Skip to main content

உன் சின்ன விழியில்...





மலங்க மலங்க முழிக்கும்
உன் சின்ன விழியில்
என் விழி தெரியுதடி.....


தெருவில் அக்கா கைப்பிடித்து நடக்கும் போது
என்னை புறாவாக்கி, கடிதத்தை கையில் திணித்து
அத்தான் முன் என்னை தள்ளிய போதும்......


பள்ளிவிட்டு வரும் வழியில் குடித்த சுக்குக்காபிக்காக
வீட்டுவாசலில் காசு கேட்டு
கடைப்பையன் வந்து நின்ற போதும்...


தமிழ் வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து
சினிமா பாட்டுபாடி
டீச்சர் வாசலில் நிறுத்திய போதும்...


இறுக தலை வார காத்திருக்கும் அம்மா முன்
தலை நனைத்து
ஈரம் சொட்ட சொட்ட நின்ற போதும்...


அறை முழுவதும் காய வைத்திருக்கும் நெல்லை ஒதுக்கி,
மூலையில் கதை புத்தகத்துடன் ஒதுங்கி
சித்தியிடம் பிடிபட்ட போதும்....


காலேஜ் கட் அடித்து ஊர் சுற்றி
மினி டிராப்டரை தொலைத்துவிட்டு
அப்பா முன் நின்ற போதும்...


சேலையை யாரோ உடுத்தி கொடுக்க
மணமேடையில் தடுக்கி ஏறும் போதும்...


இப்படிதானே கண்ணே நானும் முழித்திருந்தேன்...


என் விழியின் கதைதானே கண்ணே
நாளை உன் விழியில்....





Comments

  1. அருமையான நினைவலைகள்...வாழ்த்துக்கள் உங்களுக்கு.. பசுமையான வாழ்க்கையில் எல்லோருக்கும் நிகழும் நிகழ்வுகளை அப்படியே கண் முன் நிறுத்தி விட்டீர்கள்...பாராட்டுக்கள்...மேலும் முயற்சி செய்யுங்கள்...வெற்றி காண்பீர்கள்...

    ReplyDelete
  2. நன்றி தேவாதிராஜன்.....

    ReplyDelete
  3. ஐயோ மிக அருமையாக இருக்குது.....

    ReplyDelete
  4. //இறுக தலை வார காத்திருக்கும் அம்மா முன்
    தலை நனைத்து
    ஈரம் சொட்ட சொட்ட நின்ற போதும்...//

    இது இப்பவும் இருக்குது எங்க வீட்டுல மீண்டும் சொல்லுறேன் கவிதை சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....மலரும் நினைவுகள்....
      நன்றி....

      Delete
  5. இசைப்பாக்களில் மட்டும் அல்ல
    வசன கவிதைக்கும் கூட
    பல்லவி அனுபல்லவி சரணங்கள் உண்டு
    என்பதை மிக அழகாக விளக்கிப் போகும் பதிவு
    தொடக்கமும் தொடுப்பும் முடிவும்
    மிக நேர்த்தியாக அமைந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அளவுக்கு அறிவோ யோசிக்கும் திறனோ எனக்கு கிடையாது. உங்களின் பாராட்டை பெற்றதே மகிழ்ச்சிதான்....
      நன்றி ரமணி அவர்களே....

      Delete
  6. விழிபிதுங்கும் முழித்தலுக்கு
    எவ்வளவு விளக்கம் சொல்லிவிட்டீர்கள்...
    அத்தனையும் ரசனையாய்...அழகு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்....

      Delete
  7. இப்படிதானே கண்ணே நானும் முழித்திருந்தேன்...


    என் விழியின் கதைதானே கண்ணே
    நாளை உன் விழியில்....

    தாய்மையின் புரிதல்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதற்காக தான் இந்த கவிதையை எழுதினேன், ராஜேஸ்வரி......

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

பெண்ணென - பெண் படைப்புகளின் நிலை

பெண் படைப்பாளர்கள் தமிழ் இலக்கிய படைப்புலகம் கடல் போன்றது. நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் பாலின, வயது பேதமில்லாமல் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். காதல், சமூகம், அதன் பிரதிபலிப்புகள், இயல்புகள், பிரச்சனைகள் என்று அனைத்தையும் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஒருவரின் முதல் தொகுப்பாக வெளிவரும் புத்தகத்தில் இருக்கும் கவிதைகள் கூட தேர்ந்தேடுக்கப்பட்டவைகளாக வாசிக்க தகுந்தவைகலாக இருக்கின்றன. அதற்கு மூத்த கவிஞர்கள் சில பல விதிமுறைகளுடன் உதவி வருவதையும் காணமுடிகிறது இங்கு. ஒருகாலத்தில் சிற்றிதழ்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள் போன்றவற்றில் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்து சலித்துப்போன கவிஞர்கள், காலமாற்றம் காரணமாக இன்றைய கவிஞர்கள் (வயது வித்தியாசம் இல்லை) இணையத்தின் வழி செய்வதை கண்டு வியப்பதில் ஆச்சரியமில்லை. முகநூலில், இணையங்களில் விருப்ப குறியீடுகளின் மதிப்பீட்டில் வாழும் பெரும்பாலான கவிஞர்கள் அதிலிருக்கும் விமர்சனங்களையும் ஏற்கிறார்கள். அங்கு எழும் 'ஆஹா, ஓஹோ' வுக்கும் ஏமாறுகிறார்கள். தனிதனி குழுக்கள் அமைத்து எல்லோருடைய கவித்திறமைகளையும் வளர்க்கிறார்கள். அவற்றில் நடத்தப்படும் போட்டி