Skip to main content

விண்மீன்கள்...




டைரக்டர் : விக்னேஷ் மேனன் 

ஒளிப்பதிவாளர் : ஆனந்த் ஜீவா 





கண்ணில் பட்ட விண்மீன்கள்  : 
ராகுல், அனுஜா, விஷ்வா, ஷிகா, பாண்டியராஜன்   


'விண்மீன்கள்' 

திரையில் பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பெயரின் காரணம்தான் தெரியவில்லை. விதவிதமான கதாபாத்திரங்கள் இருந்து ஒவ்வொருவருடைய செயல்களும் படத்தின் கதையில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் பெயர் ஒகே ஆகியிருக்கும். சரி, தலைப்பை விடுவோம்....


செரிபரல் பால்சி (cerebral palsy)

இந்த நோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற ஒரு மாற்று திறனாளியின் கதைதான் இது.புதிதான ஒரு முயற்சிதான்.முற்றிலும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே 'அஞ்சலி' திரைக்கு வந்து 22 வருடங்கள் உருண்டோடிவிட்டது. அந்த திரைப்படம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை பற்றியது. அக்கால கட்டத்தில் அந்த திரைப்படம் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியது. ஆனால் இப்போது ஏதாவது ஒரு நோயை வைத்துகொண்டு படம் பண்ணுவது சகஜமாகிப் போனது. 

நம் நடைமுறை வாழ்க்கையில், அக்கம் பக்கங்களில், உறவினர்  வீடுகளில் என்று இந்த மாதிரி குழந்தைகளை பெற்றவர்கள் அருமையாக ஆதரித்து கொண்டிருப்பதால் இந்த படத்தில் காண்பிக்கும் பெற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் அழுகையும் தியாகமும் புதிதாகவோ பெரியதாகவோ தெரியவில்லை. இல்லையென்றால் நம்மை பாதிக்கும் வண்ணம் திரையில் கண்பிக்கபடவில்லை எனக் கொள்ளலாம்.அதனால் தான் இதை முற்றிலும் புதுமையான முயற்சி என் பாராட்ட தோன்றவில்லை.சரி, செரிபரல் பால்சியை விடுவோம்.... 


காதல் 

இந்த கதையில் காதல் என்பது காதல் மாதிரியும் இல்லாமல் நட்பு மாதிரியும் இல்லாமல்.....டைரக்டருக்கே வெளிச்சம்.அனுஜா ஐயர் எந்த மாதிரி உணர்வை காண்பிக்க என்று தெரியாமல் தடுமாறி 'ஏதோ ஒன்று' என்று வந்து போகிற மாதிரி நமக்கு தோன்றுகிறது. சில காட்சிகளில் ஹீரோயின் ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார். 

எடுத்தவுடன் ஹீரோ காதல், கல்யாணம் என்று சொல்ல,ஹீரோயின் 'no' சொல்ல, ஹீரோ 'friends' என்று சொல்ல(ஹீரோயினை காதலிக்க வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில்), நினைத்தபடியே ஹீரோயின் காதலில் விழ, இப்போது ஹீரோ பல்டி அடிக்க - இதெல்லாம் சாதாரணமாக காதலிப்பவர்களுக்கு பொருந்தும். இவ்வளவு குறுகிய கால கட்டத்தில்,இந்த மாதிரி உடலும் மனமும் ஒருசேர ஊனமுற்றவர்களுக்கு மாறுவது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

செரிபரல் பால்சியின் intensity ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருக்கும் என்று டைரக்டர் ஒரு இண்டர்வியுவில் சொல்லி இருந்தார். அதற்காக இவ்வளவு சீக்கிரமா frameக்கு frameமா? ரொம்ப அநியாயம். சரி, இப்போது காதலையும் விடுவோம்...  


கேமரா    

இந்த ஒன்றைப்பற்றி தான் என்னால் சொல்ல முடிகிறது. மூடுபனி படம் பார்த்த உணர்வு. ஒளிப்பதிவாளர் ஆனந்திற்கு பாராட்டுகள். இந்த படத்தை பொறுத்தவரை காட்சிகளின் தத்ரூபம் நம்மை பிரமிக்கவைக்கிறது. இங்கு கேமராதான் கதையை அழகுபடுத்தியிருக்கிறது.


வானத்திற்கு வெளிச்சம் கூட்டாத வெறும் மீன்கள் 

இந்த கதையை இன்னும் நேர்ப்படுத்தி இருக்கலாம். ஒன்று சிறுவனின் கதையை மட்டும் சொல்லி இருக்கலாம். இல்லை, சிறுவயது கதையை சுருக்கி இருக்கலாம்.டைரக்டர் விக்னேஷ்க்கு ஏறுவதற்கு இன்னும் படிகள் உள்ளன.இளைஞன் தானே...ஏறலாம்... ஆனாலும் துணிந்து இப்படி ஒரு திரைகதையை அமைத்ததற்கு பாராட்டலாம்.    



Comments

  1. விமர்சனத்தினை உங்கள் பாணியில் சொன்ன விதம் அழகு.

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம் சகோதரி..

    பொதுவாக இனம் மாற்றம் பெறும் ஊனமுள்ள
    குழந்தைகள் தவிர மற்ற அனைத்துவிதமான
    ஊனமுள்ள குழந்தைகளையும் பெற்றோர்கள் கண்ணுக்குள்
    வைத்து தான் பார்க்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மகேந்திரன்....

      Delete
  3. விமர்சனம் வித்தியாசமானதாகவும் சுருக்கமாகவும் மிகச்
    சொல்ல வேண்டியதை மிகச் சரியாக சொல்லிப் போவதாகவும் இருந்தது.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந