Skip to main content

குழந்தைகளை குழந்தைகளாகவே..




ஒரு காலத்தில, நம்ம பாட்டி தாத்தா பேசிகிட்டு இருக்கும் போதெல்லாம், நாம நின்னு வாய் பார்த்தோம் என்றால், 'போ, அந்த பக்கம்ன்னு...' துரத்திருவாங்க. 

அடுத்தது, நம்ம அம்மா அப்பா....அவங்க பேசும் போது, குறுக்கே பேசினால் (பேசுவோம்...அவ்வளவு வளர்ந்துட்டோம்னு காமிச்சுக்குவோம்...), 'பெரிய பொம்பளையாட்டம் பேச வந்துட்டான்னு ...' நம்மளை ஒதுக்கிருவாங்க. வேற வழி இல்லாம நாமளா அந்த இடத்தில் இருந்து நகந்திருவோம். 

என் பையனை வளர்க்கும் போது, எதை அவனை வச்சுக்கிட்டு பேசணுமோ, அதை மட்டும் பேசுவோம். மற்றதை அவன் இல்லாதப்போ பேசுவோம். அப்படி பெற்றோராக இருக்கோம்..


இப்போ அப்படியில்லை...சில பெற்றோர்கள் சின்ன குட்டிஸ் முன்னாடி எதையெல்லாம் பேசக்கூடாதோ (Always love you, I love U, Hug me )...., எதையெல்லாம் செய்யக்கூடாதோ (Hugging, Kissing )...அதையெல்லாம் செய்வது என்ற போக்கில் போகிறார்கள். இதை பார்க்கும் அந்த குழந்தைகள் பள்ளியில் போய் இவங்க செய்வதை அங்கு செயல்படுத்தும் போது, அது ஒரு பிரச்சனையாய் ஒழுக்கமின்மையாய் அங்கு பார்க்கப்படுகிறது. அதில் தவறில்லை. 


இளம் தலைமுறையினருக்கு: 

தினமும் நம் குழந்தைகள் சமூகத்துக்குள் (பள்ளி, கல்லூரி, சிறப்பு வகுப்பு...) சென்று வருகிறார்கள் என்பதை பெற்றவர்கள் உணரவேண்டும். சமூக கோட்பாடுகளுடன் ஒத்து வாழ அவர்களுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கவேண்டும். 

கணவன் மனைவி என்பதில் இருந்து அம்மா அப்பா என்னும் ஒரு பொறுப்பிற்கு தன்னை அவர்கள் உயர்த்திக் கொள்ளவேண்டும். 

ஒட்டி உரசும் செயல்களில் சில கண்ணியங்களைக் கடைபிடிக்க வேண்டும். 

நல்லொழுக்கம் நம்மிடம், நம் குடும்பங்களில் இருந்துதான் சமூகத்துக்குள் போகிறது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். 

உறவுகளை சகஜப்படுத்தும் மேல்நாட்டு கலாசாரங்கள் என்றும் நம் இந்திய சமூகத்துள் ஒத்துப்போகாது என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும். 

ஒரு சமூகத்தைப் பார்த்து இன்னொரு சமூகம் சமன் செய்து கொள்ளமுடியாது. ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டமைப்புகள் கொண்டவை.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சமூக கோட்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதை புரிந்து செயல்படவேண்டும்.



குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கவிடுவோம்..




Comments

  1. பயனுள்ள இந்தக்கட்டுரை மிகவும் பொறுப்புடன் எழுதப்பட்டுள்ளது. அனைவரும் இதனை யோசித்து உணர்ந்து செயல்பட வேண்டும்தான்.

    //குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கவிடுவோம்..//

    :) ஆம். நிச்சயமாக ....

    படத்தேர்வுகளுக்கும் சேர்த்து பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அருமை
    தொடர்க

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி