Friday, 6 November 2015

மேய்ப்பனின் கிடையின் கீழ்..



மேய்ப்பனின் கிடையின் கீழ்
இன்று அனேக ஆட்டுகுட்டிகள்

சிறு ஆடுகளின் குரலுக்குள்,
சொட்டும் பாலின் வாசத்தில், ததும்புகிறது,
தாயினது தாக்கம்

காடுகள் அழிந்து, ஆந்தைகள் அலறும்
கான்கிரீட் நகரத்தையும்,
அதனிடையே ஊடுருவும் இயந்திர இரைச்சல்களையும்,
புல் புசிப்பதாய் பாவனையிருக்கும் இம்மழலைகளின் விளிப்பும்
மந்தை ஆடுகளின் பதில்களும்
மறுத்துவிடுகின்றன

சுற்றுசூழலில்,
நீண்டிருந்த இருண்ட மௌனத்தை,
குறுகிய நிசப்தமென பறைசாற்றுகின்றன,
மேய்ப்பனின் கிடையின் கீழ்
மேயும் இந்த ஆட்டுகுட்டிகள்..


9 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும்

      Delete
  3. ஆழமான வரிகள்

    ReplyDelete
  4. ஆழமான வரிகள்

    ReplyDelete
  5. Hello,
    I have visited your website and it's really good so we have a best opportunity for you.
    Earn money easily by advertising with kachhua.com.
    For registration :click below link:
    http://kachhua.com/pages/affiliate
    or contact us: 7048200816

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....