் ஆன உடலை அவளுக்கு அர்ச்சித்து, கச்சை இறுக்கிய அவளின் மார்பகங்களில் பெருங்காடுண்டு உறைந்து வாழ்ந்துவிட இன்றைய பெண்ணும் ஏங்குகிறாள். இந்நிலைதான் பெண்ணென பெரிதாய் சொல்கிறது. இக்கூற்றில் வடிந்து பிறந்த பெண்ணே தவ்வை என்னும் இப்பெருஞ்சித்திரத்தின் நாயகி. "


எழுத்தாளர் திரு சு வேணுகோபால் அவர்களின் அணிந்துரையில், 


"பகிர்ந்துக் கொள்ள முடியாத மன அழுத்தத்தைப் பகிர்ந்துக்கொள்ள செல்லியம்மன் தெய்வத்தை நாடுகிறாள். அந்த செல்லியம்மன் தன்னை ஏற்றுக்கொள்வதாக உணர்கிறாள். எல்லா பெண்தெய்வங்களும் தன்னின் உறவாய் பார்க்கிறாள். கொற்றவை தன் தாயென உணர்கிறாள். பெண்ணின் துயரம் பெண் தெய்வங்களுக்குத் தெரியும். தன்னை ஆதித்தாயின் ஒரு துளியென உணர்கிறாள் தவ்வை. ஆதித்தாயின் வடிவம் ஆற்றல் மிக்கது. மனக்குழப்பத்தால் பீடிக்கப்படாதது. இங்கு தனக்கான ஒரு விடுதலைத் தேடிக்கொள்கிறாள். "


Thavvai Book Link 





வாசித்து கருத்துரைக்கவும்.. 

நன்றி 


~
அகிலா  


Comments

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

பெண்ணென - பெண் படைப்புகளின் நிலை

பெண் படைப்பாளர்கள் தமிழ் இலக்கிய படைப்புலகம் கடல் போன்றது. நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் பாலின, வயது பேதமில்லாமல் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். காதல், சமூகம், அதன் பிரதிபலிப்புகள், இயல்புகள், பிரச்சனைகள் என்று அனைத்தையும் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஒருவரின் முதல் தொகுப்பாக வெளிவரும் புத்தகத்தில் இருக்கும் கவிதைகள் கூட தேர்ந்தேடுக்கப்பட்டவைகளாக வாசிக்க தகுந்தவைகலாக இருக்கின்றன. அதற்கு மூத்த கவிஞர்கள் சில பல விதிமுறைகளுடன் உதவி வருவதையும் காணமுடிகிறது இங்கு. ஒருகாலத்தில் சிற்றிதழ்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள் போன்றவற்றில் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்து சலித்துப்போன கவிஞர்கள், காலமாற்றம் காரணமாக இன்றைய கவிஞர்கள் (வயது வித்தியாசம் இல்லை) இணையத்தின் வழி செய்வதை கண்டு வியப்பதில் ஆச்சரியமில்லை. முகநூலில், இணையங்களில் விருப்ப குறியீடுகளின் மதிப்பீட்டில் வாழும் பெரும்பாலான கவிஞர்கள் அதிலிருக்கும் விமர்சனங்களையும் ஏற்கிறார்கள். அங்கு எழும் 'ஆஹா, ஓஹோ' வுக்கும் ஏமாறுகிறார்கள். தனிதனி குழுக்கள் அமைத்து எல்லோருடைய கவித்திறமைகளையும் வளர்க்கிறார்கள். அவற்றில் நடத்தப்படும் போட்டி