Skip to main content

பிள்ளையாரின் பிறந்தநாள்.....




தெருக்கோடியில்
என் நண்பன்
தொந்தியும் தொப்பையுமாக
சாப்பிட்டது போதாதென்று
எப்போதும் கையில் ஒரு கொழுக்கட்டையுடன்
உட்கார்ந்திருப்பான்...

நான் கும்பிடுகிற ஜாதியில்லை
என்று அவனுக்கு தெரியும்

ஆனாலும் அவனை தாண்டும்போது
தும்பிக்கையை ஆட்டி
தொந்தி குலுங்க சிரிப்பான்
நானும் அவனருகில் சென்று
எனக்கும் அவனுக்குமான
சங்கேத பாஷையில்
பேசிவிட்டு நகருவேன்...

இன்று அவனின் பிறந்தநாள்
இன்று அவனின் சிரிப்பும் சற்று அதிகம்தான்
அவனை கடக்கும் போது
எட்டிப் பார்த்தேன்
கூட்டம் அதிகம்....
வாழ்த்து சொல்ல வந்தவர்கள்...

என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி
மற்றவர்களின் உபசரிப்பில் லயித்திருந்தான்
மாலையும் மோதகமும்
கொழுக்கட்டையுமாக
நிறைய தின்று
தொப்பை பெருத்து
சந்தோஷமாக இருந்தான்

‘என்ன அதிகமான சிரிப்பு...
பலகாரங்கள் நிறையவோ’ என்றேன்

‘இல்லை...இல்லை...
தினமும் என்னை தெருவில்
மழையிலும், வெயிலிலும்
காய வைத்துவிட்டு
எல்லோரும் வீட்டுக்குள்ளே
போய் பூட்டிக்குவாங்க...
இன்று மட்டும்தான்
எனக்கு குடை எல்லாம் கொடுத்து
வெயில்படாம வச்சிருக்காங்க...
அந்த மகிழ்ச்சிதான்‘ என்றான்....

ம்ம்ம்....
குடைக்குள் என் நண்பன்....
சந்தோஷமாய்....
நானும் அவனை
வாழ்த்தி சந்தோஷமாய்.....

Comments

  1. இதயம் நிறைந்த இனிய விநாயகர் சதூர்த்தி தின வாழ்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. ஆண்டவன் விஷயத்தில் இருவரின் கருத்தும் ஒத்த
    கருத்தாய் இருப்பது ஆச்சரியமளிக்கிறது
    (பழனி முருகனும் நானும் பிப்ரவரி 2011 )
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. 'We'நாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    //'இன்று மட்டும்தான்
    எனக்கு குடை எல்லாம் கொடுத்து
    வெயில்படாம வச்சிருக்காங்க...
    அந்த மகிழ்ச்சிதான்‘//

    புதிதான சிந்தனை!

    வாழ்த்துக்கள் அகிலா!

    ReplyDelete
  5. சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும்....

    ReplyDelete
  6. ரமணி அவர்களே....நீங்கள் பதித்த பழனிமுருகனை பற்றிய பதிவு படித்தேன்...அழகான நிஜம்.
    வேண்டுதல்களை குறைத்தால் கடவுளின் தினசரி பாரம் குறையும்.

    ReplyDelete
  7. ஆஹா! அருமை அருமை

    ReplyDelete
  8. ஆகாஷ்...பிள்ளையாரை யாருக்குத்தான் பிடிக்காது...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

பெண்ணென - பெண் படைப்புகளின் நிலை

பெண் படைப்பாளர்கள் தமிழ் இலக்கிய படைப்புலகம் கடல் போன்றது. நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் பாலின, வயது பேதமில்லாமல் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். காதல், சமூகம், அதன் பிரதிபலிப்புகள், இயல்புகள், பிரச்சனைகள் என்று அனைத்தையும் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஒருவரின் முதல் தொகுப்பாக வெளிவரும் புத்தகத்தில் இருக்கும் கவிதைகள் கூட தேர்ந்தேடுக்கப்பட்டவைகளாக வாசிக்க தகுந்தவைகலாக இருக்கின்றன. அதற்கு மூத்த கவிஞர்கள் சில பல விதிமுறைகளுடன் உதவி வருவதையும் காணமுடிகிறது இங்கு. ஒருகாலத்தில் சிற்றிதழ்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள் போன்றவற்றில் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்து சலித்துப்போன கவிஞர்கள், காலமாற்றம் காரணமாக இன்றைய கவிஞர்கள் (வயது வித்தியாசம் இல்லை) இணையத்தின் வழி செய்வதை கண்டு வியப்பதில் ஆச்சரியமில்லை. முகநூலில், இணையங்களில் விருப்ப குறியீடுகளின் மதிப்பீட்டில் வாழும் பெரும்பாலான கவிஞர்கள் அதிலிருக்கும் விமர்சனங்களையும் ஏற்கிறார்கள். அங்கு எழும் 'ஆஹா, ஓஹோ' வுக்கும் ஏமாறுகிறார்கள். தனிதனி குழுக்கள் அமைத்து எல்லோருடைய கவித்திறமைகளையும் வளர்க்கிறார்கள். அவற்றில் நடத்தப்படும் போட்டி