Skip to main content

பெண்களுக்கு..

விரல்கள் பத்திரம்..




உறவில் ஒரு பெண்மணியை தற்செயலாக நேற்று சந்தித்தேன்.

அவரின் இரண்டு கைகளின் உள்பக்கத்தில் மணிக்கட்டு முதல் வளையல்கள் நிற்கும் இடம் வரை வெளுத்துப் போயிருந்தது. அரிப்பும் ஏற்பட்டு, அவ்வப்போது சிவந்துவிடுவதாகவும், தானே சரியாவதாகவும் கூறினார்.

காரணம் கேட்டால், 'சமைக்கிறேன், பாத்திரம் கழுவுகிறேன் இத்தனை வருஷமாக, அதுதான்' என்று அதற்கு தெளிவாக ஒரு பதிலும் சொன்னார்.


வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு குணம் இருக்கிறது. மாங்கு மாங்கென்று நேர்ந்துவிட்ட மாதிரி சமையல்கட்டில் வேலை பார்ப்பார்கள். அந்த நேரத்தில், தன் கைகள், விரல்கள், முகம், கழுத்து எல்லாம் சேதமாவதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். புத்திசாலித்தனமாக பொறுமையாக அந்த வேலையை செய்யும் தன்மை கிடையாது என்பது வருத்தமான விஷயம்.


சில விஷயங்களை சமையல் செய்யும்போது கவனித்து செய்தாலே போதும்:

1. காய் நறுக்கும்போது, அருவாமனையை தள்ளி வைங்க. கட்டர் பயன்படுத்துங்க. அப்படியே அருவாமனையைப் பயன்படுத்தினாலும், காய்கறிகளுடன் சேர்த்து அழுத்தம் கொடுக்கும் பெருவிரலில் சிறுசிறு கீறல்கள் விழாமல் நறுக்குங்க. நம்ம விரல் அழகை நாமதான் பார்த்துக்கோணும்.

2. தாளிக்கும்போது, சமையல் எண்ணெய் முகத்தில், கழுத்தில், கையின் உள்பாகங்களில் தெறிக்காமல் தள்ளி நின்று வேலை செய்யுங்க. பொட்டு பொட்டாக சுட்டுக்கொண்டு நிற்பதற்கு, இது ஒன்றும் வீரத்தழும்பு இல்லை.

3. பாத்திரம் கழுவும்போதும், அதன் பின்னும் கையில் பாத்திரம் கழுவுவதற்கான சோப்/பவுடர்/திரவம் சுத்தமாய் இல்லாதவாறு கைகளை நன்றாக கழுவுங்க. அப்போதுதான், நான் சொன்ன அந்த பெண்மணியின் கைகளில், இத்தனை வருட அனுபவத்தில், அந்த கெமிக்கல் அரித்திருந்தது போல வராமல் இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால், கைகளையும் கால்களையும் நன்றாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று எங்கும் சட்டம் இல்லை.

நீட்டாக பட்டுபுடவை கட்டி, நகை போட்டு அலங்காரம் பண்ணிக்கிட்டு, இன்னாரின் மனைவி நான், அவர் என்னை இவ்வளவு செல்வசெழிப்பில் வைத்திருக்கிறார் என்று கல்யாணவீடுகளில் காட்டிக்கொள்வதைவிட, நம் உடலை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதையும் கவனிக்க பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

அப்புறம் நம்ம வீட்டு ஆண்கள், அடுத்த பெண்களைப் பார்த்து ஆசைப்படுவதை நிப்பாட்டிட்டு, நம்ம விரல்களையும் பார்த்து, வெண்டைகாய் மாதிரி (அட..அப்போவும் சமையல் பொருள்தான் ஞாபகத்துக்கு வருது.) இருக்குன்னு கொஞ்ச மாட்டாங்களா என்ன..

அவங்களை விடுங்க, நம்ம பிள்ளைங்க நாம நல்லாயில்லைன்னா, ஸ்கூலுக்கு வராதேம்மா, அப்பாவே வரட்டும்னு சொலவதையும் கேட்கிறோம்.

யோசிங்க.. வீட்டில் இருந்தாலும் அழகாய் ஆரோக்கியமாய் இருக்க முயற்சிப்போம். இதை படிக்கும் ஆண்கள் உங்க வீட்டு பெண்களிடம் சொல்லுங்க. 




Comments

  1. உண்மை.... கண்டிப்பாக செய்ய வேண்டியவை இவை...

    ReplyDelete
  2. ji you have to include the maintenance of nails properly cut...
    i have seen many educated ladies not cutting their nails properly.. as the result you can find scars on their childrens cheeks poor children...

    ReplyDelete
  3. ji you have to include the maintenance of nails properly cut...
    i have seen many educated ladies not cutting their nails properly.. as the result you can find scars on their childrens cheeks poor children...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி