Skip to main content

கண்ணாடி போதாதா....



கிளியும் கிண்ணமும் எதற்கு மகளே?


Reproduction of Ravi Varma's by me.... 


செப்பு உதடும் செதுக்கிய மூக்கும் 
சுருள் முடியும் சுறுசுறு கண்களும் 
காது கடுக்கணும் கால் கொலுசும் 
என் அழகு தேவதையே

என் குட்டி பதுமையின் 
தலைவாரி பொட்டிட்டு
அலங்கார ஆடை உடுத்தி 
உச்சி முகர்ந்து திருஷ்டியும் கழித்து 
உன் பிஞ்சு கன்னத்தில் முத்தமிட்டு 
வா மகளேஉலகம் பார்க்க செல்வோம்.....
இந்த உலகம் பார்க்க செல்வோம்.....



Comments

  1. ரவி வர்மாவின் ஓவியத்தை
    அதன் அழகும் நேர்த்தியும் குறையாது
    மிக அழகாக வரைந்தும் அதனைப் பதிவாக்கித்
    தந்தமைக்கும் மனமார்ந்த நன்றி
    கவிதையும் அதற்கான விளக்கமாக அமைந்த பதிவும்
    மிக மிக அருமை
    சரியாகச் சொன்னால் சொக்கிப் போனது மனது
    எனத்தான் சொல்லவேண்டும்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர்ந்து தர வேண்டுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்கு நன்றி, ரமணி அவர்களே....

      Delete
  2. உங்களின் கை வண்ணத்தில் உருவான ஓவியத்தைக் கண்டு ரசித்தேன், வியந்தேன். அருமை. கவிதையும் மனதைக் கொள்ளை கொண்டது. அவ்வப்போது உங்கள் (ஓவிய) கைவண்ணத்தை வெளியிடுங்கள் தோழி.

    ReplyDelete
  3. நன்றி தோழி
    ஆனா இப்ப செப்பு உதடுகள் இல்லையே சாயம் பூசிய பொய்மை இல்லை பெண்மைகள் இல்ல இறுக்கு,செதுக்கிய மூக்கு அது என்னவோ சரிதான் இப்ப எல்லோர் மூக்கிலும் செதுக்கி செதுக்கி நிறைய ஓட்டைகள் அதுல மூகுதியா இல்லை சீரியல் பல்புனே தெரியல தலை வாரி பூசுடி, உண்மையில் அப்படி எல்லாம் இருக்கா எனக்கு என்னமோ டவுட் நீங்க டைம் மெசின் ஏறி 19 நூறு ட்டண்டுல இருந்து தப்பா வந்திடீன்களோ

    ReplyDelete
  4. அன்பு சகோதரி..
    ஓவியத்தின் வித்தகர் ரவி வர்மாவின்
    ஓவியப்படைப்பின் சிந்தை தவறாத
    அழகிய ஓவியம்..

    அதற்கேற்ற நெஞ்சில் நிற்கும்
    இனிய பாடல்..
    படித்து படித்து
    பார்த்து பார்த்து ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்...

      Delete
  5. ரவிவர்மாவின் இந்த படைப்பை இதுவரை கண்டதில்லை! கவிதை நன்று! இன்னும் மெருகேற்றுங்கள்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி....

      Delete
  6. உங்கள் ஓவியம் அழகு. அதுவும் குட்டிக் குழந்தை குனிந்து கண்ணாடி பார்ப்பது கொள்ளை அழகு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, விச்சு....

      Delete
  7. உலகைப் பார்க்க மகளை கிளப்பும் தாயின் பாடலும்,ஓவியமும் ந்ன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விமலன் அவர்களே...

      Delete
  8. உங்கள் ஓவியம் அருமை...ரவி வர்மாவின் படைப்பும் அருமை...தொடரட்டும் உங்கள் ஓவியபணி..
    நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...

    ReplyDelete
  9. நன்றி ராஜா.....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி