Skip to main content

தவ்வை நாவல் குறித்து திரு சரவணன் மாணிக்கவாசகம் உரை

 தவ்வை நாவல் அறிமுகம் 

~ சரவணன் மாணிக்கவாசகம் 

தவ்வை 



தவ்வை - அகிலா:

ஆசிரியர் குறிப்பு:

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என பத்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய நாவல்.

1979ஆம் வருடம். மாடிப்படியில் ஆறேழு பெண்கள் சிரிப்பும் சத்தமுமாய் உட்கார்ந்திருந்தார்கள். காலையில் மணமுடித்த பெண்ணை அதில் ஒருவர் மாடிவரைக் கூட்டிப் போய் விட்டுவிட்டு வந்தார். முன்பின் அறிமுகமில்லா இருவர் எப்படி உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகத்திற்கு அன்றும் என்னிடம் பதிலில்லை. இன்றும் பதிலில்லை.

தவ்வை மணமுடிக்கையில் வயது பதினாலு. கணவன் ராமநாதனுக்கு வயது இருபது. ராமநாதனுக்கு படிப்பு வரவில்லை, வியாபாரம் வரவில்லை. கணக்கு சரிபார்க்க வரவில்லை.  அப்பா இல்லாத பெண் தவ்வையை ராமநாதன் வீட்டில் பெண் கேட்டு வந்தது அவள் அதிர்ஷ்டம் என்றே அவள் அம்மா உட்பட எல்லோரும் நினைத்திருப்பார்கள். பணவசதி மட்டும் பெண்ணுக்கு எல்லாமாக போய்விடுமா!

வீட்டுப்பெண்ணிடம் வன்முறையில் இறங்குபவன் மனதாலோ, உடலாலோ, அறிவாலோ இல்லை ஏதாவது ஒருவிதத்தில் தாழ்வுமனப்பான்மை கொண்டவனாக இருப்பான். ஒரு முழு ஆண்மகனால் ஒரு பெண்ணிடம் வன்முறையில் இறங்கமுடியாது, உணர்ச்சிவசப்பட்ட ஏதோ ஒரு கணத்தில் தப்பித்தவறி அடித்தாலும் அவள் அழுவதைப் பார்த்துக்கொண்டு நிற்க முடியாது.

தவ்வை எண்பத்து ஐந்து வயதைக் கடந்து வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கிறாள். எல்லோரும் கடந்து வந்த வாழ்க்கை அல்ல அது. எல்லாமும் இருந்தும் எதுவுமே இல்லாதது போல் ஒரு வாழ்க்கை. தவ்வையிடம் யாருக்கும் தெரியாத ஒரு இரகசியம் இருக்கிறது. அவள் அதைச் சொல்லப் போவதில்லை. இரண்டு தலைமுறைகள் தாண்டி அவள் பேரனின் மனைவி அதைக் கண்டுபிடிக்கிறாள். ஆனால் அவளும் அதை யாருக்கும் சொல்லப் போவதில்லை.

பதினான்கு அத்தியாயங்கள் சரிபாதியாக நடந்த கதைக்கும் நடப்புக் கதைக்கும் பிரிக்கப்பட்டுள்ளன. அகிலாவின் I named the village எனும் ஆங்கிலக்கவிதைகளில் வரும் அதே வார்த்தை சிக்கனத்தையும், அழுத்தத்தையும் இந்த நாவலிலும் பயன்படுத்தியிருக்கிறார். முழுக்கவே திருநெல்வேலி வட்டார வழக்கில் வரும் நாவல். பெண்ணின் அகஉணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்திருக்கிறது. தவ்வையின் Depressionக்கான காரணம் நமக்குத் தெளிவாகத் தெரிவது, இவருக்கு நாவலில் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டும். நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ என்று இங்கே கதறிய பெண்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்?

#நாவல்கள்

பிரதிக்கு :

டிஸ்கவரி புக்பேலஸ் 87545 07070

முதல்பதிப்பு நவம்பர் 2020

விலை ரூ 250.

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி