Skip to main content

கண்ணாடி சில்லுகள்...




நிழல் தேடும் பாதையெங்கும்
சிதறி கிடக்கும் இந்த வெளிச்ச துண்டுகள் 
எதற்கும் உபயோகமில்லாமல்..

மரங்களின் இலைகளை தின்று  
வட்டமாய், சதுரமாய் நீளமாய் 
வேண்டும் உயிர் பெற்று
உடைந்து போன கற்பரப்பின் மீது வெளிச்சங்களாய்
நிழல் வெறுக்கும் கண்ணாடி சில்லுகளாய்
நடக்கும் வழி மறித்து 
எதற்கும் உபயோகமில்லாமல்....

Comments

  1. கவுரவர் சபையில் பீஷ்மன்போல்
    தீயோருக்குள் அடங்கிய நல்லோரும் எதற்கும்
    பயனற்றுத்தான் போவார்கள்
    இருளுக்குள் அடங்கிய ஒளிபோல,,,
    ஆழமான கருத்துடைய பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்கு நன்றி ரமணி ஐயா...

      Delete
  2. கண்ணாடி சில்லுகளாய் நடக்கும் வழி மறித்து
    எதற்கும் உபயோகமில்லாமல்....தான் சில மனிதர்களும் உள்ளனர் என்பதனைச்சொல்லாமல் சொல்லியுள்ளது அழகோ அழகு தான்.

    நம் வெற்றிப்பயணத்தில், நம்மை காயப்படுத்தும் தடைக்கற்கள் இவைகள்./ இவர்கள்.

    நல்ல பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா...

      Delete
  3. அருமை...

    வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா...
    தடைக்கல்லும் உனக்கு படிகல்லப்பா...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி நண்பா..

      Delete
  4. பூக்களிலும் ..பனிபடர்ந்த ..புல் வெளிகளிலும் நடக்க வைத்த உங்கள் வரிகளை கண்ணாடி சில்லுகளில் நடக்க வைத்து காயத்தை உண்டாக்கி விட்டீர்கள்

    ReplyDelete
  5. நல்ல ரசனை.ஆனால் உப்யோகமற்றதல்ல,சிதறி ஓவியம் காட்டும் சிதறல்கள்,

    ReplyDelete
  6. புல்லின் நுனியில் படர்ந்து தொங்குகிறா பனித்துளியாய் சிதறிய கண்ணாடிச்சில்லுகள்.

    ReplyDelete
    Replies
    1. உடையாத கண்ணாடி சில்லுகள்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந