Skip to main content

குழந்தைக்கும் ஷாப்பிங் செய்யக் கற்றுக் கொடுங்கள்... .



நம் அம்மா காலத்தில் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர் எல்லாம் கிடையாது. அண்ணாச்சி கடையில் லிஸ்ட் கொடுத்தால் சாமானெல்லாம் வீடு தேடி வரும். 

நாமெல்லாம் சூப்பர் மார்க்கெட் தேடி போய் வாங்கினாலும் தேவையற்றதை வாங்காமல் இருந்தோம். ஆனால் இப்போதைய இளம் தாய்மார்களின் நிலையே வேறு. கண்ணில் பட்டதை எல்லாம் வீட்டுக்கு வாங்கி வந்துவிடுகிறார்கள். 

ஆனால் குழந்தைகள் ஓன்று கேட்டால் மறுக்கும் குணம் எங்கிருந்து வருகிறது என்பது மட்டும் புரியவில்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஓல்ட் மாடல் ஆகவே இருக்காங்க. 


நேற்று நீல்கிரிஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண்குழந்தை அவளின் அம்மாவுடனும் தாத்தாவுடனும் வந்திருந்தாள். ஐந்து வயதிருக்கும் அந்த சுட்டிக்கு.

பார்க்கும் சாக்லேட் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தது. அவளின் அம்மாவோ எடுக்காதேன்னு சொல்லி சொல்லி சலிச்சே போயிட்டா. கடைசியில் ஒரு குழந்தைக்கு ஒரு சாக்லேட் தான் எடுக்கணுமாம் இந்த கடையில் என்றாள். அவ்வளவுதான். அதன் முகமே மாறிவிட்டது. 

ஒன்றை எடுப்பதும் இன்னொன்றை பார்த்துவிட்டால் அதை வைத்துவிட்டு அடுத்ததை எடுப்பதுமாக தடுமாறிக் கொண்டிருந்தது. 

அவள் அம்மாவோ இதை உணராமல் பில் போட போக இதுவும் அங்கே போய் அந்த பில் போடும் பெண்ணிடம் ஒரு குழந்தைக்கு ஒண்ணுதானா ன்னு அப்பாவியா கேட்க அந்த பெண்ணை பேசவிடாமல் அந்த அம்மாவே அதை உறுதிப்படுத்த அதன் வாடிய முகம் பார்த்து மனம் காயப்பட்டுப் போனது. 

ஷாம்பூவில் இருந்து  பரோட்டா போன்ற frozen foods வரை வாங்கி குவிக்கும் தாய்மார்களுக்கு அந்த குழந்தையின் முகமோ மனப் போராட்டமோ தெரிந்திருக்க நியாயமில்லைதான்...

குழந்தைகள் மட்டுமல்லாமல் நீங்களும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம். தப்பில்லை.

குழந்தைக்கு பார்ப்பதையெல்லாம்  எல்லாவற்றையும் வாங்கும் ஆசையை குறைக்கக் கற்றுக் கொடுக்கலாம். அதுவும் தப்பில்லை.

அதையும் மீறி அதன் பூப்போன்ற மனதை கொஞ்சம் நினைத்து பார்த்தால் தப்பேயில்லை...அது வாடாமல் பார்த்துக் கொள்வோம்...

சின்ன வயசில் நிறைவேறாத ஆசைக்காக பிற்காலத்தில் அதுவும் உங்களை மாதிரி கண்ணில் படுவதை எல்லாம் வாங்கிக் குவிக்கும்...


ஷாப்பிங் அழைத்துச் செல்லும் முன் :


குழந்தை வளர்ப்பு என்பது வீட்டிற்கு வெளியே சட்டை மாட்டி சமர்த்தாய் வைத்திருப்பது அல்ல. வீட்டுக்கு உள்ளே சில நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து அதை அது தானாகவே வெளி உலகில் கடைபிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.


  • கடைக்கு அழைத்துச் செல்லும் முன் எத்தனை சாக்லேட் வேண்டும் அவர்களுக்கு என்றெல்லாம் அளவிட்டு கூட்டிச் செல்லாதீர்கள். 
  • முதலில் அவர்களுக்கும் என்ன தேவை என்று பார்த்து எடுத்துக் கொடுங்கள்.
  • இல்லையென்றால் அவர்களின் தேவைகளை ஒரு லிஸ்ட் எழுதச் சொல்லி அதை அவர்களையே எடுக்கச் சொல்லுங்கள். 
  • அதற்கு முன் நாமும் என்ன வாங்க வேண்டும் என்று நம் கையில் ஒரு லிஸ்ட்டுடன் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
  • ஏதாவது ஒரு பொருளுக்காக குழந்தை அடம் பிடிக்கிறது என்றால், தவறு நம் மீதே குழந்தை மீதல்ல.
  • நம்மைவிட அதிகமாய் தான் கேள்விக் கேட்பார்கள். பதில் சொல்ல நாம் சற்று அறிவையும் பொறுமையையும் வளர்த்துக் கொள்வோம்.      

அவர்கள் பள்ளிக்குப் போனாலும் கடைகளுக்கு போனாலும் விளையாட போனாலும் நல்ல குணம் மிக்கவர்களாக விளங்க வேண்டும். நம் குழந்தைகள் நம் கையில்தான் நல்லவர்கள் ஆகிறார்கள். ஏக்கங்களை சுமக்கவிடாமல் அவர்களுக்கு வாழ்க்கையை அழகாக்கிக் கொடுங்கள்... 




Comments

  1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...நன்றி குமார்...

      Delete
  2. பூப்போன்ற மனதை கொஞ்சம் நினைத்து பார்த்தால் தப்பேயில்லை...அது வாடாமல் பார்த்துக் கொள்வோம்..

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பிற்கும் பதிவிற்கும் நன்றி தோழி...

      Delete
  3. நாம் தான் முதலில் குழந்தைகளின் ரோல் மாடல்

    ReplyDelete
    Replies
    1. நம்மைப் பார்த்துதான் கற்றுக் கொள்கிறது...நன்றி எழில்...

      Delete
  4. அனைத்து பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான கருத்துகள். பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும் நன்றி...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந