Skip to main content

பேப்பர் பையன்...




கிறிஸ்துமஸுக்கு முந்திய நாள்
'அக்கா' என்று தலைசொறிந்து சிரித்தான்...
உனக்கும் சம்பந்தம் இல்லை
எனக்கும் உடன்பாடு இல்லை
எதற்கு அதற்கு காசு என்றேன்
என்னை முறைத்துவிட்டு போய்விட்டான்....

நேற்று வந்தபோது ஒரு பார்வை
பார்த்தான் என்னை
சிரித்து வைக்கவா வேண்டாமா என்று...
'என்ன' என்றேன்...
'ஒண்ணுமில்லைக்கா' என்றான்
'ம்ம்ம்...'என்று சொல்லி சைக்கிள் நகர்த்த தயாரானான்...

அவனை நிறுத்தி
அவன் கையில் ஐம்பது ரூபாயை அழுத்திய போது
அழகாய் சிரித்தான்...
அவன் பிறந்த தினம் கேட்டபோது
புரிந்து சிரித்தான்...
சொல்லிவிட்டு போனான்...


Comments

  1. அவனிடம் இல்லாததை கொடுக்கும் போதுதான் சந்தோஷமா தெரியும். தீபாவளி, பொங்கல் சமயங்களில் ஆபிஸ் பாய், துப்புறவு செய்பவர்களுக்கு நான் பணம் கொடுப்பேன்.. அப்ப அவங்க முகம் புதுசா மலரும்..! என்ன பண்ணுவது ஏழையிலிருந்து பணக்காரன் வரை பணம்தான் சந்தோஷம் என்று நிறைய பேர் போய்கிட்டிருக்கோம்! ஏழைக்கு நூறு ரூபா காணும் போது நமக்கு லட்சங்களில்.. இப்படி அளவுதான் வித்தியாச படுது. நல்லதொரு அனுபவ கவிதை! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அவனை பொறுத்தவரை அது பெரிதுதான்...நன்றி உஷா...

      Delete
    2. ///நமக்கு லட்சங்களில்//
      உஷா மேடம் நீங்க பெரிய ஆளுதான் போலிருக்கே?
      //ஏழைக்கு நூறு ரூபா//

      நூறு ரூபா எனக்கு வந்து சேரவில்லையே????

      Delete
  2. அனுபவத்தை கவிதையாக சொன்ன விதம் அழகு

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்தரசு...

      Delete
  3. எவ்வளவுதான் வேலைப்பழு அதிகமாக இருந்தாலும் நாம் செய்யும் சின்ன சின்ன செயல்கள் பலர் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்..
    சின்னதொரு புன்முறுவல் செய்வதாயினும் சரியே

    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆத்மா...உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்....

      Delete
  4. உஷாவின் கருத்தை வழிமொழிகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துக்கள் எழில்....

      Delete

  5. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிஞரே....

      Delete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா....என் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி