Sunday, 3 July 2016

அவளின் இறப்பு..





நிறமற்று வழிகின்றன
செத்துவிட்ட மூளைமடல்களிலிருந்து
திரவங்கள்

நினைப்பு சதுக்கத்தில்
வட்டவட்டமாய்
இன்னும்
அவன்

அடைப்பு குறிக்குள்
அத்தனையும் போட்டு
சாத்துவதும் திறப்பதுவுமாய்
காலம்

கண்ணாடி சாளரத்தின்வழி
நெடிதுயர்ந்து தெரிகின்றன
மரங்கள்,
அசோக சக்கரவர்த்தியின்
மடிந்து போன வீரர்களாய்

புத்தம்,
கசக்கிறது
கல்லறை பூக்களில்..

~ அகிலா..

(Dedicated to the departed soul, Swathy, An IT employee, Chennai murdered in the daylight in nungampakkam railway station
)

3 comments:

  1. சிறப்பான அஞ்சலிக் கவிதை!

    ReplyDelete
  2. kavithai neraya pesiyathu...manathodu ...

    நேரமிருந்தால் என் தமிழ் கவிதை blog பக்கம் செல்லுங்கள்... அன்புடன் யாழினி வளன் tamilkavithaigalyazhini.blogspot.in

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....