Skip to main content

கவிதையின் மறுபக்கம்....





உதறவும் முடியாமல் 
உள்வாங்கவும் முடியாமல் 
ஆரம்பத்தின் முதற்சுழியாய் 
முடிவில்லா சுழலாய் 
காலை சுற்றுகிறதே இந்த காதல்....

உச்சந்தலை முதல் 
உள்ளங்கால் வரை 
பாலாங்குழியில் மாறி மாறி 
உருளும் குந்துமணியாய் 
ஓடிக்கொண்டிருக்கிறதே....

கண் மூடி உலகம் மறப்பேனா....
கண்திறந்து உன்னை பார்ப்பேனா....
என் செய்வேன்.....

'அம்மா.....காய் வேணுமா?'...
ம்ம்ம்...
சமையலை பார்ப்போம்....
மீதியை மாலை முடிப்போம்....
பத்திரிகைக்கு இரவு மெயில் பண்ணலாம்.... 


Comments

  1. உதறவும் முடியாமல் உள்வாங்கவும் முடியாமல் இருப்பது காதல் அல்ல உறுத்தல்,உறுத்தல்களாக தோன்றி விட்டாலே கடலாய் தோன்றியது துழி வெள்ளமாக போய் விட்டநிலையில் கவிதையின் காதல் நினைவுகள் சுபலமாக காய்கறி காரனாலும் கூட கலைக்க முடிகிறது என்றால் இது உதற பட்ட உள்வாங்க படாத காதல் ஆகத்தான் இருக்கும்.இல்லையா கவிதையின் நாயகியின் நிலைப்பாடு அருமையாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ம்ம்ம் ..அருமைங்க

    ReplyDelete
  3. எப்படி சகோ இப்பூடீ... ம்

    ReplyDelete
    Replies
    1. என்னங்க பண்றது....நிஜமா இப்படிதான் நடக்குது....

      Delete
  4. கவிதை மிகவும் அருமையாக யதார்த்தமாக இருக்கிறது

    //'அம்மா.....காய் வேணுமா?'...
    சமையலை பார்ப்போம்....
    மீதியை மாலை முடிப்போம்....
    பத்திரிகைக்கு இரவு மெயில் பண்ணலாம்..//

    அந்த காய்கறி காரன் உங்கள் கற்பனை வளத்தை மட்டும் இல்லாது எங்களுடைய கவிதை சுவ்ராசியமாக படித்து கொண்டிருக்கும் தன்மைக்கும் தடையாகிபோனது தான் உண்மை தொடருங்கள் அதன் அடுத்த பாகம்தனை எதிர்பார்த்து இருக்கிறோம் கவிதைகளில் உணர்வு பூர்வமான கவிதைகள் என்றுமே மனதினை தொடுபவை ஆனால் அதை வடிவமைக்கும் கவிஞனரின் கைவண்ணம் தான் அதற்கு முழுமையை தரும் அருமையான கவிதை வாழ்த்துக்கள். ....

    ReplyDelete
  5. கனவுகளுக்கும் நிஜங்களுக்குமாக ஊசலாடுவதுதான் பெண்களின் இன்றுவரையிலுமான நிலையாயிருக்கிறது.. இது மாறும்.
    // சமையலை பார்ப்போம்,
    மீதியை மாலை முடிப்போம்,
    பத்திரிகைக்கு இரவு மெயில் பண்ணலாம் // கடைசி வரிகள் மனதை செருகி நிற்கின்றன. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தானே நிஜத்திற்கும் கற்பனைக்கும் நடுவில் வாழ்கிறோம்....நன்றி தியாகு....

      Delete
  6. கற்பனையில் மூழ்கும்போதே, யதார்த்தத்தையும் நினைத்துப் பார்த்தது நன்றாக இருக்கிறது, அகிலா!
    காலைச் சுற்றும் காதல், பல்லாங்குழி (இதைதான் பாலாங்குழி என்கிறீர்களா?) யில் மாறி மாறி உருளும் குந்துமணியாய் ஓடினாலும், காய்கறிகாரன் தான் நிஜம்!

    அருமையான கவிதை!
    பாராட்டுக்கள் அகிலா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். குந்துமணியை பொய்த்து காய்கறிகாரனை நிஜபடுத்துவதுதானே வாழ்க்கை....நன்றி மேம்...

      Delete
  7. சிறுகதை போல அழகிய கவிதை ...அருமை

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி நண்பா...

      Delete
  8. காதல் ஒரு சுகமான வலி

    ReplyDelete
    Replies
    1. காதல் எப்போவுமே சுகமானதுதான்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி