Skip to main content

அரிமா சக்தி விருது - சிறந்த பெண் படைப்பாளர்களில் ஒருவராக நானும்..

 திருப்பூர் அரிமா சக்தி விருது 


சந்தோஷமான விஷயம்...
சிறந்த பெண் படைப்பாளர்களில் ஒருவராக நானும் என் எழுத்துக்காக 'அரிமா சக்தி விருது' பெற்றேன் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சார்பாக படைப்பாளிகளுக்கான விருது டிசம்பர் 25, 2014 அன்று திருப்பூர் அரிமா சங்க வளாகத்தில் வைத்து விழா எடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.





அதில் குறும்படம் / ஆவணப்படத்திற்கான விருதுகளும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கம் சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கியது. விருது பெற்றவர்களை பேச அழைத்திருந்தனர். சென்னையில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் பெண்மணிகள் வந்திருந்தனர். அவரவர்களின் எழுத்தின் அனுபவங்களைச் சொல்லிச் சென்றனர்.


  


நானும் சற்று பேசிவிட்டு வந்தேன். பெண்கள் வீடு தாண்டி, சமூகம் தாண்டி எழுதிவருவதையும் அதற்கான விருது என்பது அவர்களுக்கு ஒரு மகிழ்வும் ஊக்கமும் உயர்வும் தரும் விஷயம் என்பதை சொன்னேன்.




அரிமா கோபாலகிருஷ்ணன், அரிமா செல்வராஜ் மற்றும் அரிமா உறுப்பினரும் எழுத்தாளருமான சுப்ரபாரதி மணியன் ஆகியோர் வந்து விழாவை சிறப்பித்தனர்.

சுப்ரபாரதி மணியன் அவர்கள் அனைவருக்கும் விருது வழங்க விழா இனிதே நிறைவுற்றது.





விருது வாங்கியவர்கள் பட்டியல் :

அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது  :
1.  சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் )
2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா )
3. நம்மூர் கோபிநாத், சென்னை(  why why    )
4.மதரா , திருனெல்வேலி ( கதவு  )
5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( விழிகள்” )

சிறப்புப் பரிசு  : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு
1. சபரீஸ்வரன்,
2. சி.கோபிநாத்
3. பைரவராஜா

அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )
  • விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை
  • இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை (நாவல்)
  • ஸ்ரீஜாவெங்கடேஷ்சென்னை( நாவல் )

  • அகிலா , கோவை, (கவிதை )
  • தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை   
  • மாதாங்கி சிங்கப்பூர்- கவிதை.
  • கவுதமிகோவை -கவிதை       
  • சுஜாதா செல்வராஜ் பெங்களூர் கவிதை. 

  • கவுரி கிருபானந்தம், சென்னை ( மொழிபெயர்ப்பு)
  • ராஜேஸ்வரிகோதண்டம்ராஜபாளையம்  (மொழிபெயர்ப்பு )  
  • சாந்தாதத், ஹைதராபாத் (மொழிபெயர்ப்பு)    

  • எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை)
  • இந்திராபாய்சென்னை ( கட்டுரை )
  • ஈஸ்வரி, கோவை (கட்டுரை) 
  • சுபாஷிணிசென்னை, (கட்டுரை)     
  • சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை) 
 
  • ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல்
  • மைதிலி சம்பத்  (ஹைதராபாத்), நாவல்
  • வனஜா டேவிட் , பெங்களூர் நாவல்        



  • ராமலட்சுமி  , பெங்களூர், - சிறுகதை
  • பாலசுந்தரிதிருவாரூர்(சிறுகதை )   
  • கமலா  இந்திரஜித்.திருவாரூர்(சிறுகதை )



Comments

  1. சகோதரிக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் விருதுகள் குவியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி...

      Delete
  2. வணக்கம்

    சகோதரி இன்னும் பல விருதுகள் பெற எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இது ஒரு சந்தோசமான தருணம். உங்களை மேலும் உற்சாகமாக எழுத வைக்க இந்த விருது இன்னும் தூண்டும். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எனக்கு ஊக்கசக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி நண்பா..

      Delete
  4. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்..

      Delete
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந