Skip to main content

குருவாயூர் - யானை கொட்டாரம்...


குருவாயூர் என்றதும் கிருஷ்ணர் கோவிலும் அதன் பிரகாரம் சுற்றும் யானைகளும் நம் நினைவுக்கு வருவது வழக்கம். 




ஸ்ரீ கோவில் நடை சாத்தும் நேரம் விளக்கு ஏற்றி சாமியை யானை மீதேற்றி உலா வரும் நேரம் சீவெளி (Seeveli) ஆகும். 



கோவிலை சுற்றி மூன்று முறை நடைபெறும் இந்த சீவெளியின் சிறு ஒளிச்சித்திரம் இது :
(http://www.youtube.com/watch?v=OJQKA-_KtAY)

அன்று சாமி தரிசனம் முடித்து சீவெளி பார்க்க நின்றிருந்தேன். யானைகளின் அழகான தரிசனம், தன் மேல் அமர்பவர்களுக்கு கால் மற்றும் வால் சுருட்டி கொடுத்து தூக்கிவிடும் அதன் பழக்கம் எல்லாமே எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். கண்டிப்பாக ஆனக்கோட்டா (Anakkotta) செல்ல வேண்டும் என்கிற நினைவும் வந்தது.


நான் ஒவ்வொரு முறை குருவாயூர் சென்று வரும் போதும் அங்கு சென்று யானைகளைப் பார்க்காமல் திரும்புவதில்லை. 

குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான யானைகள் புன்னதூர்கோட்டாவில் உள்ள குறுநில மன்னரின் அரண்மனை தோட்டத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த இடம் குருவாயூரிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. வாகனம் நிறுத்தும் வசதி உள்ளது. 

பார்வை நேரம் : காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை (8 am to 5.30 pm)
கட்டணம் : 5 ரூபாய், கேமரா 25 ரூபாய் (Entry Fee : Rs 5/adult, Rs 25/camera)


இங்கு 66 யானைகள் உள்ளன. உணவு, குளித்தல் என எல்லாமே  இங்குதான். அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் யானைகளின் அருகில் மட்டும் நம்மை விடுவதில்லை. மற்றபடி அந்த தோட்டத்தின் உள்ளிருக்கும் சாலை வழியே நாம் நடந்து சென்று பார்க்கலாம். 




எந்த யானையும் சோம்பேறியாய் இருப்பதில்லை. எதையாவது அசை போட்டுக் கொண்டேயும் அசைந்துக் கொண்டும்தான் இருக்கிறது. அவற்றின் பெரிய தந்தங்கள் முனைகளில் உடைத்துவிடப்பட்டிருக்கின்றன.  








இங்கு 'நாலு கட்டு' என்னும் அரண்மனை வீடு நடுவில் ஆலோசனை கூடத்துடன் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. அது இப்போது பாகன்களின் பயிற்சி கூடமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்குள் வேட்டைக்காரன் சாமியும் உள்ளது.









வேட்டைக்காரன் சாமி 








Comments

  1. பலமுறை சென்றதுண்டு... அனைத்து படங்களும் அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  2. படங்களும், தகவல்களும்
    மிக அருமை..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேந்திரன்...

      Delete
  3. சிறப்பான படங்களும் செய்திக்கும் நன்றி

    ReplyDelete
  4. அருமையான தகவல் தொடரட்டும் உங்கள் ஊர் சுற்றும் வாலிபி(வாலிபன் ஆபோசிட் ) பணி நாங்களும் நிறைய விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்வோம் படங்களும் தொகுப்பும் மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜன். நான் போய் பார்த்து வந்தவைகளை மட்டுமே இங்கு பகிர்வேன்.

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி