Skip to main content

உதயமான இனிய புத்தாண்டு






போன வருடத்தின்(நேற்றுதான் !!!!) கடைசி நாளிலிருந்தே நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு மற்றும் முகம் தெரிந்தவர்கள், முகம் தெரியாதவர்கள் (முகநூலைதான் சொன்னேன் ) என்று எல்லோருக்கும் SMS அனுப்ப ஆரம்பித்திருப்போம். 


நானும் அப்படிதான் செய்து கொண்டிருந்தேன். எனக்கு ரயில் சிநேகிதிகள்/சிநேகிதர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு.குடும்பத்தில் ஒவ்வொரு உறவுகளும் ஒவ்வொரு ஊரில் போய் வசிப்பதால் வரும் சுற்றல்தான் இது.  ஓரிரு ரயில் சிநேகிதங்களை தவிர மற்றவர்கள் யாரும் என்னுடன் போனில் தொடர்பில் இல்லை. சில சமயங்களில் அந்த தொடர்புகளை contact list இல் இருந்து நீக்கி விடலாமா என்று கூட யோசித்ததுண்டு.





இன்று காலையில் இருந்தே சமையல் வேலைகளுக்கு இடையில்  சுற்றமும் நட்புமாக போன் மேல் போன் செய்து கொண்டிருக்க அல்லாடி கொண்டிருந்தேன். செடிகளுக்கு பூச்சி மருந்து அடிப்பவன் வேறு. இன்று வந்தால் தானே அவனும் ஐம்பது ரூபாய் சம்பாதிக்க முடியும்.  அவனுக்கு வடை எல்லாம் கொடுத்து அனுப்பிவிட்டு வந்தால் மறுபடியும் போன்.


இந்த முறை என்னை ஆச்சிரியபடுத்தியது அந்த அழைப்பு - எதிர்பாராத ஒரு ரயில் சிநேகிதியிடம் இருந்து. ஒரு வருடத்திற்கு முன் சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் போது ஏற்பட்ட ரயில் சிநேகிதம். என்னைப்போல நிறைய பெண்களை என் ரயில் பயணத்தின் போது சந்தித்திருக்கிறேன். கணவர் ஒரு ஊரிலும் வேலையில் இருக்கும் பிள்ளைகள் சென்னையிலும் சொந்த ஊர் வேறு பக்கமாகவும் இருக்கும். பெண்கள்தான் பெரும்பாலும் இந்த முக்கோணத்தில் பயணித்துக் கொண்டிருப்பார்கள். 


அந்த மாதிரி பயணித்து கொண்டிருந்தவர்தான் இந்த சிநேகிதியும். ஒரே அலைவரிசையில் (இருக்கையில் அல்ல ) இருவரும் இருந்ததால் விஷயங்களை பறுமாறிக்கொள்ள வசதியாக இருந்தது. ரயில் நிலையத்தில் இறங்கியுடந்தான் நான் அனைத்தையுமே மறக்க நம் வீட்டில் இருக்கும் ஆண் மக்கள் பல கவலைகளை ரெடியாக வைத்திருப்பார்களே.... புண்ணியவான்கள்....அப்படி மறந்து போனதுதான் இந்த சிநேகிதமும். இதை தான் 'ரயில் சிநேகிதம்' என்பார்களோ.


இன்று அவர்கள் பேசி எனக்கு வாழ்த்து சொன்னதும், நான் அவர்களுக்கு சொல்லவும் எங்கள் உரையாடல் ஒரு மூன்று நிமிடம் தான் நடந்தது. பிறகு பேசுவதாக சொல்லி வைத்தோம். மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது அந்த நிமிடங்கள். காலையில் இருந்தே, சரியாக சொல்ல போனால் நேற்றிலிருந்தே, சம்பிரதாயத்திற்காக பேசி பேசி வலித்த தலைவலி காணாமல் போயிருந்தது. என்னையே புதுப்பித்த உணர்வு வந்தது. நானும் முடிவு செய்தேன் - ரொம்ப நாள்களாக புதுப்பிக்கபடாமல் இருந்த நட்போ உறவோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு இன்று புத்தாண்டு வாழ்த்து கூறுவதென்று. 



என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே....


Comments

  1. வாழ்வினில் துன்பங்கள் அகலும்
    நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
    ஆண்டிது பிறந்தது 2012.

    உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  3. வித்தியாசமான புத்தாண்டு சிறப்புப்பதிவு அருமை
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஹலோ மேடம்.. வீட்டுக்கு வந்தா எல்லாத்தையும் மறக்கடிக்க பெண்களும் பல கவலைகளை உற்பத்தி பண்ணி வச்சுக்கிட்டு ஆண்களுக்காக காத்துட்டிருக்காங்கன்றதை மறந்துடாதீங்க... நானும் உங்களைப் போல பல பேரோட உறவைப் புதுப்பிச்சுக்கிட்டேன். அதனால எனக்கு உங்க பதிவு பிடிச்சிருந்தது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மிகவும் அருமை சொன்ன விதமும் ..
    புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி....கணேஷ் அவர்களுக்கு, முன்னே எல்லாம் நீங்க சொன்ன மாதிரி நாங்க மட்டும்தான் கவலையை உற்பத்தி பண்ணிக்கிட்டிருந்தோம். இப்போது எல்லாம் ஆண்களும் எங்களுக்கு சரிசமமா ஆரம்பிச்சிட்டாங்க...அதுதான் எங்களுக்கு கவலையா இருக்கு....

    ReplyDelete
  7. அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்...உங்களின் கருத்துகளை பதித்தமைக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந