Tuesday, 13 September 2016

பெண்களுக்கு..

விரல்கள் பத்திரம்..




உறவில் ஒரு பெண்மணியை தற்செயலாக நேற்று சந்தித்தேன்.

அவரின் இரண்டு கைகளின் உள்பக்கத்தில் மணிக்கட்டு முதல் வளையல்கள் நிற்கும் இடம் வரை வெளுத்துப் போயிருந்தது. அரிப்பும் ஏற்பட்டு, அவ்வப்போது சிவந்துவிடுவதாகவும், தானே சரியாவதாகவும் கூறினார்.

காரணம் கேட்டால், 'சமைக்கிறேன், பாத்திரம் கழுவுகிறேன் இத்தனை வருஷமாக, அதுதான்' என்று அதற்கு தெளிவாக ஒரு பதிலும் சொன்னார்.


வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு குணம் இருக்கிறது. மாங்கு மாங்கென்று நேர்ந்துவிட்ட மாதிரி சமையல்கட்டில் வேலை பார்ப்பார்கள். அந்த நேரத்தில், தன் கைகள், விரல்கள், முகம், கழுத்து எல்லாம் சேதமாவதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். புத்திசாலித்தனமாக பொறுமையாக அந்த வேலையை செய்யும் தன்மை கிடையாது என்பது வருத்தமான விஷயம்.


சில விஷயங்களை சமையல் செய்யும்போது கவனித்து செய்தாலே போதும்:

1. காய் நறுக்கும்போது, அருவாமனையை தள்ளி வைங்க. கட்டர் பயன்படுத்துங்க. அப்படியே அருவாமனையைப் பயன்படுத்தினாலும், காய்கறிகளுடன் சேர்த்து அழுத்தம் கொடுக்கும் பெருவிரலில் சிறுசிறு கீறல்கள் விழாமல் நறுக்குங்க. நம்ம விரல் அழகை நாமதான் பார்த்துக்கோணும்.

2. தாளிக்கும்போது, சமையல் எண்ணெய் முகத்தில், கழுத்தில், கையின் உள்பாகங்களில் தெறிக்காமல் தள்ளி நின்று வேலை செய்யுங்க. பொட்டு பொட்டாக சுட்டுக்கொண்டு நிற்பதற்கு, இது ஒன்றும் வீரத்தழும்பு இல்லை.

3. பாத்திரம் கழுவும்போதும், அதன் பின்னும் கையில் பாத்திரம் கழுவுவதற்கான சோப்/பவுடர்/திரவம் சுத்தமாய் இல்லாதவாறு கைகளை நன்றாக கழுவுங்க. அப்போதுதான், நான் சொன்ன அந்த பெண்மணியின் கைகளில், இத்தனை வருட அனுபவத்தில், அந்த கெமிக்கல் அரித்திருந்தது போல வராமல் இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால், கைகளையும் கால்களையும் நன்றாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று எங்கும் சட்டம் இல்லை.

நீட்டாக பட்டுபுடவை கட்டி, நகை போட்டு அலங்காரம் பண்ணிக்கிட்டு, இன்னாரின் மனைவி நான், அவர் என்னை இவ்வளவு செல்வசெழிப்பில் வைத்திருக்கிறார் என்று கல்யாணவீடுகளில் காட்டிக்கொள்வதைவிட, நம் உடலை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதையும் கவனிக்க பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

அப்புறம் நம்ம வீட்டு ஆண்கள், அடுத்த பெண்களைப் பார்த்து ஆசைப்படுவதை நிப்பாட்டிட்டு, நம்ம விரல்களையும் பார்த்து, வெண்டைகாய் மாதிரி (அட..அப்போவும் சமையல் பொருள்தான் ஞாபகத்துக்கு வருது.) இருக்குன்னு கொஞ்ச மாட்டாங்களா என்ன..

அவங்களை விடுங்க, நம்ம பிள்ளைங்க நாம நல்லாயில்லைன்னா, ஸ்கூலுக்கு வராதேம்மா, அப்பாவே வரட்டும்னு சொலவதையும் கேட்கிறோம்.

யோசிங்க.. வீட்டில் இருந்தாலும் அழகாய் ஆரோக்கியமாய் இருக்க முயற்சிப்போம். இதை படிக்கும் ஆண்கள் உங்க வீட்டு பெண்களிடம் சொல்லுங்க. 




4 comments:

  1. உண்மை.... கண்டிப்பாக செய்ய வேண்டியவை இவை...

    ReplyDelete
  2. ji you have to include the maintenance of nails properly cut...
    i have seen many educated ladies not cutting their nails properly.. as the result you can find scars on their childrens cheeks poor children...

    ReplyDelete
  3. ji you have to include the maintenance of nails properly cut...
    i have seen many educated ladies not cutting their nails properly.. as the result you can find scars on their childrens cheeks poor children...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....