Skip to main content

பாகுபலி - விமர்சனம் - Bahubali

பாகுபலி



பாகுபலி, இந்த படத்தை நான் இரண்டு முறை பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். 

முதல் முறை சென்னை PVR பிவிஆர் ஸ்க்ரீன்லே. அடுத்த முறை, கோவையில் கங்கா தியேட்டரில்.

ஒன்று, படத்தை படம் எடுக்கப்பட்ட எபக்ட்டோடவே காண்பித்தது. மற்றொன்று, படத்தை சாதாரணமாக்கி காண்பித்தது. இது சம்பந்தமாக கடைசியில் அலசலாம்.

கங்கா தியேட்டரில், moviebuzz விளம்பரம் வழியே, படம் போடும் முன்பே ராஜமௌலி வந்து, இது முதல் பாகம், இரண்டாம் பாகம் விரைவில் வரும்ன்னு சொல்லிட்டாங்க.

ஓகே.. இனி கதைக்குள் போவோம்..


Director RajaMouli  




Bahubali, The Begining

முதல் களம்



படம் தொடங்கியதுமே, மலையடிவாரம். அதில் முழுக்க முழுக்க ஜிவ்வுன்னு தண்ணீர், அருவியாய் கொட்டுது. எங்கே பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர்...நாமளே தண்ணிக்குள்ளே இருக்கிற மாதிரி குளிர்ச்சியாக ஒரு உணர்வு.
பிவிஆர் தியேட்டரில் பின் சீட்டு சிறுவன், ‘இந்த இடம் எங்கேம்மா இருக்குன்னு கேட்டு அவங்க அம்மாவை தொல்லை பண்ணிக்கிட்டு இருந்தான்.

அருமையான படப்பிடிப்பு...சாபு சிரில், மனு ஜகத், செந்தில்குமார் மட்டுமல்லாமல் Visual effects, Camera, animation ன்னு ஒரு டிபார்ட்மென்ட் லிஸ்ட்டே ஓடுது. Credits go to them.

இதற்கு கேமரா மட்டுமே முழு பொறுப்பு அல்ல. இடையிடையே இழையோடும் இசை மற்றும் பாடல் வரிகள் மிக நேர்த்தி. அந்த காட்சிகளைத் தூக்கிப் பிடிப்பது அவைதான். இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கு பாராட்டுக்கள்  



முதலில், ரம்யா கிருஷ்ணன்.....குழந்தையை நீருக்கு மேல் தூக்கிப்பிடித்து... அழுத்தமான கணீரென்ற அவரின் குரல் ஒரு வசியம்தான்.



அடுத்ததாய் கதாநாயகன் பிரபாஸ், இளமையாக அதுவும் அழகாக இப்படி ஒரு கதாநாயகனை தமிழ் சினிமா பார்த்து வெகு நாட்களாகிறது.

அது என்னமோ தெரியலங்க, அவங்க அம்மா பேச்சை கேட்காம அருவிக்கு மேலே ஏற முயற்சித்து, எவ்வளவு உச்சிக்கு போய் கீழே விழுந்தாலும் கதாநாயகனுக்கு மட்டும் அடியே படமாட்டேங்குது. அவ்வளவு வீரனாம்...

அப்புறம், ரோகினி அம்மாவாய்...எல்லா அம்மாக்களுமே இப்போது இளமையாகத்தான் இருக்கிறார்கள்.

இவ்வளவையும் கதை களத்தின் கீழ்படியில் நின்றுதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.


இரண்டாவது களம்  



அடுத்து, கொஞ்சம் மேலே, கதாநாயகனுடன் நீர்மலை, அதுதாங்க அந்த அருவி + மலையோட பேரு, ஏறிப் போனால், அங்கே அழகாய் ஒரு கதாநாயகி, தமன்னா.

இயல்பான ஒரு ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். நம்ம தமிழ் சினிமாவில ‘வேங்கை’ மட்டும்தான் அவர் இதே போல் நடித்த ஒன்று என நினைக்கிறேன்.

இந்த களத்தில், கதாநாயகன் எப்படி இவ்வளவு ஆக்ரோஷம் காட்டும் கதாநாயகியை தன் வசப்படுத்துகிறான் என்பதே முக்கியமாய் காட்டப்பட்டுள்ளது. 

பெண் என்பவள் எளிதில் மயங்கிவிடும் தன்மை கொண்டவள் என்பதை மீண்டும் மீண்டும் சினிமா உலகம் நிருபித்துவருகிறது. இனிமையான ஒரு இசையுடன், புன்சிரிப்புடன், அவளை வன்மமாய் கையாண்டு அவளை பெண்ணாய் உணரவைத்து, அடுத்த நிமிடம் அனைத்தும் அவனால் முடித்துக் காட்டப்படுகிறது.

இது குறித்து, Anna MM Vetticad என்னும் விமர்சகரும் The Rape of Avanthika என்னும் தலைப்பில், தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
(http://www.thehindubusinessline.com/blink/watch/the-rape-of-avanthika/article7433603.ece)

இந்த இரண்டாவது களத்தில் குகை, மரங்கள் செடிகள் என்று கொஞ்சம் பசுமை. கதாநாயகனுடன் சேர்த்து நாமும் இதற்கு முந்தைய தண்ணீரையும் அம்மா அப்பாவையும் மறந்துவிடுவோம்.


மூன்றாவது களம்



அடுத்த களமாய், பனிக் கட்டியுடன் எல்லாம் போராட்டம், அதாவது மலை உச்சிக்கு வந்துட்டோம்ன்னு அர்த்தம்.

அங்கு மகிழ்மதி ராஜ்யம். அடுக்கி வைக்கப்பட்ட கோபுரங்களும் மாட மாளிகைகளும் ஆபரணவாசிகளும் அகங்காரங்களுமாய் அழகாய் படமாக்கப்பட்டுள்ளது.  





இங்கு ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். இவர்களே அதிகமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ராஜ்யத்தில் பொது மக்களையும் அவர்களின் வாழ்வியல் முறைகளையும் ஒரு காட்சியை தவிர, வேறு எங்கும் காட்டப்படவில்லை. எல்லோரும் மாளிகைகளின் உச்சியிலே நின்றே கதையை நகர்த்துகிறார்கள்.

இதன் இடையில் வரும் பாடல்களையும் நடனங்களையும் சொல்லியாக வேண்டும். அதுவும், மூன்று பெண்களுடன் பிரபாஸ் நடனம் வித்தியாசம். வழக்கமாய் high grade குத்துப் பாடல்கள் எல்லாம் C Grade லெவலுக்கு போய்விடும். ஆனால் இதில் தனித்துவம் காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது. பிரேம் ரட்சித், தினேஷ் குமார், சங்கர் என்று நடன அமைப்பாளர்கள், உழைத்திருக்கிறார்கள்.




ராஜ்யம் என்றால், போர் இருக்கும் தானே. போரை காண்பித்திருக்கிறார்கள். பல ஆங்கிலப் படங்களின் கலப்பு இருந்தாலும், போரின் ஆரம்பத்தில் அம்பு விடும் காட்சியில் ஒரு அதிர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சபாஷ் போடலாம்.

முடிவு



அப்புறம், முக்கியமாய் கதையின் இல்லாத ஒரு முடிவை பற்றி பேசுவோம்.

இந்த மாதிரி sequel படங்கள் நிறைய மொழிகளில் வந்திருக்கிறது. spiderman, oz, lord of rings, Die Hard, matrix என்று சொல்லிக் கொண்டே போகலாம். நமது இந்திய மொழியில் இது ஒரு புது திருப்பம்தான், ஒரு படத்தை தொடராக எடுப்பது.

ஆனால், அந்த படங்களில் எல்லாம் ஒரு மனம் நிறையும் முடிவு கொடுக்கப்பட்டிருக்கும். இதில் அதை தவற விட்டுவிட்டார்கள். ரம்யா கிருஷ்ணனிடம் ஆரம்பித்த காட்சி இறுதியில் அவரிடமே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு sequel பிலிம் பார்த்த நிறைவு இருக்கும். இது நமது திரையுலகில் முதல் விஷயம் என்பதால், சற்று விட்டுவிடலாம்.

ஆனாலும், இப்படி ஒன்றை பார்த்திராத மக்கள் சற்று திகைத்து போனார்கள் என்பதே நிஜம். முடித்திருக்கலாமோ என்கிற ஆதங்கம் தியேட்டரிலேயே மக்களிடம் வெளிப்பட்டது.

இவ்வளவுதாங்க படம்...


சிறிய குறை  

இதில் முழுக்க முழுக்க ஒரு வரலாற்று கதையை உருவாக்கி அதற்கு பிரமாண்ட பட்டம் கட்டியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் நிறைய முதன்மைகளை செய்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள்.

1.        250 கோடி செலவு செய்த முதல் படம்.
2.        மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது.
3.    பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்.
4.        23 புகழ்பெற்ற கேமராமேன்
5.        48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
6.       56 துணை இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர்.
7.    தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா. அவர்களின் உடற்பயிற்சிகாக மட்டுமே 1.5 கோடி செலவு செய்துள்ளனர்.
8.        40 கலை இயக்குனர்கள்
9.        90 உதவி கலை இயக்குனர் வேலை செய்தனர்.
10.     2000 தொழிலாளர் வேலை செய்த முதல் இந்திய படம்.
11.     2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்.
12.     20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
13.     125 அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
14.     4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்.
15.   திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம்.
16.     26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்
17.     ஒவ்வொரு காட்சியையும் மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
18.     1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
19.   கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்.
20.     உலக புகழ்பெற்ற சண்டை இயக்குனர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
21.     மின்சார செலவுக்கு மட்டுமே கோடி,
22.     உணவுக்கு 24 கோடி  செலவு செய்த முதல் இந்திய படம்.
23.   சுமார் லட்சம் டன் மரக்கட்டைபழகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
24.     109 நாட்கள் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
25  அதிக ஆடைஆபரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
26.     மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
27.   போரின்போது வில்லன் பேசும்  உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
28.     162 இசை கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
29.     உலக அளவில் அதிக பொருட்செலவில் உருவான முதல் இந்திய படம்.
30.     முதன்முறையாக BBC Tv சேனலில் பேசப்பட்ட ஒரே இந்திய படம்.
31.     ஒரே நாளில் ட்ரெய்லரை 5மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். .

(Courtesy : Wiki)




இதில் ஒரு சிறிய குறை மட்டும்தான் எனக்கு.

முதலில் சொன்னேனே, ரெண்டு தியேட்டரில் படம் பார்த்தேன் என்று. அதில்தான் குறை உள்ளது.

பெரிய multiplex தியேட்டரில் பார்க்கும் போது, நானும் படம் பார்த்து அதிசயித்து போனேன். மேலே சொல்லப்பட்ட 31 பாயிண்ட்டும் படத்தில் இருந்தது. தொழில்நுட்பம் விளையாடி இருக்கிறது.

அடுத்ததாய், சாதாரண தியேட்டரில் பார்க்கும் போது, அந்த அருவி படமாக்கப்பட்ட பிரமாண்டமோ சீட்டு கட்டாய் இருந்த மாட மாளிகைகளோ அற்புதமான போர் காட்சிகளோ எதுவுமே தெரியவில்லை. சாதாரண வரலாற்று படம் பார்க்கும் ஒரு பாதிப்புதான் இருந்தது.

முதலில் பார்த்தப்போதே இந்த விமர்சனம் எழுதியிருந்தால், தவறாய் புகழ்ந்திருப்பேனோ என்ற எண்ணம் உண்டாகியது.

பிரமாண்டங்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். 

நீங்கள் எடுக்கும் படத்தை டவுன், கிராமம் மற்றும் பஞ்சாயத்து, நகராட்சி என அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க முடியுமா என்று நினைத்துப் பாருங்கள். பெரிய பெரிய மால் ஸ்க்ரீன்ஸ் காட்டும் காட்சிகளைப் பார்த்துவிட்டு உங்களை புகழ்ந்து எழுதும் விமர்சகர்களை இந்த பட்டி தொட்டிகளிலும் போய் பார்த்து எழுதச் சொல்லுங்கள்.

நீங்கள் நகரத்துக்காக மட்டும் படம் எடுத்துவிட்டு பிரமாண்டம், பிரமாண்டம் என்று கூக்குரலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றே எனக்குப் படுகிறது.

இதை பெரிதாய் கொள்ளவில்லையென்றால், பாகுபலி திரைப்படம் ஒரு மைல்கல் தான் நமது இந்திய திரையுலகத்திற்கு.

அடுத்த பாகுபலியின் கதையை நம்மால் அனுமானிக்க முடிந்தாலும், அந்த காட்சி அமைப்புக்காகவும் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்காகவும் எதிர்ப்பார்ப்போம்.  

Bahubali, The Wonder..









Comments

  1. பட்டி தொட்டிக்கெல்லாம் முதலில் வருவார்களா பிரமாண்ட "ஙேஞே" ரசிகர்கள்...

    ReplyDelete
    Replies
    1. இவர்களுக்கு ரசிகர்களைப் பற்றிய கவலை கிடையாதே

      Delete
  2. அருமையான விமர்சனம்...
    பட்டி தொட்டிக்கெல்லாம் படமில்லைங்க... இவங்க எடுக்கிறதே மல்டிபிளக்க்ஸூக்காகத்தான்...

    ReplyDelete
    Replies
    1. அப்படி அதுக்காக எடுத்துட்டு எதுக்கு அதை பெரிய விஷயமா பேசிக்கிறாங்கன்னு தெரியல.
      நம்ம ஊர் சினிமா தியேட்டர்கள் எல்லாம், இதற்காகவாவது எதிர்காலத்தில் பிரமாண்டமா மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன் ஆகனும்னு நினைச்சு எடுக்கிறாங்களோ?...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந