Skip to main content

இதென்ன பரபரப்பு....


பெண்ணே.....





எழுந்த நிமிடத்தில் இருந்து
சமைக்கவும், ஹீட்டர் போடவும்
வாஷிங் மிஷின்ல துணியை திணிக்கவும்
ஹாட் பேக் தயார் செய்யவும்
ஸ்கூட்டியை கிளப்பி 
முதலில் ஸ்கூலிலும் பிறகு அலுவலகத்திலும்
மாலையில் பாட்மிட்டன் கிளாசில் பையனையும்
டான்ஸ் கிளாசில் பெண்ணையும் இறக்கிவிட்டு
காய் வாங்கி சமையல் முடித்து
மறுபடியும் இருவரையும் சுமந்து வந்து
படிக்க வைத்து, உண்டு, உறங்கி
இடையில் கணவரின் எழுப்புதலுக்கு உடன்பட்டு
மீண்டும் காலை வேளை......

பூக்களுடன் பேச நேரமில்லாமல்....
பட்டாம்பூச்சியை பார்க்க முடியாமல்....
பறவைகளை தொலைத்துவிட்டு தேடாமல்....
சேலை மடிப்பை கூட ரசித்து கட்டமுடியாமல்....
ஓட்டமும் நடையுமாக
இதென்ன பரபரப்பு பெண்ணே....

வாகனங்களின் நெரிசல்களில்
முகமூடியாய் நாம் - நம்
முகத்தை தொலைத்து.....
சத்தங்களின் இடையில்
சாந்தமாய் நாம் - நம்
மனசாந்தியை இழந்து.....





ஓட்டம் குறைத்து
ஒரு நிமிடமாவது நிதானித்து
நிமிர்ந்து பாருங்கள்
வானம் தெரிகிறதா என்று....
வானின் நிர்மூலம் கூட
அழகுதான்.....
அங்கங்கே தெரியும் மேகங்கள் கூட
அழகுதான்......
பறக்கும் காகங்களும் வல்லூறுகளும் கூட
அழகுதான்.....
இவற்றுக்கிடையில் உற்றுப் பாருங்கள்
நம் மனம் லேசாகி பறப்பது கூட தெரியும்
அதுவும் அழகுதான்.....






Comments

  1. பரபரப்பு நிறைந்த வாழ்க்கையில் பரவசம் காணும் முயற்சியிலாவது பெண்கள் இறங்கவேண்டும் என்கிறீர்கள். மிகவும் சரி. வாழ்க்கையின் ஓட்டத்துக்கு எரிபொருளாயேனும் இயற்கையின் ரசனை உதவக்கூடும். பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி.....

      Delete
  2. இன்றைய இல்லத்தரசிகளின் நிலைமையை...

    படைப்பாளிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் உங்கள் பதிவில் என்னை தெரிச்சவுங்களா காட்டியதற்கும் நன்றி.....

      Delete
  3. கால ஒட்டத்திற்கு தகுந்தாற் போல நிதானமில்லாமல் ஒடிக் கொண்டிருக்கின்றனர் எப்போது அவர்கள் நிதானிக்க வேண்டும் என்று சிந்திக்க தொடங்குகிறார்களோ அப்போது அவர்கள் வாழ்க்கை வேகமாக ஓடி முடிவுக்கு வந்துவிடுகிறது என்பதுதான் உண்மை

    ReplyDelete
  4. படபடப்பாய் பதற்றமாய் வேகமாக நம் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. நின்று நிதானித்து அருகாமையிலுள்ளவர்களைக் கூட முகம்பார்க்காமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அருமையாகவும் அதே வேகத்துடனும் படைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிதானிக்கவே நேரம் இல்லாத ஒரு வாழ்க்கையை நகரத்தில் உள்ள பெண்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.....நன்றி விச்சு....

      Delete
  5. ஊருக்காகவும் உறவுக்காகவும் மட்டுமே வாழும்போது இந்த சலிப்புகள் வந்து... அதிகமாகி...மன நோயாகவோ... விரக்தியிலோ முடியலாம்....நேரம் கிடைக்காது....நாமே நமக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கி....நம் ரசனைக்கென்று...நமகீன்று ஒரு வாழ்க்கையையும் வாழ ஆரம்பித்தால்.... என்றுமே மகிழ்ச்சி தான்....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் குரு.....

      Delete
  6. மறுப்பதற்க்கு மன்னிக்கவும் உங்கள் கூற்று சரிதான்! ஆனால் எங்கள் வீட்டில் வாஷிங் மெஷின், ஹாட் பேக், காஃபி தவிர எல்லாம் அடியெந்தான், எதிர்வீட்டு மாமா காஃபியும் சேர்த்து ! அம்மா தாயே மறுபக்கங்களும் உண்டு!! எங்களையும் கொஞ்சம் பாருங்களென்,!!??

    ReplyDelete
    Replies
    1. மெஜாரிட்டியை தானே பார்க்க முடியும்....நீங்களும் மெஜாரிட்டி ஆகுங்க, அப்போ பார்க்கலாம்...

      Delete
  7. மனம் கனக்கக் காரணமும்
    அது லேசாகச் சொன்ன உபாயமும்
    மிக மிக அருமை
    எதுவும் வெளியில் இல்லை
    எல்லாமே நமக்குள்ளேதான்
    தீதும் நன்றும் பிறர் தர எப்போதும் வருவதில்லை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நம் மனம் நம்மிடம் இருப்பதையே நாம் மறக்கிறோம். அதன் போக்கில் விட்டாலே அது இந்த வசந்தமான இயற்கையை நமக்கு ரசிக்க கற்று கொடுத்திருக்கும். நன்றி ரமணி அவர்களே....

      Delete
  8. என்ன ஆச்சரியம் சகோ நம் சிந்தனை ஒத்துப்போகிறது இருவரும் ஒரே கருத்தை பதிவாக்கிய விதத்தை சொல்கிறேன் . உதாரணங்களாய் பதிவில் இதே கருத்தை மையமாக கொண்டு நானும் பதிவாக்கயுள்ளேன் .

    ReplyDelete
  9. சசி, உங்க பதிவை படித்து பதிலும் எழுதினேன். நாம் பெண்கள் தானே....ஒரே மாதிரியாகத்தானே யோசிப்போம்

    ReplyDelete
  10. பூக்களுடன் பேச நேரமில்லாமல்....
    பட்டாம்பூச்சியை பார்க்க முடியாமல்....
    பறவைகளை தொலைத்துவிட்டு தேடாமல்....
    சேலை மடிப்பை கூட ரசித்து கட்டமுடியாமல்....
    ஓட்டமும் நடையுமாக
    இதென்ன பரபரப்பு பெண்ணே.

    கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துகொள்வது மாதிரியான அருமையான படைப்புகள்.. பாராட்டுக்கள்.>

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஸ்வரி....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந