Skip to main content

தாவணியில்....

நீ அழகு...


கண்ணுக்குள் கனவுகளை சுமந்து 
மனதுக்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு
கண்ணாடி பார்த்து சிரித்து
உதட்டை ஈரப்படுத்தி
தாவணி மடிப்பு சரிசெய்து
ரோஜாவை தலையில் சொருகி
புத்தகத்தை மார்போடு அணைத்து
பார்க்கும் கண்களுக்கெல்லாம் பதில் சொல்லி
உன் சிரிப்பை மட்டும் எனக்கு பரிசளித்து 
தினம் தினம் நீ கல்லூரி செல்லும் அழகே தனி…. 

Comments

  1. mmmm...Alaku....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  2. தாவணிக் கனவுகளுடன் கூடிய அழகான கவிதை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் பாராட்டுக்கு...

      Delete
  3. mmmmmm//

    நல்ல கவிதை...தொடருங்கள்

    ReplyDelete
  4. அழகான கவிதை :)

    ReplyDelete
  5. ஆமாம்.... தாவணியில் அவள் அழகு தான்.

    அழகான கவிதைங்க அகிலா.

    ReplyDelete
    Replies
    1. தாவணியே அழகுதான், இல்லையா அருணா...

      Delete
  6. "அழகுக்கு யாரோ அழகு செய்வார் "
    என பழைய பாடல் ஒன்று உண்டு
    பெண்களே அழகு
    இளமை அதை விட அழகு
    அவர்கள் தாவணியில் மிக அழகு
    ஒரு தாயின் ரசிப்பில்
    கவிதையை ரசிக்க
    கவிதை மிக மிக அழகு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு தாயின் ரசிப்பில் // அருமை ரமணி அவர்களே...

      Delete
  7. தாவணிக்கு..மீண்டும் ஒரு காலம் வரும்
    அதுவரை..பொறுத்திரு மனமே!
    பழமை அல்ல..அது இனிமை என்று
    அவர்களிடம் சொல்லிடு இக்கணமே!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ரமேஷ்...
      புரிந்து கொள்வார்கள் விரைவில்...

      Delete
  8. வணக்கம் உறவுகளே

    உங்களுக்கு பிடித்த வலைப்பதிவுகளையும், உங்களின் அருமையான இடுகைகளையும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள எமது வலையகம் உங்களுக்கு உதவுகிறது. எவ்வித லாபநோக்கமில்லாமல் தமிழர்களுக்காக தமிழில் ஆரம்பிக்க திரட்டி நம் "வலையகம்" ( http://valaiyakam.com/ ) ஆகும்.

    வலையகம் ஆனது வலைப்பதிவுகளுக்கான சமூக உறவு தமிழ் தளமாகும். உங்கள் முகநூல் கணக்கின் மூலம் நீங்கள் எளிதில் வலையகத்தில் பதிவு செய்யலாம். உங்களுக்கான நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.

    உடனே இணையுங்கள் பகிருங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்குங்கள்..

    முகநூல் கணக்கின் மூலம் உள்நுழைய: http://www.valaiyakam.com/register/

    தோழமையுடன்

    உங்களின்

    வலையகம் இணையம்

    http://valaiyakam.com/

    ReplyDelete
  9. தாவணி - தீபாவளி

    ReplyDelete
    Replies
    1. இருக்காதா பின்னே...

      Delete
  10. கவிதை அருமை! இன்றுதான என முதல் வருகை! இனி தொடர்வேன்

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. தாவணி என்னும் அழகான ஆடை அழிந்துவிடுமோ என்ற நிலையில் உங்கள் கவிதை சற்று நம்பிக்கையைத் தருகிறது. அந்தக் காலத்திற்கே போய்விட்டேன். அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தாவணியின் மேல் இருக்கும் ஆசை நமக்கு விடாது....

      Delete
  12. உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே....

    ReplyDelete
  13. கவிதை மனதுக்கு இதம். காட்சி கண்ணுக்கு இதம். அழகான ரசனைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி....

      Delete
  14. இன்று தான் வருகிறேன் சொந்தமே..இனியும் வருவேன்..தாவணியும் கவிதையும் அழகு

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி