Skip to main content

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்..




பெண் குழந்தைகளின் தினம் இன்று.


கள்ளிப்பால் கொடுத்த காலம் கொஞ்சம் கடந்து, குழந்தை திருமணங்களை எதிர்க்கும் தருணம் இது. வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு பெண் குழந்தைக்கு பதினெட்டு வயதுக்குமுன் திருமணம் நடப்பதாக ஐக்கிய சபையின் அறிக்கை கூறுகிறது.

மத்தியதர குடும்பங்களில் இளவயது திருமணங்கள் குறைவு. பெற்றோர் பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க போராடுகிறார்கள். அதனால் அங்கெல்லாம் வாழ்த்துகள் போதும்.

ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பல குடும்பங்களில் பதினைந்து பதினாறு வயதில் பெண் பிள்ளைகளை மணமுடித்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

உடலளவிலும் மனதளவிலும் வளர்ச்சியடையாத பருவம் அது. அந்த வயது திருமணம் என்பது எத்தனை பாதிப்புக்களை அந்த பெண்ணுக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் அவளைச் சார்ந்தோருக்கும் உண்டு பண்ணும் என்பது நாம் அறிந்ததே.


இவர்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். நம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, அருகில் பெட்டிக்கடை நடத்துபவர், நம் தெருமுனையில் சிறுகடை வைத்திருக்கும் டெய்லர் இப்படி.

இம்மாதிரி குடும்பங்களில்தான் நம்மை போன்றோரின் உதவி தேவைப்படுகிறது. பெண்பிள்ளைகளை பெற்றவர்களிடம் பெண்ணை படிக்க வைக்க பேசுவோம். அதுவும், குறிப்பாய் அப்பிள்ளைகளின் தாய்மார்களிடம். அவர்களை சற்று ஊக்கப்படுத்தினாலே கடினப்பட்டு உழைத்து தன பெண்ணைப் படிக்கவைக்க முனைவார்கள். இது என் அனுபவம்.


முடிந்தவரை இளவயது திருமணங்களைத் தடுத்து, படிப்பை ஊக்கப்படுத்துவோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து அதிகமாய் பேசுவோம். பேச பேசவே, சமூகம் நமக்கு காது கொடுக்கும்.

சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்..


Comments

  1. மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அனைவருக்கும் ’சர்வதேச பெண் குழந்தைகள் தின’ நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. all young girls should be given sex education when they reach nineth tenth standard
    the biological physiological changes that occur to girls during adolescent period should be explained to them
    young girls should be taught good touch bad touch...

    ReplyDelete
  4. all young girls should be given sex education when they reach nineth tenth standard
    the biological physiological changes that occur to girls during adolescent period should be explained to them
    young girls should be taught good touch bad touch...

    ReplyDelete
  5. சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.. - முடிந்தவரை இளவயது திருமணங்களைத் தடுத்து, படிப்பை ஊக்கப்படுத்துவோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து அதிகமாய் பேசுவோம். பேச பேசவே, சமூகம் நமக்கு காது கொடுக்கும்.

    சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்..- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Ahila Puhal

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி