Thursday, 3 May 2012

சுமையும் வலியும்.....





"Pain"
Acrylic Painting By me
Size : 22 x 14 inch



அமரும் பட்டாம்பூச்சியால்  
பூவுக்கு சுமையில்லை....

ஆங்காரமாய் ஓடும் ஆற்றினால்
நாணலுக்கு வலியில்லை....

ஆயிரம் கோடி மாந்தரால்
பூமிக்கு வலியில்லை....

சுகிக்கும் ஆண்
பெண்ணுக்கு சுமையில்லை....

உயிர் கொடுக்கும் தாய்க்கு
மகவு சுமையில்லை....

வலிகளால் ஆன வாழ்க்கை  
மனிதனுக்கு சுமையில்லை....



12 comments:

  1. எவ்வளவு பெரிய உண்மையை இப்படி எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.//அமரும் பட்டாம்பூச்சியால்
    பூவுக்கு சுமையில்லை....// அழகான வரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விச்சு....

      Delete
  2. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எல்லாமே சுகமான சுமைகள்...வலிப்பதில்லை

    படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி....

      Delete
  4. //வலிகளால் ஆன வாழ்க்கை
    மனிதனுக்கு சுமையில்லை....//

    அருமையான உண்மை வரிகள்!.

    ReplyDelete
  5. அருமையான வரிகள் அகிலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எதுவும் எதற்கும் சுமையில்லை.நல்ல வரிகள்.நல்ல ஆக்கம்.இஷ்டப்பட்டு ஏற்கிற வரைஎல்லாமும் நன்றாகவே இருக்கிறது.கொஞ்ச்சம் சங்கடப்பட்டுப்போகிறபோது,,,,,,,?

    ReplyDelete
  7. //கொஞ்ச்சம் சங்கடப்பட்டுப்போகிறபோது,,,,,,,?//

    சுமைகளுக்கும் வலிதான், விமலன்....நன்றி...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....