Skip to main content

செல்வராகவனின் மயக்கம்தான் என்ன.....





மயக்கம் என்ன....






டைரக்டர் செல்வராகவன் 


           இந்த திரைப்படம் டைரக்டர் செல்வராகவனுடைய அழகான படைப்பு.  படத்தை பார்த்து முடிக்கும் போது படத்தில் இருந்த அமைதி ஒரு நாள் பொழுதாவது நம்மை கலைத்தது நிஜம். இந்த பாதிப்பை ஏற்படுத்திய தனுஷுக்கு பாராட்டு. தனுஷின் நடிப்பு திறன் படத்துக்கு படம் மெருகேறுகிறது என்பதும் உண்மை.



 First half of the film is commercial  about Love and second half is like an art film about Career.  

         இந்த படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் அருமை. அப்படி எத்தனை பேரால் பிரித்து பார்க்க முடியும்? பாடல்கள் படத்தின் கதையோடு ஒன்றி போயிருப்பது சமீபத்தில் வெளி வந்த படங்களில் இதில் மட்டும்தான் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 



  படம் முழுவதும் தண்ணியிலேதான்  (சத்தியமா தண்ணீரோ  , கண்ணீரோ இல்லை )  மிதக்கிறது....கலாச்சார சீரழிவு (Dating , Drinking , Flirting ) படத்தின் முதல் பாதியில் தலைவிரித்து ஆடுகிறது. டைரக்டர் ஒரு பேட்டியில் dating  க்கும் loving  க்கும் என்ன வித்தியாசம் என்பதை நமக்கு ஒரு class  வேறு எடுத்தார்.

             உழைப்பவனுக்கு உடல் வலி அது தீரத்தான் குடிக்கிறான் என்று சொல்லி சொல்லி அந்த வர்க்கத்தையே நம் சமுதாயம் நாசமாக்கிவிட்டது. youth  ன்னா இப்படிதான் dating போவது, தண்ணி அடிப்பது என்று formulate  பண்ணி இந்த தலைமுறையையும் கெடுத்து அடுத்த தலைமுறையையும் கெடுக்கிறார்கள்...ஆமாம் அடுத்து இவர்களின் குழந்தைகளின் DNA யை டெஸ்ட் பண்ணி பார்த்தால், nucleic acid  இருக்காது, ethanol  தான் இருக்கும்.

             நிஜத்தை எடுக்கிறேன் பேர்வழி என்று சின்ன சின்னதாக அங்கங்கே நடக்கும் விஷயங்களை பொதுவாகவே நடப்பதாக காண்பித்து சமுதாயத்தை சீரழிப்பதே திரைபடத்துறையின் பொழுது போக்காகிவிட்டது. 

             
              தலைப்புக்கும் கதைக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது. அவங்க மயக்கத்தில் இருந்தாங்கன்னா மயக்கம் என்ன என்று பெயர் வைப்பார்கள்.... இல்லை, குழப்பத்தில் இருந்தாங்கன்னா குழப்பம் என்ன என்று பெயர் வைப்பார்கள்.....அது அவர்களின் இஷ்டம்.....  



திருவாளர் செல்வராகவன் 





"அடிடா அவள...உதடா  அவள...வெட்றா அவள...."

இந்த பாட்டை அண்ணனும் தம்பியும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.

         திருவாளர் செல்வராகவன், உங்களுக்கு சோனியா அகர்வால் மேல கோபம் இருந்தால் அதை நீங்க பாட்டில சொன்ன மாதிரி  தனிப்பட்ட முறையில் தைரியம் இருந்தா  போய் செய்யுங்க  ... அதை விட்டுட்டு திரைப்படம் மூலமா தீத்துகிறது அவ்வளவா நல்லா இல்லை. திரைப்படம் என்பது அதை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தக்கூடியது.

          ஆண்கள் எல்லோருமே காதல் தோல்வியால் பாதிக்கபடுவதாக நீங்கள் நினைப்பதை திரைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். அப்படி பார்த்தால் திருமணம் என்ற பெயரில் ஆண்கள் பெண்களுக்கு செய்யும் துரோகங்களுக்கு (பத்து keeps வைத்துகொள்வது, ஒருத்தி இருக்கும் போதே இன்னொருத்தியை திருமணம் செய்வது, தான் பெற்ற பிள்ளைகுட்டிகளை நடுத்தெருவில் நிற்க வைப்பது,  வரதட்சணை என்ற பெயரில் பெண்களை கொடுமைபடுத்துவது...) பெண்கள் எல்லாம் சேர்ந்து ஆண்களை

 "அடிடா அவன...உதடா அவன...வெட்றா அவன..." 
என்று கிளம்பட்டுமா...

       சுருக்கமாக சொல்ல போனால், இந்த படம் செல்வராகவனின் இன்றைய தேதிவரை உள்ள வாழ்க்கை வரலாறு. முதல் பாதி சோனியா அகர்வால் செல்வராகவனிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் ....மீதி பாதி கீதாஞ்சலி கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கிற ஆறுதல்கள்....போதுமா மக்களே....இதுதான் செல்வராகவனுடைய மயக்கமும்  குழப்பமும்....  





Comments

  1. முதல் பாதி சோனியா அகர்வால் செல்வராகவனிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் ....மீதி பாதி கீதாஞ்சலி கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கிற ஆறுதல்கள்...///


    அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே....

    ReplyDelete
  3. சூப்பர் விமர்சனம்..."அடிடா அவன...உதடா அவன...வெட்றா அவன..."- தயவு செய்து இப்படியெல்லாம் கிளம்பிடாதீங்க.

    ReplyDelete
  4. பயப்படாதீங்க...அவ்வளவு சீக்கிரமா எங்க வர்க்கத்துக்கு தைரியம் வராது....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந