Happy 2013....
வழக்கம் போல்தான் இன்றும்...
பால்காரர்
பேப்பர்காரர்
பூக்கார பெண்மணி
வாக்கிங் போகும் நண்பர்
நம் தெருகோடி பிள்ளையார்
என்று யாருமே மாறாத
இன்றைய காலையில்
விடியல் மட்டுமே
கோலம் போட்டு
அழைத்து செல்கிறது நம்மை
அடுத்த வசந்தத்தின் வாசலுக்கு...
நேற்றைய ஆசைகளின்
துவக்கமாய் இன்று...
நினைத்ததை நடத்துவோம்
நடப்பதையே நினைப்போம்
அப்போதுதான்
வருடத்திற்கொரு முறை வரும் வசந்தம்
வாழ்க்கை முழுவதும் நமக்கே...
பதிவு நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Deleteதிடங்கொண்டு உறுதியெடுப்போம் :)
ReplyDeleteவாழ்வை வளமாக்க...
Deleteவருவதையும்
ReplyDeleteவரவிருப்பதையும்
வசந்தமாக மாற்றிக்கொள்ளும்
பக்குவத்தை நமக்குள்ளே
வளர்த்திடுவோம்....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி...
நன்றி மகேந்திரன்...புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Delete