நிறுத்து.......
 |
sketched by me |
ஒன்றை நினைத்து ஏங்குவது
மற்றொன்றை நினைத்து மருகுவது
அடுத்ததை நினைத்து அலைவது
எத்தனை நினைப்புதான் உனக்கு
நிறுத்து மனமே
உன் லீலைகளை
உன்னால் நான் படும்பாடு
மாறாதே ஒரு எண்ணத்திலிருந்து
மாற்றாதே என்னையும்
நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாமோ?
அழகு...
ReplyDeleteநன்றி சௌந்தர்......
Deletevery nice
ReplyDeletethanx krishnalakshmi.....
Deleteதாவிச்செல்லும் மனதிற்கும்
ReplyDeleteகடிவாளம் போட்டுவிடத் துடிக்கும்
அழகுக் கவிதை..
வரைபடம் மிக அழகு சகோதரி.
மிக்க நன்றி மகேந்திரன்.....
Delete//எத்தனை நினைப்புதான் உனக்கு
ReplyDeleteநிறுத்து மனமே
உன் லீலைகளை //
உண்மைதாங்க... மனது தன் லீலைகளை நிறுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை...
நன்றி....
Deleteநல்ல கவிதை.
ReplyDeleteஅருமையான ஓவியம். இன்னும் முயற்சி செய்யுங்கள்.
வாழ்த்துகள்.
உங்கள் வருகைக்கு நன்றி ஐயா....
Deleteஅருமையா சொல்லிட்டிங்க போங்க!
ReplyDeleteமிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in
இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in
நல்லவைகளை எழுதுவது மகிழ்ச்சியான ஒன்றுதான். செய்கிறேன் சூர்யா.....நன்றி...
Deleteமனம் ஒரு திமிரெடுத்த கிடா
ReplyDeleteஅது வளர்ந்த்தவன் மேல் பாய்வதிலேயே
அதிக அக்கறை கொள்ளும்
ஐம்புலனால் பாலூட்டி வளர்க்கப் பட்டாலும்
ஐம்புலனையும் படுத்தி எடுப்பதில் அதற்கு ஈடு அதுதான்
மனம் ஒரு போர்வாள்
அதன் கூர்மைதான் அதன் சக்தி
மொட்டைக் கத்தியால பயனில்லை
கத்தியை கூர்மையாகவும் உறையிலிட்டும்
தேவையான போது திறம்பட பயன்படுத்தத் தெரிந்தவன்
புத்திசாலி.சிறந்த வீரன்
தன்னையே தாக்கிவிடுமென கூர்மையின்றி வைத்திருப்பவன்
கோழை.முட்டாள்
சிந்தனையை கிளறிச் செல்லும் அருமையான பதிவு
கவிதை சட்டெனத் துவங்கி சட்டென அடைமழை போல்
முடிந்ததைப் போல் இருந்தது
மனம் குறித்த தங்கள் பதிவு
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் கருத்தே கவிதையாகிவிட்டது, கவிஞரே....
Deleteமனமில்லாத மனிதர்கள் ஏற்கனவே நிறைய இருக்கிறார்கள். உங்கள் கற்பனையும் நீங்கள் தீட்டிய ஓவியமும் நன்றாகவே உள்ளது.
ReplyDeleteநன்றி விச்சு.....
Deleteமனம் ஒரு கரையில் நிற்பதில்லை என்பதை தெளிவாக சொல்லி இருக்கீங்க....!!!
ReplyDeleteநிஜம்தானே நண்பரே....
Delete