Skip to main content

மூணாறு தேயிலை தோட்டத்து பெண்கள்..


போராட்ட களம்..



கேரள மாநிலத்தின் மூணாறு தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகள் 2015 யில் ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். அந்த காலகட்டத்தில் அவர்களின் ஒழுக்கம் குறித்தும் அவர்களின் ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு குறித்தும் கேரள மின் துறை அமைச்சரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர்.எம்.எம்.மணி மிகவும் மோசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர் அந்த பெண்கள்.

அவர் அரசு அதிகாரிகள் மீதே ஒழுக்கம் சார்ந்த குற்றம் சுமற்றியதாகவும். ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு போராட்டம் நடந்த காலகட்டத்திலும் இம்மாதிரியான ஒழுக்க சீர்கேடான விஷயங்கள் நடந்ததாக மட்டுமே அமைச்சர் கூறியதாகவும் அவரின் மலையாள பேச்சின் தமிழாக்கம் சுட்டுகிறது.

https://thetimestamil.com/2017/04/24/கேரள-அமைச்சர்-தமிழ்-பெண்/



கேரளா, கம்யூனிசம் பேசும் குதர்க்கவாதிகளை (Critical Thinkers(!) என்றும் சொல்லலாம்) கொண்ட பிரதேசம். இந்த கம்யூனிசம் என்பது பொதுவியலை பேசும் ஓர் அமைப்பு. கம்யூனிஸத்தில் புழங்கிவரும் ‘தோழமை’, ஆண் பெண் என்னும் பால்பாகுபாடை உடைத்தெறிந்த சொல். இதனூடே கலவியல் குறித்து பேசுவோரும் உண்டு. அவ்வாறு உண்டா இல்லையா என்பது அதிலிருக்கும் மனிதர்களின் விருப்பம் சார்ந்தது என்று சொல்லிக்கொள்ளலாம்.

பெண்ணை மட்டுமே குறிக்கும் படிமங்களான, ‘கற்பு’, ‘வேசி’, ‘விபச்சாரம்’ போன்ற சொற்பிரயோகங்கள் கம்யூனிசத்துக்குள்ளும் பேசப்படுவதால், ஆண் பெண் இருபாலாரின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இந்த கம்யூனிச சதுரத்துக்குள் நடுநிலை கொண்டு பார்க்கப்படும் என்று முழுமையாய் நம்புவதற்கில்லை.


அரசு அதிகாரிகள், அரசு விருந்தினர் இல்லத்தை மது போதைக்கும், தவறான பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தியதை சொன்ன அமைச்சர், எதற்காக இந்த பெண்கள் நடத்திய போராட்ட காலத்தை, அதாவது 2015, அதற்குள் இழுக்கவேண்டும்? அந்த போராட்டம் நடத்திய பெண்கள் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக, அமைச்சர் சொன்னதாகத்தானே பொருள் கொள்ளமுடியும். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், பெண் என்பவளின் ஒழுக்கநிலைக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஒவ்வொரு முறையும் ஆண்களின் ஒழுக்கம் சார்ந்த முறைகேடுகள் நடக்கும்போதும் அதை பெண்ணின் மீதே திருப்ப, பெண்ணுக்கு எதிரான அடக்குமுறைக்குள் கொண்டுவந்து நிப்பாட்டவே அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முயற்சிக்கின்றன.

இதன்மூலம் போதைக்காகவே பெண் என்னும் நடைமுறை, ஒவ்வொரு முறையும் இந்த ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறது. பெண்களை மூர்க்கமாய் எழச்சொல்லுகிறது. ‘ஆணாதிக்கம், ஆணாதிக்கம்..’ என்று பெண்கள் முழங்க முழங்க ஆண் சமூகம் சந்தோஷமாய் படையல் சாப்பாடு சாப்பிடுகிறது. கலகத்தை உண்டு பண்ணிய திருப்தியுடன் ஊடகமும் அடுத்த பக்கம் முகம் திருப்பிக்கொள்கிறது.

பெண்களை ஒழுக்கம் கொண்டு ஊனப்படுத்தாமல் தனிமனிதனும் சரி, ஊடகங்களும் சரி, அரசாங்கம் செய்யும் அரசியலாளர்களும் சரி இருப்பதில்லை.

அவர்கள் என்ன இலட்சியத்துக்காக, தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்தும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனை குறித்து அதை 9 நாட்கள் போராட்டத்தில் அடைந்தும்விட்ட பிறகு, இத்தனை மாதங்கள் கழித்து அவர்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கதக்கதே. அவர் கிராமத்து ஸ்டைலில் பேசிவிட்டார், அதுதான் சரியாய் புரிந்துக் கொள்ளபடவில்லை என்றெல்லாம் முதலமைச்சரே சாக்குபோக்கு சொல்கிறார்.



தங்களுக்கு அரசியல் அமைப்புகளின் துணை தேவையில்லை என்று சொல்லி தனித்து போராடி வெற்றி கண்டவர்கள் அந்த தேயிலை தோட்ட பெண்கள் அமைப்பு தோழிகள்.

ஒரு பிரச்சனைக்காக போராடிய பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசி, பெண்ணின் ஒழுக்கத்தை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கி அவளை பலவீனபடுத்தப் பார்க்கும் விஷயங்களைச் செய்கிறார்கள்.

அமைச்சர் சொன்னதை தவறு என்று ஒத்துக்கொள்ளாத முதலமைச்சரும், தான் பேசியது தவறு என்று மழுப்பலாய் ஒரு மன்னிப்புடன் அமைச்சரும், அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என போராடும் பெண்கள் உறுதியாயும் இருக்கிறார்கள்.

பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சமயம் இது. இம்மாதிரியான நிகழ்வுகள் நம்மை சீர்தூக்கி பார்க்கவைத்து சரி செய்துக்கொள்ளவும் முன்னேற்ற வழிகளை காட்டவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. போராட்ட களம் நம்மை உயர்த்திக்கொள்ள வழிவகுக்கட்டும்..

திசை மாறாமல் போராடுங்கள் பெண்களே!!


Comments

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி