Skip to main content

மாதவிடாய்......

ஆவணப்படம்...



கடந்த ஞாயிறு மாலை என் தோழி கீதா இளங்கோவன் அவர்களின் 'மாதவிடாய்' என்னும் ஆவணப்படம் கோவையில் திரையிடப்பட்டது. அன்று அது சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. 


பெண்பிள்ளைகளின் மாதவிடாய் சிரமங்கள் குறித்த குறும்படம் இது. மிகவும் அருமையாய் எடுக்கப்பட்ட ஒரு படம். 

இந்த படத்தை அவரும் அவரின் கணவரும் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள். இது ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் ஆண், பெண் இருபாலாருமே பார்க்கவேண்டிய படம்.. குறிப்பாக பெண்களும் அவர்களின் பெண்குழந்தைகளும் பார்க்க வேண்டியது அவசியம். 

மாதவிடாய் என்பது என்ன, கிராமப்புறங்களில் அதை எவ்வாறு நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி அந்த பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள், அந்த சமயங்களில் சுகாதாரமாய் இருக்க செய்யவேண்டியவை என்று நிறைய விஷயங்களை இந்த ஆவணப்படம் உள் அடக்கியிருக்கிறது. 

இத்திரைப்படம் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மாதவிடாய் குறித்த மக்களின் நடைமுறை பிரச்சினையை எடுத்துரைக்கிறது. அங்கு பழக்கத்தில் உள்ள முட்டு வீடு என்னும் ஒரு விஷயமும் கவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த குறும் படத்தில் மாதவிடாய் காலங்களில் பள்ளிகளில் பொது இடங்களில் பெண்களின் கழிப்பறை வசதிகளை பற்றியும் குறிப்பிட்டு சொல்லியுள்ளார்கள். ஆரோக்கியம் என்பது எவ்வளவு முக்கியமானது இந்த மாதிரி சமயங்களில் என்றும் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. 

கோவில் மற்றும் வீடுகளில் நடக்கும் விசேஷ நாட்களில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாதவிடாயை தள்ளி போடும் மாத்திரைகளையும் சாப்பிடுகிறார்கள்.. அது பெண்களின் ஹார்மோன்களில் மாற்றங்களையும் மெனோபாஸ் காலத்தில் அவளின் உடல்நிலையை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

யாராவது இந்த படத்தை உங்கள் ஊரில் திரையிட விரும்பினால் கிட்டத்தட்ட ஐம்பது பேருக்காவது இதை திரையிட்டு காட்டவேண்டும் என்பது இந்த ஆவண படம் எடுத்த கீதா அவர்களின் நியாயமான விருப்பம்.

ஏனென்றால், தனியாக வீடுகளில் அமர்ந்து பார்ப்பவர்கள் மௌனமாய் பார்த்துவிட்டு அதை பற்றிய கலந்துரையாடல் எதுவுமின்றி எழுந்து போய்விடுவார்கள். பொதுவாய் பார்க்கும் போது கலந்துரையாடல் நடைபெற்று இன்னும் ஒரு ஐம்பது பேருக்கு போய் சேரும் இந்த நல்ல விஷயம். 



இது தொடர்பான விவரம் மற்றும் டிவிடி (DVD) கிடைக்க கீதா இளங்கோவனை இந்த மெயில் ஐடி geetaiis@gmail.com யில் அணுகலாம்.

கலந்துரையாடல் 














வரவேற்போம் இது போன்ற நல்ல விஷயங்களை.... 


Comments

  1. இந்த ஆவணப் படத்தை நானும் காணவேண்டும் என்ற
    ஆவலில் இருந்தேன்...மின்னஞ்சல் முகவரி கொடுத்து
    அதற்கு வழிவகுத்தமைக்கு நன்றிகள் பல சகோதரி........

    ReplyDelete
  2. எனக்கும் இதைபார்த்த பின்பு அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுமென நினைக்கிறேன் குறிப்பாக எனது குடும்ப நபர்களும் காணவேண்டும்

    ReplyDelete
  3. வரவேற்போம்... அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியதும் கூட... நன்றி சகோதரி...

    ReplyDelete
  4. வரவேற்போம் இது போன்ற நல்ல விஷயங்களை.... //

    உண்மை, இது போனற நல்ல விஷயங்கள் வரவேற்க வேண்டும்.
    நன்றி.

    ReplyDelete
  5. நன்றி தோழி.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி