Skip to main content

பிள்ளைகளை வாழவைப்போம்..




இன்று ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். அந்த பெரியவருக்கு 70 வயது இருக்கும். அவர் பிரபல கல்லூரியில் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவியும் அவ்வாறே. அவர் மகனைப் பற்றி விசாரித்தேன். அவர் ஒரு freelancer என்று சொன்னார். திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் பேத்தி.

வேறு பெரிய நகரத்தில் போய் வேலை செய்ய அவர் மகனை அனுப்ப அவர் விருப்படவில்லை. ரெண்டு பென்ஷன், அப்புறம் சேமிப்பு, அவ்வப்போது மகனுக்கு கிடைக்கும் வருமானம் போதும் என்றார். தாய் தகப்பன்கிட்டே இருந்தால் போதும். பெரிதாக சம்பாதிக்க எந்த ஊருக்கும் போகத் தேவையில்லை என்றார். மெச்சுகிறேன் அவரின் சுய திருப்தியை, ஆனால் ஒரு சிறு வருத்தத்துடன்.


அவர் பேசும் போது அவர் மகனின் முகமும் மருமகளின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அவர் அவருடைய வாழ்க்கையை மிக அற்புதமாக பெரிய படிப்பு படித்து, டெல்லி எல்லாம் சென்று பெரிய உத்தியோகம் பார்த்து நிறைவடைந்து அமைதி நாடி அமர்ந்துவிட்டார். ஆனால், அவரின் மகனுக்கு எந்த முன்னேற்றமும் எந்த கிரியேடிவிட்டியும் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். இந்த முப்பது வயதில் அவனும் சாதிக்க ஆசைப்படுவான் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை. பணம் சம்பாதிக்க தேவையில்லாவிடினும் தனது மனதுக்கு பிடித்த வேலையை, புதிய முயற்சிகளைச் செய்யவிடாமல் அவனை முடக்குவது எந்த வகையில் நியாயம்?.

அருகில் இருந்தால் மட்டுமே பாசம் என்றும், தள்ளிப் போனால் மறந்துப்போயவிடுவான் என நினைப்பதும், அதற்காக அவர்களை தன் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதும் நிறைய குடும்பங்களில் நடக்கிறது. இந்த வகையில் முதியோர் இல்லங்களை தவிர்க்கலாம் என வயதில் மூத்தவர்கள் நினைக்கிறார்கள்.

நாம் நடமாடும் வரை இது எல்லாம் ஓகே. நாம் முடியாமல் படுக்கையில் விழுந்தால், இத்தனை வருடங்களாய் சேர்ந்திருக்கும் அவர்களின் கோபங்கள் அப்போதுதான் வெளிப்படும். அவரின் இந்த தத்துவத்தில் அந்த அம்மாவிற்கு உடன்பாடில்லை என்பது அவர்களின் பேச்சில் இருந்து புரிந்தது. ஆணின் சில வறட்டு சித்தாந்தங்களால், அவரை எதிர்த்து பேசமுடியாத அவரின் மனைவியும் வெறுப்புக்கு உள்ளாகிறார் என்பதுதான் உண்மை.

கொஞ்சம் நம் குழந்தைகளையும் வாழ வைத்துப் பார்ப்போமே. அதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை என உணருவோம். அப்போதுதான் அவர்களும் நம்மை அன்போடு பிற்காலத்தில் அணுகுவார்கள்.

கட்டாயத்தால் அன்பு வளராது. அன்பால் மட்டுமே அன்பு வளரும். புரிந்து நடப்போம்.




Comments

  1. நிதர்சன உண்மை . பிள்ளைகளின் ஆர்வத்தையும் அறிந்து நடக்கவேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை ...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்..அவர்களின் சந்தோஷத்தை நாம் பறிக்கக்கூடாது

      Delete
  2. உண்மை தான் .ஆனால் அந்த பெரியவர் செய்தது தவறு என்று சொல்வதற்கில்லை

    ReplyDelete
    Replies
    1. சூழ்நிலை கருதி அவர் எடுக்கும் முடிவு அவருக்கு சரியாக இருக்கும், ஆனால் அவரின் மகனுக்கு ?

      Delete
  3. உண்மைதான்! பிள்ளைகள் மனதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமே!

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
  5. ''ஆணின் சில வறட்டு சித்தாந்தங்களால், அவரை எதிர்த்து பேசமுடியாத அவரின் மனைவி'' இதுதானே தமிழ் ஊடகங்களின் மையப் புள்ளி? இதை மாற்ற வேண்டும். எழுத்தாளர்கள் மட்டும் நினைத்தால் முடியாது என்பதே உண்மை. நல்ல பதிவு நன்றி தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சென்டிமெண்ட் என்கிற பெயரில் ஆண்களால் செய்ய முடியாததை பெண்கள் பெயரில் நிறைவேற்றிக் கொள்கிறது இந்த சமூகம். நன்றி உங்களுக்கு

      Delete
  6. இரு தரப்பிலுமே புரிதல்கள், அனுசரித்தல்கள் தேவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு தரப்பின் கைதான் ஓங்கி இருக்கிறது நம் நாட்டில்.

    ReplyDelete
    Replies
    1. நிஜமே...மகனோ தந்தையோ ஒருவரையொருவர் புரிந்து நடந்தால் எல்லாமே சரியாகிவிடும்.

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந