Skip to main content

நாம் பெண்கள்..

பெண்ணாய் 


காலை சாப்பாட்டுடன், டிவி முன்னாடி உட்கார்ந்தால், சன் மியுசிக்லே சுட சுட சென்னைன்னு ப்ரோக்ராம் ஒன்னு ஓடிகிட்டு இருந்தது.

அதில் காம்பியர் பண்ற பையன் (Rio), கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த சந்தோஷம் கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி காணாம போகுதுன்னு ஒரு கேள்வியை எல்லார்கிட்டேயும் கேட்டார். அதில் ஆண்கள் 'வேலை, பொறுப்பு' என்றெல்லாம் பேசியது ஓகேதான்.

பெண்களிடம் கேட்டால், அவர்கள் சரியா என்ன பதில் சொல்லணும், ஆண்களைப் போலவே, 'நான் அப்போ சந்தோஷமா இருந்தேன், இப்போ அப்படி செய்ய முடியல, இப்படி செய்யமுடியல'ன்னு சொல்லியிருக்கணும், சரிதானே..

அதைவிட்டுட்டு, ஆண்கள் சொன்னதை போலவே, அவங்களுக்கு சம்பாதிக்கணும், மனைவியை பிள்ளை குட்டியை காப்பத்தனும்ன்னு டயலாக் பேசுறாங்க. பேசியது எல்லாம் பெரிய பொம்பளைங்க இல்ல.எல்லாம் சின்ன பிள்ளைங்கதான்.

இந்த காலத்து பெண் பிள்ளைகளே, தான் பெண் என்பதையும் பெண்ணாய் தனக்கு என்ன நேரிடுகிறது என்பதையும் மறந்துவிட்டு, ஆணின் பார்வையில் அந்த கேள்வியை அணுகியது, பெண்களாகிய நாம் இன்னும் எந்த மாதிரி மனநிலையில் இருக்கிறோம் என்பதை தெளிவாய் எடுத்துக் காட்டியது.

கொஞ்சம் மாறுங்க பெண்களே...

நாம் பெண்கள், எந்த ஒரு விஷயத்தையும் ஆணின் இடத்தில் நின்று யோசிப்பதை விட்டுட்டு, ஒரு பெண்ணாய் யோசிக்க தொடங்குவோம். ஒரே மாதிரி யோசிக்கனும்ன்னா, ஆணும் பெண்ணும் ஒரே உடல் கூறுடன் பிறந்திருக்கலாமே. வேறுபாடுகள் உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும், அதாவது, எல்லா விஷயங்களிலும், பெண்ணாய் தன்னைமுன்னிறுத்தி பார்க்கும் பக்குவம் பெறுவோம்.

எல்லாவற்றையும் பெண்ணாக அணுக கற்றுக் கொள்வோம்..


Comments

  1. உங்களின் (கோபமான) ஆதங்கம் சரி தான் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்..யோசித்தால் சரிதான்

      Delete
  2. ஆதங்கம் சரிதான் சகோதரி...

    ReplyDelete
  3. உண்மைதான்! பெண்கள் தங்களைப்பற்றி சிந்திக்காமல் பிறருக்காக( ஆண்கள்) சிந்திப்பதை கொஞ்சம் கைவிடலாம்!

    ReplyDelete
    Replies
    1. தானும் இப்பூமியில் ஒரு பிறவிதான் என்பதை உணர்ந்தால் போதும்

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி