Skip to main content

முதல் கவிதை சிதறல்....





என் கவிதையை இதுவரை
என்னுடனே அனுபவித்து வந்த
என் நண்பர்களுக்கு
ஒரு மகிழ்ச்சியான செய்தி....

முதலுமாய் முத்துமாய்
என் கவிதை குழந்தை
சின்ன சின்ன சிதறல்களாகவே
உங்களின் கைகளுக்கு...
இன்று முதல்
சென்னையின் புத்தக கண்காட்சியில் 
டிஸ்கவரி புக் பேலசில் (அரங்கு எண் 43 & 44)
கிடைக்கும் என்பதை
மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்...





Comments

  1. முதல் புத்தக வெளீயீட்டுக்கும்
    வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவும்
    எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி அவர்களே...

      Delete

  2. வணக்கம்!

    பின்னப் பின்னக் கலையின்பம்
    பெருகிப் பாயும் நிலைபோலச்
    சின்ன சின்ன சிதறல்கள்
    சோ்ந்து மின்னும் நுாலாக!
    எண்ண எண்ணச் சுவைகூடும்!
    எழுத எழுத எழுத்தொளிரும்!
    வண்ண தமிழின் திருவருளால்
    வாழ்க! வாழ்க! பல்லாண்டே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி கவிஞரே....

      Delete
  3. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உங்களைப்போலவே நானும் சிறுக் குழந்தைபோல சந்தோசமாய் இருக்கிறேன். ஆம் எனது புத்தகமும் முதன் முதலில் மணிமேகலை பிரசுரத்தின் வாயிலாக பதிமூன்றாம் தேதி மாலை நான்கு மணிக்கு வெளியிட உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி....நான் கண்காட்சியில் பார்க்கிறேன்...

      Delete
  5. அகிலா உங்கள் புத்தகம் நல்ல சிறப்புகளை அடையவும் உங்கள் வெளியீடுகள் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி எழில் ..

      Delete
  6. அருமை. பாராட்டுக்கள்.

    தொடர்ந்து எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களின் வாழ்த்துக்கு...

      Delete
  7. மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்...

      Delete
  8. உங்கள் கவிதை தொகுப்புகள் மேலும் பல பாகங்கள் பலதலைப்புகள் பல வடிவங்களில் வெளியிடவேண்டும் ...நாங்கள் படித்து மகிழ்ந்திட வேண்டும் வாழ்த்துக்கள் ..உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜன்...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி