Skip to main content

ஆண்கள் !

ஆண்கள் தினம்


ஆண் ! சக மானுடன் ! பெண்ணுக்காய் சலிக்காமல் மாற்றம் காணும் ஜீவன் !

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்து ஆண் என்பவன், ஆணாக, தலைவனாக, அகம் பெரிது உடையவனாக, பெண்ணைத் தனக்குள் ஒளித்து வைத்து பாதுகாப்பவனாக இருந்தான். குழந்தைகளை விட்டு பெரிதும் தள்ளி நிற்பவனாக, வீடு குழந்தைகள் என்பதெல்லாம் பெண்ணின் துறைகள் என்ற நினைப்பு உடையவனாக இருந்தான். இங்கு பெண் ஒரு பேசாமடந்தையாகவே இருந்தாள்.

அறுபதுகளில் எழுபதுகளில் பிறந்த ஆண், பெண் மீதான ஆதிக்கப் பார்வையைச் சற்று தளர்த்தியவனாக இருந்தான். இருந்தும் பெண்ணைக் கவனப்படுத்திக் கொண்டே இருந்தான். குடும்பத்திற்காகத் தன்னை இழைத்துக்கொள்ளும் தியாகத் திருவுருவாக நின்றான். பெண் உழைத்து வந்தாலும் குடும்பம் அவனின் பார்வைக்குள்ளே தான் உழன்று வந்தது. பெண்ணும் அவனுள் பல நேரங்களில் பொருந்தியும் சில நேரங்களில் எதிர்த்தும் நின்று போராடினாள்.

எண்பது, தொண்ணூறுகளில் பிறந்த ஆண், பெண் என்னும் பார்வையை முற்றிலும் மாற்ற முயற்சிப்பவனாக, சக உயிராய் அவளை நேசிக்கக் கற்றுக்கொள்பவனாக, வீட்டுவேலைகளைப் பகிர்ந்துக் கொள்பவனாக, குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவனாக, பெண் என்பவளும் குடும்பப் பொருளாதாரத்திற்காகத் தன் பங்கை ஆற்றவேண்டுமென்ற உணர்வை அவளுக்குக் கொடுப்பவனாகவும் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறான்.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் ஆண், முந்திய ஆணை விட எவ்வாறான வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முப்பது வயதில் இருக்கும் திருமணமான இளைஞன், முன்பு பெண்ணிடம் இருந்த குழந்தை வளர்ப்பு, சமையல், மற்ற வீட்டு வேலைகள் போன்றவற்றை தனக்குள் கொண்டுவருகிறான். வலுக்கட்டாயமாக தன்னை அதற்குள் நுழைக்கிறான். பெண்ணும் அதில் சிறிது ஆசுவாசப்படுகிறாள். அவளால் அலுவலக வேலைகளில் கவனம் கொள்ள முடிகிறது. இதை சற்று ஏற்க மறுக்கும் முந்தைய தலைமுறை பெண்கள் (கவனிக்கவும் ஆண்கள் இல்லை) கவலை கொள்வதைத் தவிர்க்கலாம். 




தலைமுறைகளாய், ஆண் என்பவனே குடும்பத்தின் பழு சுமப்பவனாய் இருத்தப்பட்டு, அங்கே பெண் உழைப்பு இருந்தாலும் 'தகப்பன் மட்டுமே கிரேட்' என்று சொல்லப்பட்டு வந்த கோட்பாட்டு நிலை இன்று உடைக்கப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை. இதை முன்னெடுக்கும் இன்றைய இளைய சமுதாயத்து ஒவ்வொரு ஆண்மகனுக்கும் நான் தலை வணங்குகிறேன்.




Happy Men's Day.. 

~ அகிலா.. 

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி