Skip to main content

அம்மா என்கிற

பெண் தெய்வம்.....


மகளிர் தினத்தை அன்னையர் தினமாக
எனக்கு நீ மாற்றியதென்ன....
உன்னை மறக்க பல வருட  
அவகாசம் தந்த பிறகும் முடியவில்லையே.....

உன் வயதில் பார்க்கும் அனைவரும்
என் தாயாகி போனதென்ன....
உன் சேலையை உடுத்திய போது
உன்னையே உணர்ந்ததென்ன....
முகம் காட்டும் கண்ணாடி கூட
உன் முகத்தையே என் முகமாக காட்டியதென்ன....

உன் சமையல் எனக்கு தெரியாது
உன் வேலை நேர்த்தியும் என்னிடம் கிடையாது
உன் பொறுமை என்னிடம் இல்லை 
உன் தைரியம் மட்டுமே என்னிடம்
அதுவே என் பொக்கிஷமும்......

உன் பெயர் பொறித்த என் வீட்டு பாத்திரங்கள்
உன் வாசனையுடன் என் பொன் நகைகள்
உன் விருப்பத்துடனான என் படிப்பு - மொத்தத்தில் 
உன் அடையாளங்களுடன் எப்போதுமே நான்...... 


Doris Day's 'Que Sera Sera...' song
This song is one of my childhood favorites
and i used to sing it to my mother
Dedicating to my mother...



Watch in YouTube

Lyrics




Comments

  1. அம்மாவை வணங்குகிறேன். "உன் அடையாளங்களுடன் எப்போதுமே நான்...... "
    அன்னையை நினைத்து அற்புதமான கவிதையை வடித்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விச்சு.....

      Delete
  2. உன் சேலை உடுத்திய போது உன்னையே உணர்ந்தேன். அருமை அகிலா. அன்னையின் ஏக்கத்தை அழகுற உரைத்தது கவிதை. மிக ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. படிக்கும் காலத்திலேயே இதே நாளில் என் தாயை இழந்த நினைப்புதான் இந்த கவிதை.....
      நன்றி கணேஷ்......

      Delete
  3. நமது பண்பாட்டில் தாய்க்கு தான்
    உச்ச ஸ்தானம். அம்மாவே தெய்வம் என்று நமது சாத்திரங்கள் கூறும். அம்மாவைப் போல எதையும் திரும்ப எதிர்பாராத அன்பு செலுத்தக் கூடியவர்கள் எவரும் இலர் என்பதே என் கருத்து.
    தாய் இருக்கும் வரை கவலை என்பதே மனிதனுக்கு இல்லை. செல்வம் அனைத்தும் அழிந்த பின்னும் அம்மா என்று அழைக்க வீட்டில் தாய் இருந்தால் போதும் அன்னம் அளிக்கும் தெய்வமே இருப்பதாக பொருள்.
    தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது.
    ஒரு நல்ல ஆசான் (வழிகாட்டி) பத்து (கல்வி போதிக்கும்) ஆசிரியர்களுக்கு சமம். ஒருவருடைய தந்தை நூறு ஆசான்களுக்கு சமம். ஆனால் தாயின் அன்பு தந்தையின் அன்பை விட பத்து மடங்கு அதிகம். நம்மைத் தாங்கும் நிலத்தை விட தாய் பெரியவள். தாயை விட பெரியவர் எவரும் இலர்.
    தாயை போற்றிப் பாதுகாக்காமல் விட்டுவிடுகிற பிள்ளைகளை நமது கலாசாரம் ஏற்றுக் கொள்வதில்லை. மிகவும் பாவமான காரியம் தாயை அவமதிப்பது

    ReplyDelete
    Replies
    1. தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது.//
      உண்மைதான் ராஜன்.....

      Delete
  4. அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதர் இல்லை பட்டை முழுசாக்கேட்டாலே கண்ணீர் பொத்துகிட்டு ஊற்றும்....நேரில் பார்க்க முடிந்த ஒரே தெய்வம்....அம்மா......

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் குரு...
      எத்தனை வருடங்கள் அவள் இல்லாமல் கடந்தாலும்
      அவளின் ஞாபகங்களை மட்டும் கடக்க முடியவில்லை.....
      கடைசிவரை நம் தாய் நம்முடன் வேண்டும் என்கிற ஆதங்கம் மனதுள் இருக்கிறது. அந்த கொடுப்பினை இல்லாதபோது என் செய்வது?.....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி