Wednesday, 26 September 2012

பாடும் பறவைகள்....

பறக்கவும் பாடவும்....



சின்ன கம்பிகளும் 
சித்திர வளைவுகளும் 
சிங்கார இருக்கையும் 
சிவப்பாய் கோவைபழமும்
இருந்தாலும்

சுதந்திரமாய் பறக்க 
சிறகுகளும் இல்லாமல் 
சங்கீதமாய் பாட 
சந்தோஷமும் இல்லாமல் 

தினம் தினம் 
கூண்டுக்குள் 
பாடும் பறவைகள்.....


10 comments:

  1. கூண்டென அறிந்தால் நிச்சயம்
    சந்தோஷம் பறிபோய்விடும்
    கூண்டென அறியாதவைகளுக்கு
    வானமாய் இருந்தால் என்ன
    சின்னக் கூண்டானால்தான் என்ன/
    ஆழமாகச் சிந்தித்து அற்புதமான
    கவிதைகள் வழங்கத் துவங்கிவிட்டீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களுடைய வார்த்தைகள் மேலும் கவிதையை வளப்படுத்தி விட்டன...
    நன்றி....

    ReplyDelete
  3. உங்களுடைய வார்த்தைகள் மேலும் கவிதையை வளப்படுத்தி விட்டன...
    நன்றி....

    ReplyDelete
  4. உங்களுடைய வார்த்தைகள் மேலும் கவிதையை வளப்படுத்தி விட்டன...
    நன்றி....

    ReplyDelete
  5. வரிகள் அற்புதம் கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கண்ணதாசன்....

      Delete
  7. ம்ம்ம் அருமை.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....