Skip to main content

தூறல்கள்.....

நினைப்பு :

உன் நினைப்பு சுமக்கும் இதயம்
வலிக்கிறதே சுமக்க முடியாமல்...
சற்று இறக்கி வைக்கலாம்தான்...
மீண்டும் சுமக்க தொடங்கினால்
இன்னும் புதிதாய் பெரிதாய் வலிக்குமே...

இறக்கிய இடத்திலேயே
விட்டு செல்லலாம் என்றால்
சற்று தொலைவு செல்வதற்குள்
எங்கு தொலைத்தாலும் சரியாய்
வீட்டு வாசலில் நிற்கும் பூனையாய்
வந்து ஓட்டிக் கொள்கிறதே....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***

பார்வை....


பாதம் மட்டுமே பதித்து 
பார்வை பதிக்காமல் போயிருப்பாயோ 
என்கிற பரிதவிப்பில் 
என் பார்வை உன் மீதில்லை....

என் பரிதவிப்பு உண்மையென்றால்
உன் பார்வை என் மீதில்லை 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***

நிஜம்...

தாமரை இலையின் மீதிருந்து 
விலகி ஓடும் நீரை போல் 
நினைவுகளிலிருந்து 
நிஜம் பிரித்து ஓடுகிறேன் 
ஆயினும் 
நிஜம் இன்னும் நரம்புகளில்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***

Comments

  1. நல்ல கவிதைகள்...

    முடிவில் உள்ளது மிகவும் அருமை...

    ReplyDelete
  2. நிஜங்கள் தடம் மாறினாலும்
    நினைவுகள் தடம் மாறாது....

    மேகத்தின் தூறல்கள்
    மண்ணிற்கு மாற்றம்
    கவிதைகளின் தூறல்கள்
    நினைவுகளின் ஓட்டம்
    வரிகள் அருமை... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. இயற்கை அழகில் அலங்காரங்கள்
    அர்த்தம்ற்றுப் போவதைப்போல்
    கவிதைகளில் பீறிடும் உணர்வுப் பெருக்கத்தில்
    வார்த்தைகள் வெறும் குறிகாட்டிகளாகித் தான் போகின்றன
    கவிதைப் பெண் விரும்பி தங்கள் வசப்பட்டிருக்கிறாள்
    தொடர்ந்து ஜமாயுங்கள்

    ReplyDelete
    Replies
    1. என் கவிதையை அலங்கரித்த உங்களின் பாராட்டுக்கு நன்றி ரமணி அவர்களே....

      Delete

  4. வணக்கம்!


    பார்வை பார்த்த நொடி்பொழுது
    பகலும் இரவும் நீண்டுவரும்!
    போர்வை போர்த்தி அடைத்தாலும்
    பொல்லா நினைவு பொலிந்துவரும்!
    கோர்வை யாகத் தொடா்ந்துவரும்!
    கொட்டும் மழைபோல் குளிர்ச்சிதரும்!
    வோ்வை முத்து விளைக்கின்ற
    சோர்வை போக்கும்! சுவைகொடுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. படிக்க படிக்க சுவைக்கும்
      உங்கள் கவிதையை போலே...

      Delete
  5. கவிதைகள் அருமை!.

    ///நினைவுகளிலிருந்து
    நிஜம் பிரித்து ஓடுகிறேன்
    ஆயினும்
    நிஜம் இன்னும் நரம்புகளில்///
    மிகவும் நல்ல கருத்து

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

பெண்ணென - பெண் படைப்புகளின் நிலை

பெண் படைப்பாளர்கள் தமிழ் இலக்கிய படைப்புலகம் கடல் போன்றது. நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் பாலின, வயது பேதமில்லாமல் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். காதல், சமூகம், அதன் பிரதிபலிப்புகள், இயல்புகள், பிரச்சனைகள் என்று அனைத்தையும் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஒருவரின் முதல் தொகுப்பாக வெளிவரும் புத்தகத்தில் இருக்கும் கவிதைகள் கூட தேர்ந்தேடுக்கப்பட்டவைகளாக வாசிக்க தகுந்தவைகலாக இருக்கின்றன. அதற்கு மூத்த கவிஞர்கள் சில பல விதிமுறைகளுடன் உதவி வருவதையும் காணமுடிகிறது இங்கு. ஒருகாலத்தில் சிற்றிதழ்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள் போன்றவற்றில் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்து சலித்துப்போன கவிஞர்கள், காலமாற்றம் காரணமாக இன்றைய கவிஞர்கள் (வயது வித்தியாசம் இல்லை) இணையத்தின் வழி செய்வதை கண்டு வியப்பதில் ஆச்சரியமில்லை. முகநூலில், இணையங்களில் விருப்ப குறியீடுகளின் மதிப்பீட்டில் வாழும் பெரும்பாலான கவிஞர்கள் அதிலிருக்கும் விமர்சனங்களையும் ஏற்கிறார்கள். அங்கு எழும் 'ஆஹா, ஓஹோ' வுக்கும் ஏமாறுகிறார்கள். தனிதனி குழுக்கள் அமைத்து எல்லோருடைய கவித்திறமைகளையும் வளர்க்கிறார்கள். அவற்றில் நடத்தப்படும் போட்டி