Skip to main content

காரணிகளை சுமக்கும் இதயங்கள்...



சில இதயங்களின்
உள்ளே பூட்டப்படும் சில காரணங்கள்
இன்னதென்று இல்லாமல் நாளாய் அதற்குள்ளேயே வதைப்படும்
சொல்லமுடியா வாதனைக்கு பின்
அவை வடிக்காலற்றுப் போகும்...

நிரம்பி வழியும் நீரின் பொங்கும் பிரவாகமாய்
அவை அமையக்கூடும்...
யாரொருவர் அந்த பிரவாகத்தால் ஆட்கொள்ளப்படுகிறார்களோ
அவர்கள் காரணங்கள் ஏதுமின்றியே மரித்துப் போகக்கூடும்...

இதற்கும் சலனமற்று போயிருக்கும் அந்த இதயம்...
அதனுள் அந்த காரணிகளும் கூட அசையாதிருக்கும்...
அழுகலான இவ்வாறான இதயங்கள்
இரக்கமின்றி வதைத்துக் கொண்டேயிருக்கும் மற்றவற்றை...
ஒதுங்கல்கள் ஏதுமின்றி காட்டாறாய்  
ஒழுக்கமற்றுப் போயிருக்கும்....

மனக் கோளாறு என்று மருத்துவம் பட்டமிடும்  
மாற்று மருந்து கூட கிடைக்கப் பெறும்
இதற்கு முன்  மரித்துப் போன இதயங்களுக்கு
காரணிகளை மட்டுமே காரணமாக்கிவிட்டு
அந்த இதயம் புதிதாய் பிறந்திருக்கும்....


Comments

  1. அருமை.... வேதனைகள் (தானாகவே) வடிக்காலற்றுப் போகும் என்பதும் உண்மை...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி தனபாலன்...

      Delete
  2. வலிசுமந்து வந்த கவிதை வரிகள் மனத்தை உருக்கிச் சென்றவிதம்
    அருமை ! தொடர வாழ்த்துக்கள் தோழி .நாளை முத்துக்களின்
    அணிவக்குப்பு வலைச்சரத்தில் முடிந்தால் வாருங்கள் .மிக்க
    நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பார்க்கிறேன்...நன்றி...

      Delete
  3. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  4. ஆஹா..அருமை..அற்புதம்..வேறு என்ன சொல்ல...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி(????) ஜீவா...

      Delete
  5. வணக்கம் !
    இன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத்
    தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களை
    இங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
    http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html

    ReplyDelete
    Replies
    1. என் சின்ன தூறல்களையும் இணைத்து பெருமைபடுத்திவிட்டீர்கள்...நன்றி தோழி...

      Delete
  6. கவிதை அருமை... அருமை... :)
    உங்களின் வலைத்தளத்திற்கு நான் முதல் முறையாக வருகிறேன்..
    அன்புடன்: S. முகம்மது நவ்சின் கான்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நவ்சின் கான்...என் மற்ற கவிதைகளையும் படித்து பாருங்கள்...பிடிக்கும் என் நம்புகிறேன்...

      Delete
  7. தொடர்பதிவு :

    http://nigalkalam.blogspot.in/2013/07/blog-post_29.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. உங்களை பாராட்டியே ஆகவேண்டும் தனபாலன்...முதலில் எல்லாவற்றையும் படித்து பார்க்க ஒரு பொறுமை வேண்டும். பிறகு பாராட்ட மனது வேண்டும்...உங்களின் இந்த தொகுப்பில் என்னுடைய வலைப்பூவையும் சேர்த்ததற்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி