Skip to main content

நீயில்லாத...





விடியலின் முன்னமே
தூக்கம் கலைத்தது கனவொன்று
மணக்கோலத்தில் உன்னை காட்டி...
நீ இல்லாத திருமண நாளை நினைவுபடுத்தி...  

உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள்  
உன் தோள் சாய்ந்து அமர்ந்திருந்த மாடிப்படிகள்
குழந்தைகளை உன் மேல் சாய்த்து நீ அமரும் ஊஞ்சல்
சட்டைமாட்டியில் உன் கட்டம் போட்ட சட்டை
அதன் பையில் அமர்ந்திருக்கும் ஊதா நிற பேனா
விஷ்ணு சக்கரமாய் உன் விரலையே சுற்றிக் கொண்டிருக்கும் வண்டி சாவி
எல்லாம் என் கண் முன்னே
உன்னை ஞாபகபடுத்திக் கொண்டு....
இவற்றுடன் நானும் இவ்வுலகில்
ஒரு அஃறிணையாய்...  


Comments

  1. காகித கப்பலில் மழை நீரில் விட்ட படகுகளின் பால்ய வயது நினைவுகள் நிழல்காலங்களின் மாற்றங்களில் மூழ்கி போனாலும் தீடிரென்று வரும் அந்த எண்ண அலைகள் எவுளவு வலிமையானது என்று இந்த பாடல் வரிகள் உணர்த்துகின்றன வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. புகைப்படத்துடனான வலி புரிகிறது அகிலா...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...கணவனை இழந்து வாழ்வதன் வலி அது...

      Delete
  3. ஏங்க இப்படி மனதை கனக்க வைக்கிறீங்க...?

    ReplyDelete
    Replies
    1. இன்று என் தம்பியின் திருமண நாள்...அவன் இப்போ உயிருடன் இல்லை. தம்பி மனைவி கொஞ்சம் சங்கடப்பட்டாள்...அதில் பிறந்ததுதான் இந்த கவிதை...

      Delete
    2. இதை சொல்லாமல் இருந்திருக்கலாம். இன்னும் கனக்கிறது மனது.

      Delete
    3. வாழ்வின் தடங்கள் வகுக்கப்பட்டவை...நான் அதில் நடந்து செல்கிறோம்...அவ்வளவே...

      Delete
  4. காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நினைவலைகள் ....

    ReplyDelete
    Replies
    1. அதன் பாதிப்புக்கள்...

      Delete
  5. புகைப்படமே போதும்......

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி