Skip to main content

நீ என்




நீ என்...

நிலவென நினைத்து எட்டிப் பார்த்தேன்
தென்றலென நினைத்து தொட்டு பார்த்தேன்
பூவென்று நினைத்து பறித்து பார்த்தேன்
சங்கீதமென நினைத்து பாடி பார்த்தேன்
பசியென நினைத்து சாப்பிட்டு பார்த்தேன்
மௌனமென நினைத்து பேசிப் பார்த்தேன்
சந்தொஷமென நினைத்து சிரித்து பார்த்தேன்
ஒவ்வொன்றாக நினைத்தும் ஒன்றுக்குள்ளும் இல்லை நீ
உன்னிடமே கேட்டேன்
காதலென நினைத்து பார்
கச்சிதமாய் பொருந்துவேன் என்றாய்

காதலாய் நினைத்து பார்த்தேன்
சில்லென்ற காற்றை
உன் சிலிர்க்கும் கூந்தலை
அதில் சிரிக்கும் ஒற்றை ரோஜாவை
சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
குடையாய் நனையும் மரங்களை
நெடுமரமாய் நிற்கும் ஒளிவிளக்குகளை
அவசரமாய் கரையை தொடும் அலைகளை
நிலவை பார்த்து கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
உறக்கம் கலையாதிருக்கும் படகுகளை
கால்களை உள்ளிழுக்கும் மணற்பரப்பை
காதலுடன் நினைத்து பார்த்தேன்
உன்னைத்தவிர அணைத்தையும் காதலாய் பார்த்தேன்
உன்னிடம் காதல் வரவில்லை கண்ணே....


Comments

  1. ம்ம் வித்தியாசம் :)

    //
    சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
    குடையாய் நனையும் மரங்களை
    //

    நல்ல சிந்தனை!

    ReplyDelete
  2. அகிலா வரிகளில் நெளியும் வார்த்தைகளின் தேர்வு பிரமிக்க வைக்கிறது அருமை பாராட்டுக்கள்


    "சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
    குடையாய் நனையும் மரங்களை
    நெடுமரமாய் நிற்கும் ஒளிவிளக்குகளை

    நிலவை பார்த்து கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
    உறக்கம் கலையாதிருக்கும் படகுகளை
    கால்களை உள்ளிழுக்கும் மணற்பரப்பை"

    ரசித்தேன் இந்த வரிகளை ......

    காதல் வந்தாலே அனைத்தும் வந்துவிடும் அப்படித்தான தோழி ..........

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...உண்மைதான் சரளா...
      உணர்ந்துவிடலாம் அனைத்தையும்....

      Delete
  3. ரசனைக்குரிய விஷயங்கள் அனைத்தும் காதல் என்று வந்துவிட்டால் ஒத்துப் போவது விந்தையான விஷயம்தான். அருமையான, ரசிக்க வைத்த கவிதைங்க, சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. காதலியை இரண்டாம்பட்சமாக்கும் இயற்கை ரசிப்புதானே...
      நன்றி பாலகணேஷ்...

      Delete
  4. வித்தியாசமான வரிகள்... பாராட்டுக்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...வலைசரத்தை பார்த்துவிட்டேன்...

      Delete
  5. Nalvaalthu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  6. வார்த்தகளை வெகு கச்சிதமாகக் கோர்த்து கவிதை வரையும் உங்கள் பாணி மிகவும் நன்றாக இருக்கிறது, அகிலா.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நன்றி வேதா...

    ReplyDelete
  8. உங்களின் வருகைக்கு நன்றி ரஞ்சனி மேம்....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி