Skip to main content

அனாதை என்கிற அடையாளம்

அம்மா தந்தது....



வேர்கள் ஆழமாய் இருந்தும்
கிளைகள் பல இருந்தும்
நீ செய்த சிறு காதல் கிறுக்கலில்
நீங்கள் இருவரும் பகிர்ந்த வாழ்க்கையை
எனக்கு கொடுக்காமல்
உன் பெயரும் சொல்லாமல்
தகப்பன் இவனேன்றும் சுட்டாமல்
தெருவின் விளிம்பில்
பெண் பிள்ளையாயிற்றே என்கிற
சிறு ஆதங்கம் கூட இல்லாமல்
என்னை விட்டுச் சென்றாயே
அனாதை என்கிற அடையாளத்துடன்....

உறங்கினால் எழுப்பவும்
உணவை வாய் நிறைய கொடுக்கவும்
விதம் விதமாய் உடை உடுத்தி 
என்னை அழகு பார்க்கவும் 


என் முகசாயலை 
உறவுகளில் பொருத்திப் பார்க்கவும் 
எனக்கான பொருட்களை
எனக்கேயென்று சேர்த்து வைக்கவும் 
  
உன் சிறு அதட்டலில்
என்னை பெண்ணென்று  
எனக்கே புரிய வைக்கவும் 
உன்னை தேடுகிறேன் 

என்றாவது 
அனாதை என்கிற சொல்லை  
நீ கடக்க நேரிட்டால் 

என்னை பற்றிய நினைப்பு
உன்னை கடக்குமென்ற 
எதிர்பார்ப்பில்......

Comments

  1. சாட்டை வீச்சாய் கவிதை. அருமை

    ReplyDelete
  2. அந்த குழந்தைக்கு தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். அவளின் புகைப்படத்தை பார்த்த பின்புதான் இந்த கவிதை எழுதினேன். அவள் கண்களில் இருக்கிற ஏக்கம்.... நன்றி பாலகணேஷ்.....

    ReplyDelete
  3. அன்புள்ள அகிலா,
    உங்களைப் பற்றி இன்றைய வலைச்சரம் இதழில் சொல்லியிருக்கிறேன். வருகை தாருங்கள் ப்ளீஸ்!

    blogintamil.blogspot.com

    ReplyDelete
    Replies


    1. இணைப்பை அனுப்பி இருக்கிறேன்.
      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html

      வருகை தருக!

      Delete
    2. பார்த்தேன் மேம்....என் நன்றிகள் உங்களுக்கு...
      எத்தனை அறிமுகங்கள்...
      நிறைய தளங்கள்...
      நிறைய வாசிப்புகள்...
      உங்களின் வட்டத்திற்குள்
      என்னையும் என் அடுப்படியையும்
      என் கவிதைகளையும் இருத்தி
      என்னையும் பெருமைபடுத்திவிட்டீர்கள்....

      Delete
  4. உங்களுடைய சுயநலம் பற்றிய கவிதை தொகுப்பு "அடுத்தவர்களின் வட்டத்துக்குள் " ஒரு கருத்தை ஆழமாக சொன்னது போல ...
    இந்த சமுக அவலத்தை நாங்கள் எல்லோரும் தான் பார்க்கிறோம் ..ஆனால் எங்கள் சுயநலனில் மாத்திரம் அக்கறை கொண்டு ..இந்த பொதுநலத்தை ...
    முக்கியத்துவம் கொடுக்காமல் ..மனது இல்லா மாந்தர்களாய் கண்டும் காணமல் போய் விடுகிறோம் ..
    ஆனால் நீங்கள் அந்த சமுக அவலத்தை சாட்டை(கவிதை ) கொண்டு அடித்து இருக்கிறீர்கள் ...
    இது போல் நிறைய விஷயங்கள் ..பகிர்ந்து கொள்ளுங்கள் ..சமுதாய விழிபுணர்வுக்கு வழிகோலுங்கள் ...
    நன்றி..நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் ....
    அதை விட அந்த சின்ன பெண்ணின் கண்களில் தெரிகிற வேதனைகளை பாருங்கள் ...கடவுள் இருந்தால் அவனே தாயும் தந்தையுமானவனாக இருந்து எல்ல ஆசைகளையும் நிரைவேற்றி..கொடுக்க வேண்டும் ..அதன் முதல் படி தான் உங்களை போன்றவர்களின் ....ஆதரவுகள் ...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வேண்டுதல் அந்த குழந்தைக்கு போய் சேரும் என்கிற நம்பிக்கையில் உங்களின் வருகைக்கு நன்றி ராஜன்...

      Delete
  5. வரிகள் நெகிழ வைத்தது...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… திரு. ரஞ்ஜனி நாராயணன் அம்மா அவர்களின் அறிமுகம்... Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    நேரம் கிடைத்தால் என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன்....

      Delete
  6. அனாதை என்கிற அடையாளம்
    அம்மா தந்தது....

    அம்மா என்றால் இந்த அடையாளம் தந்திருக்ககூடாது...

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி குழந்தைகளை பார்க்கும் போது அம்மா என்கிற வார்த்தை பொய்யாய் போய்விடுகிறது....

      Delete
  7. மிகவும் அருமையாக உள்ளது..

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி