Skip to main content

முகநூல்...




ஏதோ ஒன்றை
ஒவ்வொருவரிடமும் தேடி
அலைப்பாய்ந்து கொண்டிருக்கிறது
இந்த மாய உலகம்...

இச்சைகளையும் ஆசைகளையும்
நட்பென்னும் புனிதத்தில் கரைத்து
வாழ்க்கை நதியை பாவப்படுத்துகின்றது

கட்டுப்பாடுகள் இல்லா இந்த மாயை
காதலைக் களங்கத்தில் தள்ளி
காவியம் புதிதாய் படைத்துக் கொண்டிருக்கிறது

ஆயிரமாயிரம் மாதவிகளையும் கோவலன்களையும்  
அவதானிக்கச் செய்து
கண்ணகிகளைக் காணாமல் செய்கிறது  

கற்பைக் கடைத்தெருவுக்கு இழுத்துச் சென்று
சமாதானமாய் பேரம் பேசுகிறது
கடைசியில் நல்லவன் என்ற போர்வையுடன்                
தெருவில் நடந்துப் போகச் செய்கிறது
வேடிக்கைதான்....
  
கலாச்சார ஆணிவேரின் சாய்வு
உறுதிச் செய்யப்பட்டுவிட்டது...

முகமூடிகள் நிஜத்தைவிட
இந்த நிழலில் அதிகம்...

தூய்மையற்றக் காற்றைக் கூட சுவாசிக்கலாம்
சாளரமற்ற அறையில் சாவை சுவாசிப்பதைவிட....


Comments

  1. நல்லாவே சொன்னீங்க போங்க - உண்மையை...!

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. உண்மையை உண்மையாகவே...நன்றி சகோ...

      Delete
  2. // முகமூடிகள் நிஜத்தைவிட
    இந்த நிழலில் அதிகம்...

    தூய்மையற்றக் காற்றைக் கூட சுவாசிக்கலாம்
    சாளரமற்ற அறையில் சாவை சுவாசிப்பதைவிட.
    //

    நிஜம் தான் ...

    ReplyDelete
  3. காலத்தின் பரிணாம வளர்ச்சி ..ஒவ்வரு பரிணாமமும் அழிந்து புதிய வடிவங்கள் உருவாயின ..இதுவும் புளித்து போய் இதை விட கொடுமையாக உருமாறலாம் ..அபொழுது நாம் இருந்து பார்க்கும் போது இந்த சூழ்நிலை சாதாரணமாக தோன்றலாம் ஆகையாய் யார் வேணும் என்றாலும் எப்படி வேண்டுமானாலும் மாறிகொள்ளட்டும் ,பண்பாடு பாரம்பரியத்தில் உள்ளவர்களை இந்த பரிணாம வளர்ச்சி தாக்க முடியாது ..அழிவு பாதையில் செல்பவர்கள் கடைசில் விழ்வது சாக்கடை நிறைந்த புதைகுழிகளில்.

    ஆனால் பெரிய மனிதன் என்ற போர்வையில் இருக்கும் சிறுமையான மனிதர்கள் அடையாளம் காண பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை

    ReplyDelete
    Replies
    1. புரிதல்தான் தேவைபடுகிறது ராஜன்...

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. உண்மையான வரிகள்

    சூப்பர் நன்றாக சொன்னினிங்க

    ReplyDelete
  6. வரிக்கு வரி ரசனை + நிஜம்! அருமைங்க!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....நன்றி கணேஷ்...

      Delete
  7. எல்லாமே உலகமயமான இந்த காலத்தில் பாரம்பரிய கலாச்சாரம் என்பது புத்தங்களில் படிப்பதற்கு மட்டுமே என்று ஆகிப் போனது அதனால் இந்த காலத்தில் பேஸ்புக் என்ற புதிய கலாச்சாரம் உலக கலாச்சராமாக ஆகிப் போனது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ உண்மைதான்...நன்றிங்க ...

      Delete
  8. வரிசையாக ஒவ்வொரு கவிதையையும் படித்துக் கொண்டு வந்த போது இந்த கவிதையில் வார்த்தைகள் சரியான கட்டுமானத்தில் வந்துள்ளதாக எனக்குத் தெரிகின்றது. ஒவ்வொரு முறையும் எழுதி வைத்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதை படித்துப் பாருங்கள். செதுக்கி மீண்டும் வலையேற்றும் போது சில கவிதைகள் சகாரவர்ம் பெற்றதாக இருக்கும். இதன் காரணமாகத்தான் நான் கவிதைகளில் முயற்சிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அப்படியே செய்கிறேன். நேரமின்மையால் சில நேரங்களில் உடனே பதிவு செய்ய நேரிட்டுவிடுகிறது. இந்த கவிதையும் அப்படிதான் நேரடியாக முகநூலில் எழுதியதுதான்.
      நன்றி நேதாஜி...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

தவ்வை நாவல் குறித்து எழுத்தாளர் எஸ் ரா அவர்களின் பக்கத்தில்..

தவ்வை - புதினம் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் 2022யில் தான் வாசித்தவற்றுள் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவரது வலைத்தளத்தில் கொடுத்துள்ளார். அவற்றுள் எனது நாவலான தவ்வை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மகிழ்வும் அன்பும் 🙏 லிங்க் 👇 தவ்வை