Skip to main content

சகோதரனே....

இன்று உன் ஞாபகம்...



என்னைவிட இளையவனாய் பிறந்து 
என்னை முந்தி, நீ மாய்ந்து 
உலக வாழ்க்கை நிஜமில்லை என்று 
எனக்கு நீ  உணர்த்திய தினம் 

என்னருகில் உன்னை அமர வைத்து 
உன் தலையில் குட்டு வைத்து 
கணக்கு பாடம் ஏற்றிய ஞாபகம் 

கிரிக்கெட் மட்டையை ஒளித்து வைத்து 
உன் அழுகையினுடே 
உன்னை படிக்க வைத்த ஞாபகம் 

சாலையில் நடந்து போகும் போது
எதையாவது வாங்கி வரச்சொன்னால்
என் கைபிடிப்பை விலக்கி, ஓடிப்போய் வாங்கிவந்து
மீண்டும் என் கைப்பிடிக்குள் நீ வந்த ஞாபகம்    

உன் பயம் போக்க 
என் பயம் மறைத்து 
நடு இரவில் வீட்டை சுற்றிய ஞாபகம் 

வண்டி ஒட்டவே தெரியாத 
உன்னை துணை வைத்து 
நான் கார் ஓட்ட 
கற்றுக் கொண்ட ஞாபகம் 

ஊருக்குள் ஓடிய வதந்தியை நம்பி 
நீ எனக்கு பச்சை புடவை 
எடுத்து கொடுத்த ஞாபகம் 

இனி நீ என்றும் 
என் ஞாபகத்தின் சுவடுகளில் தான் 
நிஜத்தில் இல்லை 
என்பதும் என் ஞாபகம்....




Comments

  1. அருமையான வரிகள் கண்ணீரை வரவைத்தது தோழி.......

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுதா...என் சோகம் பகிர்ந்ததற்கு....

      Delete
  2. உருக்கமான வரிகள் அகில். நினைவுகள் என்றும் மறையாதவை. பாராட்டுகள்.
    நல்வரவு என் பக்கம்.

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேதா....
      இழப்பின் நினைவுகள் என்றுமே வலி தருபவைதான்...

      Delete
  3. உணர்வுகளின் குவியல்! நெஞ்சை தொட்ட கவிதை! அருமை சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...
      பகிர்வில் வலி குறைதல் உண்மை...

      Delete
  4. சோகம், இழப்புக்கு தான் தெரியும் இழப்பின் வலி உணர்ச்சி பொங்கிய வரிகளில் படைப்பு.

    ReplyDelete
  5. சகோதரன்... உணர்வுக்குளியல்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சங்கவி....

      Delete
  6. Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி...

      Delete
  7. வரிகள் கண்ணீரை வரவைத்தது சகோதரி!

    unmaivrumbi.
    Mumbai

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் இழப்புகள் நம்மை மிகவும் பலகீனமாக்குகின்றன....
      நன்றி சகோ...

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. கண்ணீர்தான் பேசுகிறதுஇவலிமிக்க இறுதி...!:(

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...அவன் இல்லாத இந்த உலகம் வலிதான்....

      Delete
  10. சத்யத்தில் நமக்கு முன் வரிசையில் உள்ளவர்களை விட நமக்கு பின் வரிசையில் உள்ளவர்கள் இழப்பு தாங்க முடியாதது ஏனெனில் நம் கைகளுக்குள் அவர்கள் வளர்ந்து இருப்பார்கள் நாம் அவர்களுக்கு வழி காட்டியாகவும் அவர்கள் நமக்கு பின் நடந்து அந்த தைரியத்தில் நாம் முன்செல்லவும் சிறிய வயதில் நம் கைபிடித்து நடந்த அவர்கள் நமக்கு கைத்தாங்கலாக ....அதில் ஒரு இழப்பு என்றால் நம்மால் தாங்க முடிவதில்லை உண்மையில் நினைத்து பார்க்கும் போது மனது கனக்கிறது ... நிஜத்தை விட நினைவுகள் கொடியவை ...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராஜன்....

      Delete
  11. உறவுகளின் இழப்பு...
    நம் நினைவு தகட்டில்
    எழும் போதெல்லாம்
    இன்பமும்..
    துன்பமும்..
    கலந்த கலவை.

    ReplyDelete
    Replies
    1. அதனுடன் வலிகளும்....
      நன்றி...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி