Monday, 10 September 2012

வதம் வேண்டி....




உன்னால்
என் இதயம் கீறிய
ஒரு வலி
வடுவாய் வெளியே
ரணமாய் உள்ளே...

என் புன்னகையை பறித்து
என் கண்ணீரை கனக்கச் செய்து
என் உயிர் துடிப்பை அடக்கி

வராமலே போவாயோ
வராமலே போய்விட்டாயோ
என்றெல்லாம் மனம் பேதலித்து

மறைவதும் தோன்றுவதுமாய்
எழுத்தில்லா காகிதமாய்
என் மனதில் உன் முகம்
என்னை வதை செய்கிறதே

உன்னை வதம் செய்ய
அவதாரம் வேண்டி நிற்கிறேன்
உன்னிடமே....




18 comments:

  1. //
    உன்னை வதம் செய்ய
    அவதாரம் வேண்டி நிற்கிறேன்
    உன்னிடமே....
    //

    அழகான வரிகள்...

    ReplyDelete
  2. உன்னை வதம் செய்ய....வார்த்தையிலேயே வதமோ ?

    ReplyDelete
    Replies
    1. அதில்தானே செய்யமுடியும் சசி...

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.....

      Delete
  4. கவிதை வரிகளே
    இங்கு வதை செய்கிறது தோழி

    ReplyDelete
    Replies
    1. ஆணின் சில முகங்கள்
      பெண்ணை வதம் செய்ய தூண்டுகிறது...
      நன்றி செய்தாலி...

      Delete
  5. அழகிய ரணத்தின் ஆழம் மறைந்து தோன்றியுள்ளது மாறுபட்ட ஒரு கோணத்திலே..
    வதம் வேண்டாம் பதம் செய்யும் அவதாரமே சிறப்பு...
    வாழ்த்துக்கள் அகிலா

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு கவிதையின் வரிகள்...

    ReplyDelete
  7. //
    மறைவதும் தோன்றுவதுமாய்
    எழுத்தில்லா காகிதமாய்
    என் மனதில் உன் முகம்
    என்னை வதை செய்கிறதே
    //

    அசத்தல் வரிகள்

    ReplyDelete
  8. வாழவழி இல்லாதவர்க்கு மரணம் ஒன்று தான் தீர்வு..இது சிவன் தத்துவம் பல வதங்களை செய்தவர் எங்கள் சிவன் ,ஆனால் உங்கள் நாராயணன் வதங்களை விட வசபடுதியதே அதிகம் ...வதம் தேவைதான் நரகாசுரன் ஆகும்போது ..ஆனால் வெறும் பிரகலாதனாக இருக்கும் வரை நாரயணன வதம் தேவை இல்லை என்பதே என் கருத்து இல்லை இரணியகசிபு என்று வதம் செய்பவர்களுடைய வாதம் என்றால் ஒரு வதம் செய்ய அவதாரம் தேவை தான்... இதில் எந்த அவதாரம், சங்கரனா இல்லை நாராயணனா ..இல்லை சங்கரநாராயணனா எனபது கவிஞருக்கே வெழிச்சம்...

    ReplyDelete
  9. வரிகள்...பொங்கி வழியும் காதல் பிதற்றல்கள்! :)

    ReplyDelete
  10. காதல் பிதற்றல்கள்...சரியான வார்த்தைதான்...நன்றி வரலாற்று சுவடுகள்...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....