Skip to main content

என்ன காதல் இது?....




என் சம்மதம் இல்லாமலே
என்னை உனக்குள் கொண்டு சென்றாய்
ஏன் என்று கேட்க
எனக்கு அதிகாரம் மறுக்கிறாய்
உன்னுள் இருப்பது நானில்லையா
இல்லை என்னின் உன் உருவமா?

என் வார்த்தையை
உன் வாக்கியமாக்கிக் கொள்கிறாய்
என் சொல்லை
உன் முற்றுப்புள்ளியாக்கிக் கொள்கிறாய்

என்னை விடுத்து
வேறு உலகம் பார் என்றால்
மேலுலகமா என்கிறாய்....

என் முடிவை
உன் முடிவாக்கி கொள்கிறாய்
நான்தான் உன் முடிவென்று நீ கொள்வதால்

என் உயிர் உனக்கு என்கிறாய்
எனக்கு வேண்டாம் என்றால்
எனக்கும் வேண்டாம் என்கிறாய்
உன்னை கொன்று
உணவாக்கிக் கொள்ள
நான் பூலான்தேவி அல்ல

உன்னையும்
உன் காதலையும்
ஒருசேர என்னால் உதறமுடியும்  
என்னுள் நீ பூஜ்யமாய் இருப்பதால்  

இன்னும் ஒரு அவகாசம் கேட்கிறாய்
என்னை நீ மறப்பதற்கு அல்ல
உன்னை நான் நினைப்பதற்கு...
முடியாது என்ற என் மறுப்பை
கேட்க மறுக்கிறாய்

உனக்கு மறுப்பு சொல்ல வைத்து
என் பாவத்தின் எண்ணிக்கையை கூட்டிவிட்டாயே...
நீ நாளை மாறலாம்
உன்னை தூக்கியெறிந்த  
என் மனசாட்சி  
என் கடைசி விறகு எரியும் வரை உறுத்துமே....
என் செய்வேன்.....


Comments

  1. ம் (; சரிதான்

    நிறைய கேள்விகளால்
    அலங்கரிக்கப்ட்டுள்ளது கவிதை
    அது யதார்த்தமான உண்மையும் கூட

    ReplyDelete
  2. பலரால் புரியச் சொல்லமுடியாத
    எப்படிச் சொன்னாலும் யாருக்கும்
    புரிய வைக்கமுடியாத விஷயத்தை
    புரியவைத்துப் போகும் கவிதை
    அருமையிலும் அருமை

    ReplyDelete
  3. பெண்ணின் மனது போல....
    நன்றி ரமணி அவர்களே....

    ReplyDelete
  4. அத்தனையும் விடை தெரியா கேள்விகள்.....
    நன்றி செய்தாலி....

    ReplyDelete
  5. வற்புறுத்தலால் எந்த உறவையும் உயிர்ப்பிக்க முடியாது. நல்ல கவிதை அகிலா.

    ReplyDelete
  6. Yen manasatchi
    yen katasi viragu varai yeriumay
    yen seiven... Maruka mudiyatha unmai

    ReplyDelete
  7. நன்றி எழில்....

    ReplyDelete
  8. ம்ம்ம்....உண்மைதான் விஜி...

    ReplyDelete
  9. //நான் பூலான்தேவி அல்ல//
    பூலான் தேவியை பற்றி விரிவாய் பதிவிடலாமே.

    ReplyDelete
    Replies
    1. செய்யலாம்தான்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந