Skip to main content

என் வெண்புறாவே...



இந்த வசிப்பிடம் உறுதி உனக்கு
இவ்விடம் எனக்கு நிரந்தரமில்லை
நான் புலம்பெயரும் நாள் நெருங்குகிறது...
இத்தனை நாட்களாய் என் சிநேகிதத்தில்
நீயும் உன் துணையும்...


என் வீட்டின் உத்திரம் உனக்கு என்றபோது
நான் உன்னை எதிர்த்ததில்லை...



என் கவிதைகளை உன்னை சுற்றி பிணைத்து 
உன்னை தமிழ் சுவாசிக்க வைத்திருக்கிறேன்...  

நான் சொல்லி சென்ற கதைகளை
கம்பியில் அமர்ந்து பொறுமையாய்
கழுத்து சாய்த்து கேட்டிருக்கிறாய்...
உறவின் உன்னதத்தை
அறிந்தவன் நீ...
  

காலை வேளைகளில்
நீ படபடத்து பறப்பதை
பார்த்திருக்கிறேன்...
மாலை வேளைகளில்    
உன் ஊடலையும் காதலையும்  
ரசித்திருக்கிறேன்...

இருவரும் ஜோடியாய் சுற்றிவிட்டு வந்து
இருட்டில் அடங்குவதும்
சில நேரங்களில் சத்தத்துடன் சண்டையிட்டு
ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருப்பதும்   
தெரியும் எனக்கு....



முற்றத்து விளக்குமாரின் குச்சிகளை உருவி
உன் கூட்டின் கூரையாக்கி இருக்கிறாய்...




உன் குஞ்சுகளின் கரைச்சல்
கேட்கும்வரை இங்கிருப்பேனோ
இடம் பெயர்ந்திருப்பேனோ தெரியவில்லை...



விலாசம் விட்டு செல்கிறேன்
கூட்டி வந்து காண்பித்துச் செல்...

~ இப்படிக்கு 
உன்னுடன் நட்பு வைத்திருப்பதால்
கேள்விக்குறிகளாய் பார்வைகளை சந்திக்கும் 
அப்பாவி அகிலா...



படங்கள் அனைத்துமே என் வீட்டில் என் இனிய புறாக்களுடன் எடுத்ததுதான்......


Comments

  1. மிகவும் அழகான உணர்வுகள் கவிதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன

    பாராட்டுக்கள். மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களுக்கு...

      Delete
  2. இனிய வரிகள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ரமணி ஐயா ...

      Delete
  4. அழகு... அருமை...

    வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

    வாழ்த்துக்கள்...

    ஆமாம்... படங்கள் எங்கே எடுத்தீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. இது உண்மை கதை தனபாலன்...என் வீட்டு புறாதான் இது. என் மொபைல்ளில் எடுத்ததுதான்...

      Delete
  5. நாட்கள் நகர தொடங்கிவிட்டன ஆனாலும் உங்கள் மனம் எண்ணிப் பார்க்கின்றது எத்தனை எத்தனை கவிதைகளுக்கு கருவாய் அமைந்த இணைகள்(நீங்களும் புறாக்களும்) பிரிந்து வேறு இடம் புலம் பெயர்ந்தாலும் அங்கேயும் மொட்டை மாடியில் உன்னைதேடும் நினைவுகள் புறாவே நீயும் ஒரு நாள் பிரிவினை சந்திக்கும் நிலை வந்தால் அப்போது பிரிவின் துயரத்தில் உணர்வுகளை மீட்டி நான் வரைந்த பிரிவின் கவிதை அபொழுது உனக்கு புரியும்
    சாதாரண நிகழ்வு யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை..ஆனால் பிரிவு எனபது நெஞ்சினை சுடுகிறது. கவிதையின் முன் பகுதி வரிகள் இயல்பான நிகழ்வாக இருந்தாலும் பின் பகுதி உணர்வு பூர்வமானது அருமையான படைப்பு வணக்கங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. புரிந்த பிறகு பிரிதல் என்பது சற்று கடினமான விஷயம்தான்...நன்றி ராஜன்...

      Delete
  6. விலாசம் விட்டு செல்கிறேன்
    கூட்டி வந்து காண்பித்துச் செல்.....//

    அருமை படித்தேன் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி பூவிழி....

      Delete
  7. அழகான ஆழமான உணர்வை
    வெளிப்படுதின விதம் அருமை... அகிலா மேடம்.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி