Skip to main content

அடுத்தவர்களின் வட்டத்திற்குள்.....






பால்கனியின் கம்பியில்
வெள்ளை புறா
தன் முகத்தின் முன்னே
மேலிருந்து கீழாக
வலை பின்னும் சிலந்தியை
உற்றுப் பார்த்தபடி....

சிலந்தியோ புறாவின் தலையை சுற்றி
வலை பின்னத் தொடங்க
புறாவும் தலையை அங்கும் இங்குமாக
நகர்த்தியும் திருப்பியும்
சிலந்தியை ஒதுக்க....
சிலந்தி பிடிவாதமாய்
வலையை சுற்ற
சடக்கென்ற புறாவின் கொத்தலில்
காணாமல் போனது சிலந்தி.......

இதை காணும் போது
முந்தைய நாளின் சம்பவம் ஒன்று
நினைவில் நிழலாடியது

பக்கத்து வீட்டு குழந்தையும்
அவர்களின் டாபர்மெனும்....

குழந்தை கையில் எடுக்கும் அனைத்தும்
நாய் பிடுங்குவதும் எறிவதுமாக
அருமையாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்....

குழந்தையின் அம்மா சாப்பிட வைத்துச்சென்ற
பிஸ்கட்டை குழந்தை கையில் எடுக்க
அதையும் செல்ல பிராணி பிடுங்க...

எடுப்பதும் பிடுங்குவதும் தொடர  
நாயின் இந்த செயலுக்கு
குழந்தையின் சிரித்த முகம்
சிவந்த முகமாக மாற தொடங்கி
கையில் கிடைத்த பொம்மையை
குழந்தை நாயின் மேல் வீச
அது அப்படியே பின்பக்கமாக
நடந்து ஒதுங்க.....

குழந்தையின் சிரிப்பை மீறிய
ஒரு சிறிய கோபம்
தன் சுயத்திற்கானது...

புறாவின் பொறுமை மீறிய
ஒரு சிறிய கோபம் கூட  
அதன் சுயதிற்குதான்....
இரண்டுமே ஒன்றுதான்...
இரண்டுமே நியாயம்தான்....

அடுத்தவர்களின் வட்டத்திற்குள்
அடியெடுத்து வைக்காதவரை
எல்லாமே அழகுதான்...




  

Comments

  1. பீர்பால்,முல்லா கதைகளில் மட்டுமே நாம் moral story யாக படித்து இருக்கிறோம் ,ஆனால் அவற்றின் காலம் நாம் கண்டிராதவை ,ஆனால் கண்ணில் கண்ட ஒரு காட்சியை அருமையாகmoral story யாக ஆக்கிய விதம் அருமை ...

    ReplyDelete
  2. அழகாக சொன்னீர்கள் அகிலா...
    நம்முடைய எந்த ஒரு செயலும் பிறரது எல்லையை மீறாததாக இருக்கவேண்டும்... அப்படிப்பட்ட ஒரு செயல் தான் நம்முடைய பாதுக்காப்பும் கூட சுயநலம் என்ற பெயரை நமக்கு வாங்கி தந்து விடுகிறது... இயற்கையான செயலை வைத்து மிக அற்புதமாக சொல்லிவிட்டீர்கள்.. உங்களுக்கு என் பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் தேவாதி ராஜன்....

      Delete
  3. இரண்டுமே ஒன்றுதான்...
    இரண்டுமே நியாயம்தான்....

    அடுத்தவர்களின் வட்டத்திற்குள்
    அடியெடுத்து வைக்காதவரை
    எல்லாமே அழகுதான்...

    அழகான வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜேஸ்வரி.....

      Delete
  4. நம்மை சீண்டாதவரை நாம் பொறுமையின் எல்லைதான் சீண்டிவிட்டால் அதுவே நமக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிடும்.அடுத்தவர்கள் வட்டத்திற்குள் அடியெடுத்து வைக்காதலரை எல்லாம் அழகுதான்.
    அழகான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

பெண்ணென - பெண் படைப்புகளின் நிலை

பெண் படைப்பாளர்கள் தமிழ் இலக்கிய படைப்புலகம் கடல் போன்றது. நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் பாலின, வயது பேதமில்லாமல் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். காதல், சமூகம், அதன் பிரதிபலிப்புகள், இயல்புகள், பிரச்சனைகள் என்று அனைத்தையும் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஒருவரின் முதல் தொகுப்பாக வெளிவரும் புத்தகத்தில் இருக்கும் கவிதைகள் கூட தேர்ந்தேடுக்கப்பட்டவைகளாக வாசிக்க தகுந்தவைகலாக இருக்கின்றன. அதற்கு மூத்த கவிஞர்கள் சில பல விதிமுறைகளுடன் உதவி வருவதையும் காணமுடிகிறது இங்கு. ஒருகாலத்தில் சிற்றிதழ்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள் போன்றவற்றில் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்து சலித்துப்போன கவிஞர்கள், காலமாற்றம் காரணமாக இன்றைய கவிஞர்கள் (வயது வித்தியாசம் இல்லை) இணையத்தின் வழி செய்வதை கண்டு வியப்பதில் ஆச்சரியமில்லை. முகநூலில், இணையங்களில் விருப்ப குறியீடுகளின் மதிப்பீட்டில் வாழும் பெரும்பாலான கவிஞர்கள் அதிலிருக்கும் விமர்சனங்களையும் ஏற்கிறார்கள். அங்கு எழும் 'ஆஹா, ஓஹோ' வுக்கும் ஏமாறுகிறார்கள். தனிதனி குழுக்கள் அமைத்து எல்லோருடைய கவித்திறமைகளையும் வளர்க்கிறார்கள். அவற்றில் நடத்தப்படும் போட்டி