Skip to main content

விதவிதமாய் பொய்..

விதவிதமாய்..
சத்தியமும் நேர்மையும் நம் பாட்டன் பூட்டனிடமிருந்து, நம் தாய் தந்தையர் வழி நம்முள் பதிந்து இருக்கிறதுதான். இருந்தும், அழகியலுக்காக சொல்லப்படும் (White Lies) சிறு பொய்கள் நமக்கு ரொம்ப பிடிச்சு போகுதுங்க.

'நேத்து வந்து கதவு தட்டினேன், நீங்க வெளியே வரல..' என்ற பூக்காரியின் பொய் பிடிக்கும், நேற்று மாலை முழுவதும் வாசலில் தோழிகளிடம் பேசிக்கொண்டே நின்றது நினைவில் வந்தும்கூட. இந்த சிறு பொய், அவளுக்கு நம்ம மேல எவ்வளவு அன்பு இருக்குன்னு காட்டுதுங்க. உங்களுக்காகவே வந்து கதவு தட்டினேன், அப்படிங்கிற அவளின் வாய்ஜாலமும் அழகுதான் போங்க. 



கல்யாண வீட்டுக்கு ஏதோ ஒரு சேலையை சுத்திகிட்டு போனா, அங்கே ஒரு அம்மணி 'உங்க saree சூப்பருங்க..' என்று பொய் சொல்லுவாங்க. நமக்கே தெரியும் அந்த சேலை அவ்வளவா நல்லாயில்லைன்னு. அந்த பொய் கூட பிடிச்சுப்போய் அப்படியே சிரிச்சுகிட்டு நிக்கக்கூடாதுங்க. எதுக்கு சொல்றாங்கன்னு யோசிக்கணும். திருப்பி பதிலுக்கு, உங்க சேலை இன்னும் சூப்பர்ங்கன்னு சொல்லணும். அப்போ அம்மணி முகத்தில தெரியும் பாருங்க ஒரு ஜொலிப்பு, அது எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காதுங்க. அப்புறம் அந்த சேலை நெய்த கதையில் தொடங்கி, இப்போ கட்டிக்கிட்டு வந்த கதை வரைக்கும் சொல்லத் தொடங்கிருவாங்க. அதுக்கு முன்னாடி இடத்தைக் காலி பண்ணிரனும். ஒரு நோக்கத்தோடு சொல்லப்படும் இந்த மாதிரி பொய்கள் Grey Lies.

சொத்து பிரச்னையை சரிசெய்ய திருநெல்வேலி வரை சென்று வீரபாண்டிய கட்டபொம்மனாய் வென்று வந்த நட்பு ஓன்று,'உங்களுக்காக அல்வா வாங்கிட்டு வரணும்னு நினைச்சேன், ஆனா, நீங்கதான் எது கொடுத்தாலும் வாங்கமாட்டீங்களே..' என்று கூசாமல் சொல்லும் பொய் கூட அழகுதாங்க. (அல்வா வாங்கிட்டு வந்து, காசு கொடுங்கன்னு கேட்டா நாம கொடுக்காமலா போகப்போறோம். அவ்வளவு நம்பிக்கை நம்ம மேல )


'ஏங்க, போன தடவை எடுத்த டெஸ்ட்டில் இருந்த கொலஸ்ட்ரால் அளவைவிட இந்த தடவை அதிகமா இருக்கே, டையட், வாக்கிங் எல்லாம் பாலோ பண்றீங்களா,இல்லையா..' என்ற டாக்டரின் கேள்விக்கு, 'oily items யை தொடுறதே இல்ல, தினமும் வாக்கிங் போறேன்னு நாமளே அவர்கிட்டே ஒரு பொய் சொல்லுவோம் பாருங்க. இது நம்ம நாமளே ஏமாத்திக்கிற பொய்ங்க. நம்மை நாமோ அல்லது அடுத்தவர்களையோ ஏமாற்றுகிற பொய்தான் கருப்பு பொய்கள் (Black Lies). இதை மட்டும் விட்டுட்டு மத்த பொய்யெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொல்லிக்கலாம். 


'உன் கையெழுத்து பார்க்க நல்லாயிருக்கு'(கோழி கிண்டலா அது இருந்தாலும்)
'இன்னைக்கு சைடு டிஷ் சூப்பரா வச்சிருந்தே'(வாயில் வைக்கமுடியாம மகாகேவலமாக இருந்தாலும்)
'சீக்கிரமா ஹோம்வொர்க் முடிச்சிட்டியே'(பையன் கூட உட்கார்ந்து ஹெல்ப் பண்ணி, டிவி சீரியல் எல்லாம் பார்க்க முடியாம மிஸ் பண்ணினாலும்)
'உங்களுக்காக சினிமாவுக்கு கூட போகாம வெயிட் பண்றேன்' (லேட்டா வந்ததுக்காக மனசுக்குள்ளே திட்டிகிட்டு இருந்தாலும்)

இப்படி சின்ன சின்ன பொய்கள் நம்மை, நம்மை சுற்றியிருப்பவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கும்ன்னா, அதை சொல்வதில் தப்பில்லைங்க. 






Comments

  1. மனதை காய படுத்தாத பொய்கள் இனிக்கும் ....

    ReplyDelete
  2. நிஜம் தான். சில நேரம் பொய்கள் அவசியமாகின்றன.
    அருமையான பதிவு.
    மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா..

      Delete
  3. பொய்யில் உண்மையா
    இத்தனை வகை இருக்கா
    உண்மையாகச் சொன்னால்
    பொய் குறித்துச் சொல்லிப் போனவிதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா

      Delete
  4. அருமையான பதிவு

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  5. சின்ன சின்ன பொய்களை பற்றிய அருமையான அபாரமான அட்டகாசமான பதிவு. இதையும் பொய் என்று நினைத்து அடுத்த பதிவில் போட்டுவிடாதீர்கள்.

    சென்ற வருடம் சக பதிவர் பரதேசி (paradesiatnewyork) அவர்களின் தலைமையில் நியூயார்க் நகரில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் "நல்ல செய்திட பொய் சொல்லலாம், சரியே ! தவறே" என்ற பட்டிமன்றத்தில் சரியே என்று அடியேன் பேசி எங்கள் அணி வெற்றி பெற்றது நினைவிற்கு வருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...போடமாட்டேன்..
      நல்லவைகளுக்காக பொய் சொல்லலாம்..உண்மைதான்..

      Delete
  6. பொய்மையும் வாய்மை இடத்த

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவரின் வாக்கு

      Delete
  7. என்னவோ கிறுக்கி இருக்கீங்க.....உங்க பதிவு நல்லாவே இல்லைங்க.....(ஹீஹீ இப்படி சொல்லித்தான் உங்களை பாராட்ட வேண்ட இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...செய்யுங்க..

      Delete
  8. வணக்கம்
    அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும்

      Delete
  9. சின்ன சின்ன பொய்கள் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்கத்தான் செய்கின்றன! சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி