Skip to main content

பாரதி உன் மேல்......

எனக்கு கோபம்.....




பாரதி உன் மேல் எனக்கு கோபம்
நீ தானே பெண்ணை படிக்க சொன்னாய்
நீ தானே குடும்பத்தை உயர்த்த சொன்னாய்
நீ தானே சமுதாயத்தை முன்னேற்ற சொன்னாய்


படிக்கும் போது அவள் பெண் பிள்ளை
குடும்பத்தை உயர்த்தும் போது அவள் பெண் தெய்வம்
சமுதாயத்தை உயர்த்த போனாலே அவள் பெண்ணல்ல
பேதையான மாதவி......
குற்றம் சாட்டப்படுவது பெண்தான்
சாட்டுவதும் பெண்தான்....


கைப்பையுடன் வேலைக்கு போய்
கவலையுடன் திரும்பும் பெண்ணை
கைக்காட்டி சிரிக்கும் கூட்டம்
ஆண் மட்டுமில்லை பாரதி...பெண்ணும்தான்....


ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே
இந்த சமூக கூட்டம்
தோழனாய் தோழியாய்
சகோதரனாய் சகோதரியாய்
சாதாரணமாய் பார்க்காத சிந்திக்காத
புறம் பேசும் பெண்களின்
புண்படுத்தும் பேச்சுகள்...
இழிவான இந்த பெண்களின் இகழ்ச்சிக்கு பயந்து
மாய்ந்து போன பெண்களை தெரியுமா பாரதி உனக்கு?


உன் கனல் கக்கும் சாட்டையடியால் 
ஆண்களிடம் இருந்து எங்களை சற்று நிமிர செய்தாய்
இன்று நீ இருந்தால் இப்படி பேசும் பெண்களை
என் செய்வாய் சொல்....


வேண்டாம் பாரதி,
நீ மறுபடியும் வேண்டாம்.....


நீ மறுபடியும் பிறந்து வந்தால்
உன் கவிதைகள் செல்லுபடியாகாது; நீ ஆவாய்.....
உன்னையும் 'புதியதோர் கவிஞன் செய்வோமென்று'
தொலைகாட்சியில் உலா விட்டுவிடுவார்கள்......
லிப்ஸ்டிக் போட்டு அமர்ந்திருப்பவர்கள் எல்லாம்
'உன் கவிதை சரியில்லை, உனக்கு எழுத தெரியவில்லை' என்பார்கள்.....
மகாகவி பாரதியை வெறும் பாரதியாக்கிவிடுவார்கள்....


அதனால் வேண்டாம்.....
நீ மறுபடியும் வேண்டாம்
இச்சமுகத்துக்கு......





Comments

  1. சாட்டையடி. பாரதியின் கவிதையைக்கூட கால்மேல் கால்போட்டபடி சரியில்லை என்பார்கள். நல்ல சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் விச்சு, பாரதியையே விற்றுவிடுவார்கள்....

      Delete
  2. கவிதை அருமை.
    அன்று ஜாதியை ஒழிக்க அரும்பாடு பட்டார்கள்.
    இன்று ஜாதி வாரி ஜனத் தொகை கணக்கீடு.
    பாரதியும் பதறிப் போக இன்று ஒன்றல்ல பல காரியங்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். பல அநியாயமான காரியங்களை செய்துவிட்டு இந்த சமூகம் பாரதியை மறந்துதான் போய்விட்டது....
      நன்றி.......

      Delete
  3. ஆமா ஆமா முழுக்க உண்மை தான்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கு நன்றி....

      Delete
  4. //கைப்பையுடன் வேலைக்கு போய்
    கவலையுடன் திரும்பும் பெண்ணை
    கைக்காட்டி சிரிக்கும் கூட்டம்
    ஆண் மட்டுமில்லை பாரதி...பெண்ணும்தான்....

    //
    உண்மைதான் தோழி

    ReplyDelete
  5. நன்றி வலைஞன் அவர்களே.....முதலிலேயே என் பதிவை இணைத்துவிட்டேன்......

    ReplyDelete
  6. பெண்களே.... பெண்களைக் குறை சொல்லக்கூடாது.... என்பது நல்ல கருத்துத்தான்.

    ReplyDelete
  7. பூவாய் தொடுத்தது நீங்கதானே
    மணக்கத்தானே செய்வேன்.....
    நன்றி சசி......

    ReplyDelete
  8. உங்களின் வருகைக்கு நன்றி.....பதித்துவிட்டேன் நண்பரே....

    ReplyDelete
  9. ஆதங்கம் புரிகிறது மீண்டும் ஒரு புரட்சி செய்வோம் சமத்துவ சமுதாயத்தை நிலை நாட்ட ...............வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்வோம் தோழி......நன்றி சரளா....

      Delete
  10. நல்லதொரு பதிவு....ஆனாலும் அனுபவங்களை பதிவிடவில்லைதானே..?:)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு ஏற்பட்டால் தான் அனுபவமா....காதில் கேட்பதை பகிர்ந்து கொள்ளத்தானே இங்கே பதிக்கிறோம்.....
      நன்றி.....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி